Skip to main content

தாயின் கழுத்தை இறுக்கும் தொப்புள் கொடி

என் நெருங்கிய உறவினர் பெண் ஒருத்தி மூன்றாவதாக கற்பமுற்றிருந்தால். ஸ்கேன் செய்து பார்த்தபோது மூன்றாவதும் பெண் குழந்தை எனத்தெரியவருகிறது. அந்தக்கணமே குழந்தை வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தாள்.


முதல் குழந்தைக்கு ஐந்து வயது ஆகிக்கொண்டொருந்தது. இரண்டாவது இரண்டு வயதைக்கடந்திருந்தது. இரண்டுக்குமே சேட்டை செய்யும் பருவம். முழு நேரமும் இவள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் .இருவரின் அன்றாட லூட்டியும் தாங்க முடியாமல் விழிபிதுங்கிய மனைவிக்கு வயிற்றுச்சிசுவை கறைத்துவிடுவதற்கான முடிவை அறிவித்துக்கொண்டிருந்தது. டாக்டரைப் போய்ப்பார்த்தபோது எவ்வளவு சீக்கிரம் கலைக்கிறீர்களோ அவ்வளவு நல்லது உடம்புக்கு எனச்சொல்லியிருக்கிறார். தேங்காயாய் முற்றிவரும்வரை காத்திராமல் இளநீராக இருக்கும்போது அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டுவருவது லாபகரமானது என்பதை இன்றைக்கு வணிக நோக்கோடு பணியில் அமர்கிற டாக்டர்களுக்குத் தெரியும் .

வேலைக்காரி வைத்துக்கொள்வதில் உசிதமில்லை. வேலைக்காரிகள் பெண்களாக இருக்கிறார்களே என்ற கவலை அவளுக்கு. நம்மூர் வேலைக்காரிகள் முழுநேரமாய் வீட்டில் இருக்கமாட்டார்கள். அக்கம் பக்கம் இருக்கவே இருக்கிறது வீட்டுக்கதையை கதா காலாட்சேபம் நடத்த. வேலை முடிந்து வரும் கணவன் சற்று நேரம் தூக்கிக்கொஞ்சுவதோடு சரி. காற்பந்து, பூப்பந்து, கோல்ப் என விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இரவு நேரத்தில்தான் வீடு வந்து சேருவார். விளையாட்டுப்பிள்ளை.

கணவரின் அபிப்பிராயத்தைக் கேட்டபோது, நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள் என்பதாகத்தான் இருந்தது கணவரின் கருத்து. முன் அபிப்பிராயம் சொல்வதில் எப்போதுமே ஒரு ஆபத்து இருக்கிறது. ‘உங்களால்தான் இப்படி ஆனது’ என்ற பழி பாவத்தையும் உடன் ஏந்தி வருவதுதான் அபிப்பிராயங்கள். குறிப்பாக பிடுங்கள் சுபாவம் கொண்ட மனைவியிடம் அபிப்பிராயம் சொல்வதெல்லாம் உத்தமமல்ல. “உன் விருப்பபடி செய்,” என்று சொல்லிவிட்டு நழுவிவிடுவதில் இருக்கிற சௌகர்யம் அபிப்பிராயம் சொல்வதில் கண்டிப்பாய் இல்லை என்பது அனுபவசாலிகள் கருத்து. நுணலும் தன் வாயால் கெடுமல்லவா? மென்னியருகே கையை வைத்து, வாழ்க்கை முழுதும் நிழலாய்த்தொடரும் சிக்கல்களையும் , சிரமங்களையும் உள்ளடக்கிய தாக்கம் கொண்டது முன் யோசனைகள்.

குழந்தையைக் களைத்துவிடலாம் என்ற முடிவில் இருந்ததைக்கேள்விப்பட்ட உடன் பிறந்த அக்காள் எனக்குக் கொடுத்துவிடு எனக்கெஞ்சி இருக்கிறாள். அந்தத் தம்பதியினருக்குப் பத்து ஆண்டுகளுக்குமேல் குழந்தை பாக்கியம் இல்லை. பிறர் குழந்தையை கையெட்டும் தூரத்தில் பார்க்கும்போதெல்லாம் சுரக்கும் தாய்மை உணர்வை எப்படித்தவிர்ப்பது? பிறருக்குக் வாய்த்ததுபோல் தனக்கு வாய்க்கவில்லயே என்ற ஏக்கம் மிகப்பெரிய் பின்னடைவு இல்லையா?

இப்போதுதான் அவளுக்குள் குழப்பங்கள் ஊடுருவத்தொடங்கின.

குழந்தையைப்பார்த்துகொள்ளும் திறன் அவளிடமில்லை என்பதை உணர்ந்தே அவள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாள். அக்காள் கேட்கும்போது மறுக்கவும் மனமில்லை. மறுத்தலை மிக வன்மையாகக்கண்டிக்கிறார் அவ்வையார்.( அவளுக்கு ஏது குழந்தைகுட்டி குடும்பமெல்லாம்)

அக்காளுக்குத் தெரியபடுத்தியிருக்க வேண்டாமே என்று வருந்துகிறாள்.

தங்கை அவசரமான முடிவெடுத்துவிடுவாளே என்று குழந்தையைக் கேட்டுத்தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டாள் அக்காள்காரி. கணவனிடம் யோசனை கேட்கிறாள். எப்பொதும்போலவே,” உனக்கு எப்படித் தோணுதோ அப்படியே செய்,” என்று மிகச்சிறந்த கருத்தைக்கூறிவிட்டு தப்பித்துக்கொள்கிறார். ‘கொடுத்துவிடு’ என்ற ஒரு சொல் கொண்டுவரும் முன்முடிவுகளின் பிரதிபலன்களை நோஸ்ட்ரடேம் போல உணர்ந்த பிறகே இந்த

விலகல், நழுவல், எல்லாம்.

கணவன் மட்டுமல்ல, தாயும், தந்தையும். தமக்கையும் கூட எந்த முடிவையும் சொல்லாமல் தாயிடமே விட்டுவிட்டனர். இது தொப்புள் கொடி பிரச்னை மட்டுமல்ல அவளின் அடிப்படை குணத்தையும் சார்ந்ததும்தான்.

துