Skip to main content

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 5
லெம்பா பூஜாங் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 'சண்டி'



ராஜ ராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன்தான் கடாரத்தை வென்றவன். ராஜ ராஜ சோழனின் கட்டளைக்கிணங்க அவன் கடாரத்தை 1030ல் வென்றான்  என்பது வரலாறு.

 முதலாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை ஆதிக்கத்தில் இருந்தவை பாண்டிய அரசும் சோழ அரசும்தான்.பல்லவர் ஆதிக்கம் நான்காம் நூற்றாண்டில் துவங்கி ஒன்பதாம் நூற்றான்டு வரை நீடிக்கிறது.மீண்டும் சோழர் அரசு தலைதூக்கியது ஒன்பதாம் நூற்றாண்டில். அது பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கோலோச்சியது. இந்த நேரத்தில்தான் தென்கிழக்காசியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது சோழர் அரசு. ராஜேந்திர சோழன் கடாரத்தில் கால் பதித்தது அப்போதுதான். அங்கே அவர் ஒரு அரசை நிறுவியதன் அடையாளமாக பழங்கால வரலாற்று பொருட்கள் அங்கே காணக்கிடக்கின்றன.பௌத்த இந்து சாம்ராஜ்யங்களின் வரலாற்றுச் சான்றுகளே அவை.

மலேசிய அரசு  'சண்டி லெம்பா பூஜாங், என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது. (சண்டி-வழிபாட்டிடம்,)
இது மலேசியாவை மேற்கு மாநிலத்தையும் கிழக்கு மாநிலத்தையும் பிரிக்கும் ஒர் நீண்ட மலைத்தொடரின் பள்ளத்தாக்கு ஒன்றில் அமைந்திருக்கிறது.

லெம்பா பூஜாங் என்றால் கடல் நாகமென்று பொருள் படுகிறது. இந்த பள்ளத்தாக்கில் வலைந்து வலைநது ஒடும் நதியின் குறியீடாகவே பூஜாங்கா என்ற சம்சுகிருதச் சொல்லை நாகம் என்றார்கள். நாகமும் சம்சுகிருதச் சொல்தான். இந்த வார்த்தையை அவர்கள் அச்சுப்பிசகாமல் அப்படியே மலாய் மொழி சொல்லாக்கிச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் மலாய்மொழி சொற்களஞ்சியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மலாக்கா என்ற கடலோர ஊரும், பின்னர் லெம்பா பூஜாங் என்ற கடார நதியோர ஊருமே கிழக்காசியாவில் வணிக மையமாக இருந்திருக்கிறது. மலாக்காவை மஜாபாஹிட் ராஜ்யம் கோலோச்ச, கடாரத்தை சோழ அரசும் ஆண்டிருக்கிறது. வெவ்வேறு நூற்றாண்டுகளில். அப்போது வந்த வணிகர்களே ச்ம்ஸ்கிருத மொழியை இங்கேயும் இறக்குமதி செய்திருக்கிறார்கள். அதன் காரணத்தாலேயே மலாய் மொழிக்குள் சம்ஸ்கிருதச் சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. ஏன் 'மலாயா' (இப்போது மலேசியா) என்ற சொல்லே மலை என்ற சொல்லிலிருந்து மருவியதுதான். மலேசியா மலைத்தொடர் நிறைந்து ஊர்  . மலையிலிருந்து வந்தவர்கள் மலாயர்கள் என்று ஆனார்கள். இப்படி மிகச் சுவாரஸ்யமான வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கவே ஜெமோவும், கிருஷ்ணனும், ராஜ மாணிக்கமும் லெம்பா பூஜாங் சென்றார்கள்.
சமன் செய்யப் பட்ட நிலப்பதியிலிருந்து கிடைக்கப்பெற்ற தொல்பொருள்

மலேசிய அரசு லெம்பா பூஜாங்கை கவனமாகப் பாதுகாக்கிறது என்று சொல்வதுகூட மிகைதான். முன்னர் அது தொல்பொருள் ஆராய்ச்சியிலிருந்து கிடைக்கப்பெற்ற இந்து சமய கடவுள் சிலைகள் சிலவற்றை வேண்டுமென்றே  இல்லாமல் ஆக்கியது. ஒரு நான்கைந்து மாதங்களுக்கு முன்னர்கூட லெம்பா பூஜாங்கைச் சுற்றி இருந்த நிலப்பகுதியையும்  கெடா மாநில அரசு வீடமைப்பு மேம்பாட்டுக்கு  சமன் செய்திருக்கிறது. அந்நிலம் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு பயன்படும் நிலம் என்று தெரியாமலேயே அதைச்செய்திருக்கிறது.  1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏராளமான புதைப்பொருட்களை கற்கள் என்றே நில மேம்பாட்டாளர்கள் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் சமூக அரசாங்க சார்பற்ற நிறுவனத் தலைவர்கள் இதனை ஊடகத்துக்குச் செய்தியாக அம்பலப்படுத்தினர்.
கெடா(கடாரம்) மாநில முதல்வர்.(முன்னல் பிரதமர் மஹாதிரின் புதல்வர்)

