Skip to main content

விடுபட்ட நினைவுகள்-எஸ்ராவுடனான சந்திப்பில்


1. கோலாலம்பூரின் மஸ்ஜிட் இந்தியா பேரங்காடி ஒன்றில் இரண்டுமணி நேரத்துக்கு மேல் அலைந்து கொண்டிருந்தபோது களைப்பாய் இருந்தால் சொல்லுங்கள் ஓய்வெடுக்காலாம் என்றார். "நானும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்தான். இன்றைக்கும் மலை ஏறும் பயிற்சி செய்கிறேன்," என்றேன். பின்னர் தொடர்கிறது எங்கள் பேரங்காடித் தேடல். பல பொருட்களின் விலை இந்தியாவை விட இங்கே அதிகம் என்றார். சில பொருட்களின் விலை வேறுபாட்டை அவரால் சொல்ல முடிகிறது.
 ஒரு காணொலி நாடா விற்கும் கடையில் நின்று காணொலி நாடாக்களை அலசினார். பின்னர் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அது யாஸ்மின் அஹமட்டின் செப்பிட் திரைப் படம். (யாஸ்மின் தன்னுடைய ஐம்பத்தோராவது வயதில் ஒருதிரைப்படம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணமுற்றார்). மாலேசியப் படங்களில் யாஸ்மினின் படங்கள் வித்தியாசமானவை என்றார். உலகத்திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆரவம் உள்ளவர் எஸ்ரா. நான் கடைசியாகப் படித்து முடித்த 'காற்றில் யாரோ நடக்கிறார்கள்" நூலில் உலகத்திரைப்படங்கள் குறித்து மிக விரிவாக பதிவு செய்துள்ளார். படிக்க வேண்டிய நூல். ஒரு நண்பர் யாசின் பற்றி என்னிடம் கூறியுள்ளார். ஆனால் அவருக்குச் சொன்னது எஸ்ராவாக இருக்கலாம். யாசின் மலேசிய எழுத்தாளர்களுக்கு அவ்வளவு தெரிந்தவர் அல்லர்.
காணொலியை பத்தொன்பது ரிங்கிட் கொடுத்து வாங்கிவிட்டு சொன்னார், " நான் இப்படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். என் சேகரிப்புக்காக வாங்குகிறேன் என்றார்.

2. சிறுகதைப் பட்டறையின் இரண்டாம் நாள் எஸ்ராவில் முதல் பயிலரங்கு கட்டுரை சமர்பிப்ப்தாக இருந்தது. காலை ஏழரைக்கெல்லாம் எல்லாரும் வந்துவிட்டார்கள் எஸ்ராவைக் காணவில்லை. அவரை அடுத்துதான் முனைவர் சபாபதி பேசுவதாக இருந்தது. முதல் நாள் கலைப்பில் அவர் அசதியில் தூங்குகிறாரோ என்று எண்ணி அவர் அறைக்குப் போனேன். அப்போது அவர் குளிக்க தயாராகிக்கொண்டிருந்தார். "உங்களுடைய பயிலரங்கு நேரம் என்றேன்"
" நான் வந்துவிடுகிறேன்" என்றார். இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் சுமார் இரண்டரை மணி நேர வித்தியாசம் உண்டு. இரண்டொரு நாட்களுக்குப் பிறகுதான் மலேசிய நேரத்துக்கு இயல்பாக்கிக்கொள்ள முடியும். என்வேதான் எஸ்ரா சுதாரித்துக்கொள்ள சிரமப் பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இன்னும் எப்படியும் 15 நிமிடமாவது ஆகும் அவர் தயாராக என்று உத்தேசித்து "நீங்கள் சவகாசமாய் வாருங்கள், நான் சபாபதியை பேசச் சொல்கிறேன்," என்றேன்.
சரி என்றவுடம் கருத்தரங்கு மண்டபத்துக்கு வந்து சபாபதியை ஆரம்பிக்கச் சொல்லி விட்டேன். சபாபதி ஆரம்பிப்பதற்குள் அவர் மண்டபத்துக்குள் வந்துவிட்டார். சபாபதி பேசுவதற்கான பவர் பொய்ண்ட் தாயாராக இருந்ததால் எஸ்ரா காத்திருக்க வேண்டியதாயிற்று. இருந்தாலும் எஸ்ரா குறித்த நேரத்தில் மண்டபத்தில் இருந்தது போற்றத்தக்கதாக இருந்தது.

3. என்னுடைய பயிலரங்கு  கட்டுரையின் தலைப்பு ' ஒரு நல்ல சிறுகதையின் தொடக்கம் எப்படி இருக்கவேண்டும்? என்பதாகும். அவர் மூன்றாம் நாள் பேச்சில் கதையின் தொடக்கம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். நான் கொஞ்சம்தான் தொடுவார் பின்னர் மற்றதைப் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதலுக்கு மோசம் வந்துவிடும் நிலை அவரின் பேச்சில் தொடர்ந்தது. கொஞ்சமும் தாமதிக்காமல் அது குறித்து ஒரு துண்டுக் கடிதம் எழிதி அனுப்பிவிட்டேன். சிறுகதையின் தொடக்கம் பற்றிப் பேசுவதை உடனே நிறுத்திக்கொண்டு வேறு விசயத்துக்கு தாவி விட்டார்.
அவரின் பேச்சு முடிந்து "நான் உங்கள் தலைப்பை கவனிக்கவே இல்லை. நல்ல காலம் வந்து குறுக்கிட்டீர்கள்." என்றார். அவர் தொடர்ந்து பேசக்கூடிய தாளைக் காட்டினார். நான் பேசவிருந்த அனைத்தும் அதில் இருந்தது. அவர் பேச்சின் அலையில் என் சரக்கு கொஞ்சம் அடித்துக்கொண்டு போய்விட்டதுதான். இருந்தாலும் மற்றவருக்கு இடம் கொடுக்கும் பண்பு என் நெஞ்சில் நீண்ட நாட்களுக்கு  மறையாது




Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின