Skip to main content

பாபநாசம்- சுயநலவாதத்தின் மையம்


 சுயநலவாததத்தின் மையம்

ஒரு சராசரி மனிதனின் வாழ்வு சமநிலை இழக்கும் தருணத்தில் அவன் சிந்தனை வெளிப்பாடு மிக அசாத்தியமாக அமையும். அதாவது நாம் எதிர்பாராத விதமாக சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது அந்த சிக்கலிலிருந்து விடுபட நாம் மிகத்தீவிரமாக சிந்திக்க ஆரம்பிப்போம். ஒரு வெறிநாய் விரட்டும் போது நம் கால்கள் அசாதாரண துரித கதியில் ஓடுவது போலத்தான். அந்த வேகத்துக்கு ஈடாக சிந்தனை இட்டுச்செல்லும் பாதையில் செயல்படுவோம். அந்தச் சிக்கலால் உண்டாகும் மன அழுத்தங்கள் நம்மை பெரிது பாதித்துவிடாமல், புறம்தள்ளி சிக்கலிலிருந்து வெளியாகும் எல்லாச் சாத்தியங்களையும் கையாள்வோம். இந்த நிதர்சனத்தையே முன்வைக்கிறது பாபநாசம்.

எப்பேற்பட்ட மனிதனாக இருந்தாலும் அவன் சுயநலமே அவனுக்கு முன்னால் நிற்கும். அவனும், அவன் உடன் பிறந்தாருமே அவனுக்கும் அதிமுக்கியம். வெகுசன தர்மத்தை பின்தள்ளிவிட்டு தனக்கென ஒரு தர்மத்தை நியாயப் படுத்துவான்.சுயம்புலிங்கம்  அதைத்தான் பாபநாசத்தில் முன்னெடுக்கிறார்.

இதே சுய நியாத்தை ஐஏஸ் அதிகாரியும் கையாள்வதைப் பார்க்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தன் குடும்ப கௌரவமே முக்கியம் எனக் கருதி தன் அதிகாரத்தை முன்வைத்து, சட்டத்துக்குப் புறம்பாக கமல் குடும்பத்தை சித்ரவதை செய்கிறாள்.

கமலின் செயலும் சரி , ஐஏ எஸ் அதிகாரியும் சரி சட்டத்தைப் பின்தள்ளி சுயநலமாகவே செயல்படுகிறார்கள். அதிகாரம் கையறு மனிதனின் மீது எந்த அளவுக்கப் பாய முடியும் என்பதை எல்லாக் காலத்திலேயும் நிரூபனமாவதைப் பார்க்கிறோம்.  எத்தனை அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்கள் குற்றங்களை மறைக்க சாமான்ய மனிதன் மீது பாவிக்கும் வன்மம் இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல! இந்த துஷ்பிரயோகத்தின் ஒரு சின்ன அலையைத்தான் ஐ ஏ.எஸ் அதிகாரியின் மூலம் காட்டிச் செல்கிறார இயக்குனர்.

எனக்கென்னவோ ஐ ஏ எஸ் அதிகாரியின் நடிப்பு இப்படத்தின் ஜீவனைக் குலைந்துவிடாமல் காப்பாற்றி இருக்கிறது. அவளைச் சமநிலைக்குக் கொண்டுவரும் அவள் கணவனின் பாத்திரம், காட்சிகளின் முரண் உத்தியைத் தூக்கிப் பிடிக்கிறது. கமல் குடும்பத்தினர் தங்களை பாதுக்காக்க ஒன்றுமே நடக்காது போன்ற பானையும். தன் மகனை காணாமற் துடிக்கும் ஐ ஏ எஸ் அதிகாரியின் பதட்டமும் ஒன்றுக்கொன்று முரணை உண்டாக்கி  ரசிகனின் கவனத்தைச் சிதறவிடாமல் காக்கிறது. இந்த முரண் உத்தியை படம் முழுக்க காண்கிறோம்..

கதையில் வரும் திருப்பங்கள் பாபநாசத்தின் உயிரோட்டம் கலைந்துவிடாமல் பிடித்திருந்தது. கமலின் மகளை அச்சுறுத்தவரும் சக மாணவன் வந்து போனதும் , மகள் பதட்டப் படும் காட்சிக்குப் பின்னர் நடக்கும் கொலை கதையின் முக்கிய திருப்பம்.