அதற்கு கெடாமாநில அரசோ, மத்திய அரசோ பொறுப்பான பதில் சொல்லவில்லை. கெடா மாநில முதல் அமைச்சர் மட்டும் பொறுப்பான பதில் சொல்வதாக எண்ணி அதே புதைப்பொருட்கள் போல இன்னொன்றை செய்து தருவதாக  சொல்லியிருக்கிறார்.  புதைப்புருள் ஏதும் அழிந்து ஆராய்ச்சிக்கு கிடைக்கவில்லையென்றால் மலேசியா வாருங்கள். அதேபோன்ற ஒன்றை இங்கே செய்து தர தயாராக இருக்கிறோம்.
வீடுகள் அமைக்க அழிக்கப்பட்ட தொல்பொருள் நிலப்பகுதி

அவராவது பரவாயில்லை சில அதிகாரிகள் "இதுக்கு போயி ஏண்டா தழனெல்லாம் இப்படி அலட்டிக்கிறீங்க," என்பது போல 'அசல்டாக' பதில் சொல்லியிருக்கிறார்.

அதை விடுங்கள் புதைப்பொருள் ஆராய்ச்சியில் நான் கத்துக்குட்டிதான்.

மணி 3.00க்கு மேல்தான் ஜெமோவும் நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். களைத்து காணப்பட்டார்கள். மதிய உணவுக்குப் பிறகு ஜெமோ களைப்பு நீங்க சின்ன தூக்கம் போட்டார். நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தோம். ராஜ மாணிக்கம் ஜெமோவின் வெண்முரசை வாசித்துவிட்டு இந்திய நாடாளுமன்ற தேர்தல் நிலவரத்தில் ஆழ்ந்து போனார். வருங்கால நாடாளுமன்ற உறுப்பினராக (ப.ஜ.க)  வரக்கூடிய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருப்பதாக கிருஷ்ணன் சொன்னார்.

யுவாவின் பூர்வீகம் சுங்கைப்பட்டாணிதான். அவர் நான் வீடுவரை போய்வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.

மணி 6.00க்கு சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஜெமோ உரையாற்றவேண்டும் . விரிவுரையளர் தமிழ் மாறன் 6.00 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கிவிடும் என்று சொல்லியிருந்தார். ஜெமோ தயாராகிக்கொண்டிருந்தார். குளித்துவிட்டு அவருடைய பயணப்பையைத் தேடினார். அது யுவராஜன் காரில் சிக்கிக்கொண்டது தெரியாமலேயே காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டிருந்தார்.  (அப்பாடா யுவாவின் புண்ணியத்தில் குழப்பம் 5 கிடைத்துவிட்டது ) உடனே அவரை அழைத்தேன். ஐயோ சார் என்றபடி திரும்பி வந்தார்.
வெள்ளைச் சட்டையில் தமிழ்மாறன், பின்னால் ஜெமோ, யுவா

மாலை மணி 5,45க்கெல்லாம் கல்லூரியை நோக்கிப் புறப்பட்டுவிட்டோம். விரிவுரையாளர் தமிழ்மாறன் அதனை ஏற்பாடு செய்திருந்தார். தீவிர வாசகர் அவர். ஜெமோவை விடாது வாசிப்பவர். மொழி, சமூகம்,ஆன்மிகம் என அகன்ற வாசிப்பையும் அது தொடர்பான உரையாடலிலும் சலைக்காமல் பங்கெடுப்பவர்.

நாங்கள் போய்சேர்ந்த போது மணி 6.30க்கே நிகழ்ச்சி தொடங்கும் என்றார். அப்போது ஜெமோவை மாணவர்களும் விரிவுரையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள்!

தொடரும்......
 

Comments

Anonymous said…
சார், அடுத்த குழப்பம் எப்பொழுது வரும்? படிக்க ஆர்வமாய் இருக்கின்றது....
ko.punniavan said…
எழுதுவதற்கு அக எழுச்சி வேண்டும.அது உங்களைபோன்றவர்களால்தான் ஏற்படுத்தமுடியும். நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த