மலேசியா, கெடா மாநில சுங்கைப் பட்டணியிலிருந்து கோலாலம்பூருக்குப் போய்வருவதை நினைக்கும்போதே பழைய பயண அனுபவமங்கள் நினைவுக்கு வந்து தொல்லைசெய்யும். பயணமாகும் நேரம் விமான டிக்கெட்டின் விலை குறைந்திருந்தால் பயணம் சுகமாய் அமையும். அவவாறில்லையெனில் ஐந்தாறு மணி நேரம் பேருந்துப் பயணம்தான். போகும்போது டிரான்ஸ்னேசனல் பேருந்து எடுத்துக்கொள்வேன். நேரப்படி ஏற்றி நேரப்படி இறக்கிவிடும். ஓட்டுனர்கள் அதிசயமாய் புனிதர்களாக இருப்பார்கள். கோலாலம்பூரை விட்டுத் திரும்பும் தருணத்தில் கே எல். நம்மை விரட்டிக்கொண்டிருக்கும். உடனடியாகக் கிளம்பும் மனநிலைதான் எப்பாதுமே உருவாகும். வீடு போய் சேர வேண்டும் என்ற ஆவலைவிட கே.எல்லின் புழுக்கமும், கந்தகக் காற்றும், செலவும், காரணங்கள்தான்.அதனால் எந்தப் பேருந்து முதலில் கிளம்புகிறதோ அதற்கு டிக்கட் எடுத்து ஏறிக்கொள்வேன். அதையும் தாண்டி என்ன நடக்குமென்றால், நாம் புடுராயா வளாகத்தினுள் நுழையுமுன் சில கழுகுகள் உங்களை பிராண்டத் தொடங்கிவிடும். விடாமல் பின்தொடரும். "இப்போ கெளம்புது எஸ்பிக்கு," என்று சுற்றி சுற்றி வரும் நம்மை. தொல்லைகளைத் த...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)