.சுயம்பு தன் புத்திக் கூர்மையால் சாட்சிகளை(குடும்பம்) தனக்குச் சாதகமாக உருவாக்கும் சாட்சிகள் அவர் உருவாக்கியது போல செயல் படுவது சாத்தியமானதுதான் என்று ஒரு மேலோட்டமான பார்வை சொன்னாலும், அவர்களைக் கொஞ்சம் கூட தவறிழைக்க விடாமல் நகர்த்திச் செல்வது கதையின் ஓட்டத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

 கிளிப்பிள்ளைபோல சொன்னதையே சொல்வது பதட்ட நிலையில் இருக்கும் மனிதனுக்குச் சாத்தியப் படாத ஒன்று! கமலின் சிறிய மகள் அச்சுறுத்தியதும் உண்மையைச் சொல்லும் காட்சி இந்த 'கிளிப்பிள்ளை முன்னேற்பாட்டை' அந்த சந்தேகத்திலிருந்து காப்பாற்றுகிறது.
கலாபாவன் மணியை ஒரு நகைச்சுவை வில்லனாக காட்டாமல் மிரட்டும் போலிசாகக் காட்டியது மர்மம் உடையும் தருணங்களைக் கலையாமல் வைக்க உதவியாக இருந்தது.
கௌதமியின் நடிப்பு கமலுக்கு ஈடாக வந்திருக்கிறது.
தன் நடிப்பின் உச்சத்தை சில கட்சிகளில் நம்மை அசரவைக்கிறார் கமல். பிணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தகர்க்கப் படும்போது ஐ ஏ எஸ் அதிகாரியை நோக்கி வீசும் அவருடைய பார்வை அசரவைக்கிறது. வணிக வளாகத்தில் துணிகளைச் சுமந்து வரும் பணியாளையும் தன் குடும்பத்தையும் பார்த்து அதிர்ச்சியுறும் பார்வை கமல் நடிப்பின் இன்னொரு அசத்தல்.

கதை இறுதிக் காட்சிகளில் இயல்பான மனித மனங்களில் புனிதத் தன்மையை வெளிக்காட்டுகிறது!  மனிதன் இயல்பாகவே நல்லவன்.இதை இப்படி நிரூபிக்கலாம். நாம் நம்மைச்சுற்றி தீமைகள் நடந்தால் வெறுக்கிறோம். நல்லது நடப்பதையே விரும்புகிறோம். ஒவ்வொருவரின் உள்மனமும் நல்லவற்றையே விரும்புகிறது பல சந்தர்ப்பங்களில்.
ஐ ஏ எஸ் அதிகாரியின் மகனின் செயலை அவன் பெற்றோரர் தெரிந்துகொண்டதும் கதை வேறு ஒரு திசைக்குச் செல்கிறது. மகன் செயலே அவன் கொலையுறுவதற்குக் காரணம் என்று புரிந்துகொண்டபோது அவர்கள் இயல்பான நல்ல சுபாவம் வெளிப்படுகிறது. கமலும் தன் மகளின் செயலை நினைத்து அவர்களிடம் வருந்தும் காட்சியில் அவரின் நற்குணம் கசிவதைப் பார்க்கிறோம். சுய மனசாட்சி யாரையும் தண்டிக்காமல் விடாது என்பதை பாபநாசம் தெளிவாகவே சொல்கிறது.
கதையின் முடிச்சு எங்கேயும் தளர்ந்துவிடாமல் இருக்க பின்னிப் பின்னி வரும் காட்சி அமைப்பு நம் கவனத்தைச் சிதறாமல் கட்டிப்போடுகிறது. ஜெயமோகனின் வசனம் கனமாகவும் அழுத்தமாகவும் அமைந்திருக்கிறது.பாபாநாச மக்களின் பேச்சு வழக்குமொழியை நன்றாகவே பிரதிபலிக்கிறது படம். தமிழ் சினிமா வணிக நோக்கத்துக்காக புகுத்தும் குத்தாட்டம், காதல் ஜோடி லீலைகள் இல்லை.
எங்கே பிணம் புதைக்கப்பட்டது என்பதை காட்டும் குறியீட்டுக் காட்சி தமிழ்ப்படத்துக்கு மிகப் புதிய உத்தி.
படத்தில் ஆங்காங்கே குறைகள் உள்ளன என்றாலும் கதையின் விசை- வேகம் அவற்றை கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. படத்தின் இடை வேளைக்குப் பிறகு காட்சிகளின் வேகம் மர்மத்தை பிடிவிடாமல் வைத்த்ருந்தது.

கமல் இதற்கு முன் வெளியான படத்தில் சறுக்கினாலும், பாப நாசம் அந்தச் சறுக்கலிலிருந்து அவரைக் சுதாரிக்க வைத்த, மீண்டும் 'நிற்க' வைக்க உதவியிருக்கிறது.
சினிமா பார்க்கும் பழக்கமே ஒரு மனிதனின் சிந்தனைக்குத் தீனி போடுகிறது என்பது நடைமுறைவாழ்க்கையின் இயல்புதான்.
பாபநாசம் பாவத்தைக் கழுவவில்லை என்பதே நுணுக்க முரண்.
.
.

Comments

Anonymous said…
Wonderful blog! Do you have any hints for aspiring writers?

I'm hoping to start my own website () soon but I'm a little lost on everything.

Would you advise starting with a free platform like Wordpress
or go for a paid option? There are soo many choices out there that I'm completely overwhelmed ..
Any ideas? Kudos!

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின