Skip to main content

15. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

நதியின் பிழையன்று மனித நம்பிக்கை மறுப்பது.

கங்கையில் நடப்பதை நேரில் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருகிறது. கோடான கோடி மக்களுக்கு நீரினால் உண்டாகும் நன்மைகளைக் கருதாமல் அதனை அசுத்தப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கத் தோணுகிறது. ஆனால் நம்பிக்கைதான் கடவுள் என்ற சொற்றொடரைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மக்கள் எதனை தரிசிக்கிறார்களோ அதன் மேல் முழு நம்பிக்கை வைக்கிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பலன் அளிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை மனத்தின் வலிமையாக மாறுகிறது. வலிமை ஆற்றலாக உருவெடுக்கிறது. முழு ஆற்றலாலும் முயற்சியினாலும் அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடந்துவிடுகிறது. அதில் தனிமனித ஆற்றலும் செயல் திறமும் இருக்கிறது என்பது கண்கூடு. ஆனால் எல்லாம் இறைவன் செயல் என்றே, அவர்கள் அடையும் பலனை இறைவனின் கொடை என்றே கருதுகிறார்கள். இங்கேதான் இறைபக்தி பன்மடங்காகிறது. கங்கை அரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதே காரணத்தால்தான். கங்கை எல்லா அசுத்தங்களையும் தூய்மையாக்குகிறாள். கங்கை எல்லா பாவங்களையும் தீர்க்கிறாள்.கங்கை எல்லாரையும் பாதுகாக்கிறாள். இந்த வலிமை இல்லையென்றால் அது ஏன் கங்கையாக , கடவுளாக இருக்கவேண்டும்? என்று கேட்கிறார்கள். கங்கை சிவனின் சிரத்திலிருந்து கிளம்புகிறது. அது பஞ்ச பூதங்களில் ஒன்று. சிவன் பஞ்ச பூதத்தின் மூல ஊற்றாக இருக்கிறான். அவனே பஞ்ச பூதமாகவும் இருக்கிறான். சிவனின் அருட் கொடைகளில்(பஞ்ச பூதங்களில்) ஒன்றான தண்ணீர்- கங்கை, பிரபஞ்ச சுபீட்சத்து முற்றும் முழுவதுமாய் மூல வித்தாக அமைகிறது என்றே நம்பி வழிபடுகிறார்கள். எனவே கங்கை எல்லாவற்றையும் தூய்மை படுத்துகிறது என்றே முற்றும் முழுதுமாக வழிபடுகிறார்கள். இந்த நம்பிக்கை உள்ளவரை கங்கை அசுத்ததைக் கேள்விக்குட்படுத்துவது அதன் நீரோட்டத்திலேயெ அடித்து சென்றுவிடும்.  கங்கயை வழிபட அங்குள்ளவர்களும், அயல் நாடுகளிலிருந்து வருபவர்கள் கங்கையை இந்தக் கண்கொண்டுதான் பார்க்கிறார்கள். நம் கண் முன்னாலேயெ கங்கை நீரை அருந்தும் மக்களைப் பார்க்குந்தோறும் நம்முடைய நம்பிக்கையின்மை அடிபட்டுப் போகிறது.

கங்கை நீரை ஆய்வுக்குட்படுத்தினார்கள். அது தூய்மையாகவே இருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. இங்கே நீரை பயபக்தியோடு அருந்துபவர்களப் பார்க்கும்போது நமக்கும் அது உண்மையாக இருக்குமோ என்றே முடிவெடுக்க வைக்கிறது.
இந்த விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துபவர்கள், கேலி செய்பவர்கள்  மிகுந்த கண்டனத்துக்குள்ளாகிறார்கள். ஏனெனில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையை இவர்கள் கொச்சை செய்கிறார்கள் என்பதால்.

கங்கைக் கரையை அடைந்தவுடன் நேராக கால பைரவன் கோயிலுக்குப் போகிறோம். மக்கள் நெருக்கடி மிகுந்த இடம். கோயில் வளாகத்தை எட்டுமுன்பே முட்டித்தள்ளும் கூட்டத்தைக் காண்கிறோம். கோயிலுக்கு வெளியே பலத்த போலிஸ் பாதுகாப்பு. இந்துக் கோயில்கள் பலவற்றுக்கு பாதுகாப்பு பலமாகவே இருக்கும். தீவிரவாதிகளால் கோயில்கள் சிதைக்கப்படலாம் என்ற அச்சமே காரணம். பாபர் மசூதி இடிக்கப் பட்டதிலிருந்தே இந்துக் கோயில்களில் இந்தப் பதற்றத்தைக் காணமுடிகிறது. ஆனால் இப்படி எதுவும் இதுவரை நடந்துவிடவில்லை என்றே தெரிகிறது.கோயிலுக்குள் நுழைந்து வெளியே வரும்போது இவ்வளவு பணம் கொடுத்து ஏன் இங்கெல்லாம் வந்து அல்லல் படவேண்டுமென்றே தோணும்.

