Skip to main content

எப்போது தருவாய் வரம்?







எப்போது வரம் தருவாய்?


வெளியே இருந்துகொண்டு
ஒரு அழகிய வீட்டைப் பார்ப்பது போலவே
உன்னைக் பார்க்கத் துவங்கினேன்
அப்போது அந்நியம்தான்
அந்த வீட்டுக்கும் எனக்குமான
தொடர்பு என்பது
என் கண்களுக்கும்
வசீகர வீட்டுக்குமான
இடைவெளி மட்டுமே

நாம்  நட்பாகிப் போன
 தொடக்க நாட்களில்
ஒரு இடைவெளி எப்போதுமே
நம் உள்முகத்தை
ஒளித்து விளையாடியது

வார்த்தைகளுக்கு ஒப்பனை செய்து
களைத்த போதெல்லாம்
எதுதான் நிஜமென
மௌனமாய் அழுதோம்

நாம் சந்திக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
ஏதேதோ பேசுகிறோம்
காதலை தணிக்கை செய்துவிட்டு
தணிக்கை செய்ததுவும்
காதல்தானே என்று தெரியாமல்

நாம்
பேசிக்கொண்டிருக்கும்போது
தொடர்பற்றிருந்தோம்
பேசாதபோதுதான்
தொடர்பில் இருந்தோம்
நம் காதலை மென்றபடி

வானத்தில் திடீரெனெ
நட்சத்திரமொன்று
இருளைக் கிழித்தது போல
உன் ஒளி
என்னை இருளாக்கியது

வெளிச்சத்துக்காக
நான் வேண்டி நின்ற போது
இடைவெளி குறைத்து
என்னுள் மின்னல்
ஒன்றைச் பாய்ச்சினாய்
நட்சத்திர ஒளியால்
திணறடிக்கப்பட்டு  மீளாத போது
மின்னலாய்த் தாக்கி
என்னை ஊனமாக்கி விட்டிருக்கிறாய்

நான் மீண்டும் பழைய
நானாக வேண்டும்
இந்த
நக்கீரனை எரித்த சிவனே
என்னைச் சாம்பலிருந்து
மீட்டுக்கொடு
நான் 
உன் பின்னால் பறந்துவர

 

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...