Skip to main content

Posts

Showing posts from 2025

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

உறக்கம் போக்கும் வனநடை

3.1.25 அன்று நான் பதிவு செய்த என் உறக்கமின்மை இன்னலுக்கு பல முகநூல் நண்பர்கள் அனுதாபங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். நண்பர் ராஜேந்திரன் அண்ணாமலை,அம்பிகா,  விரிவுரையாளர் சேகரன், எழுத்தாளர் மதிப்புமிகு மாலன், ரெ,  விஜயலெச்சுமி, ஏய்ம்ஸ்ட் பேராசிரியர் டாாக்டர்  கோமதி கேசவ் , கனகராஜன், பேராசிரியர் நாராயணன் கண்ணன்,   ( தமிழகத்திலிருந்து பேசினார், ஆசிிரியர் முனுசாமி, வாசக நண்பர்   கிருுஷ்ணன் , உதயகுமார் ஆகியோர்  தொடர்பு   கொண்டனர்.         யோகா மாஸ்டர் சௌந்தர்   மூச்சுப்பயிற்சி ஒன்றை வலியுறுத்தினார். நான் வனத்துக்குச் சென்று       அப்பயிற்சியை மேற்கொள்ளலாமே என்று சிந்தித்தேன் . வாழ்க்கையில் வானப்பிரஸ்தம் ஒரு அங்கம்தானே.    என் மகன் பிநாங்கில்  சுஙைை அராவில் வசிிக்கிறான் .அவன் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் மாரியம்மன் கோயில்.  அங்கிருந்து  காட்டுக்குள் நுழையும் மண்சாலை நம்மை உள்ளே அழைக்கிறது.  வ...