Skip to main content

புதிர்

எப்போதுமே பிறகு சொல்கிறேன்

என்ற தலைப்புச்செய்தியின்

புதிர்த்தன்மையோடு

புறப்பட்டுவிடுகிறார்

ஊகித்தறியா ஆர்வத்தில்

கோடிட்ட இடங்களை

நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது

அவரின் பிறகு சொல்கிறேன்

ஒற்றைசெய்தியைத்தாண்டி

என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன

புதிர்கள்.



கோ.புண்ணியவான். மலேசியா

Ko.punniavan@gmail.com

Comments