இவர்கள் என்னதான் வேண்டிக்கொள்கிறார்கள்?
நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கவேண்டுமென்றா?
நோய் நொடியில்லாமல் வாழ வேண்டுமென்றா?
வாழ்க்கை துன்பமற்று இருக்கவேண்டுமென்றா?
இப்படி என்ன வேண்டினாலும் அப்படியே நடந்து விடுமா. அதற்குச் சாத்தியம் உண்டா?
அப்படியென்றால் இவற்றையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லலாமா? இது மனிதன் வைத்த நம்பிக்கை . அவ்வளவே.

கோயிலில் படங்கள் எடுக்க அனுமதியில்லை.எல்லாமே பாதுகாப்பு காரணமாகத்தான்.

கோயிலின் உள்ளும் வெளியேயும் சொத சொத வென்று ஈரமாகவே இருக்கிறது. கோயிலைச் சுற்றி வீடுகள். கோயிலுக்கு போகும் பாதை கூட மிகக் குறுகியது ஆறடி அகலம்தான் இருக்கும். இருமருங்கிலும் ஒழுங்கில்லாமல் கட்டப்பட்ட வீடுகள். கடைகள். அங்காடிகள். இதற்குள்தான் பக்தர்கள் நெருக்கியடித்து நடக்கிறார்கள். மோட்டார் சைக்கில் போகிறது. ஓட்டோ ஓடுகிறது பள்ளி மாண்வர்கள் பயன்படுத்துகிறார்கள். மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. காசி ஒரு பெரிய பட்டணம். ஆனால் அதன் உட்புறத் தெருக்கள் மிகக் குறுகியது. சாணமும், மனித  மலமும் மூத்திரமும் மிகச் சாதரணமாகப் பார்க்கலாம். அதன் மேல் கால் படாமல் நடப்பவர் இருக்கவே முடியாது.

காசி விஸ்வநாதன் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த குறுகிய சந்து ஒன்றிலே அது நடந்தது. காசி விஸ்வநாதன் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் அதனைச் சொல்கிறேன்.

கங்கையில் எடுத்த பசிக்கு ஆகாரம் போடவில்லை. கால பைரவனைப் பார்த்துவிட்டு, காசி விஸ்வநாதனை வணங்கிவிட்டு பின்னர் விடுதியில் பசியாறலாம் என்றே திட்டம். அதனை வயிறு கேட்குமா? சிலருக்கு கிட்டதட்ட ஹைப்போ வந்துவிட்டது. உடனடியாக இனிப்பை வாங்கிக்கொடுத்து சம்நிலைக்கு கொண்டு வரவேண்டியதாயிற்று. இருப்பினும் காசி விஸ்வநாதனை பார்த்தே ஆகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார்கள். சுவர் நன்றாய் இருந்தால்தானே சித்திரம்வரைய முடியும்?

தொடர்வோம்....






Comments

நிஜமாகவே வெறுப்பை உண்டாக்குகிறது. பக்தி மிகு கடவுளும் மனித மலமும் அருகருகே... என்ன மாதிரியான நிலை இது... இதைக் காண உலக பக்தர்களின் கூட்டம். பணத்திற்கு கேடு தான்... இவற்றையெல்லாம் பார்த்துவிட்டால் நேரடி சொர்க்கம் எனும் மாயையும் இதற்கு காரணம் போல...
தங்கள் பதிவு காசியின் உண்மை நிலையை
அங்கு இதுவரை போகாத என்போன்றோர்க்கு
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவைக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ko.punniavan said…
நன்றி விக்னேஸ், ரமணி உங்கள் பின்னூட்டத்துக்க நன்றி.
அடுத்த பயணம் அங்கேதான்.
ko.punniavan said…
நன்றி துளசி,
இந்தியா பார்க்கவேண்டிய ஊர்.நம்பிக்கைகளும் விழுமியங்களும் நிறைந்த ஊர்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின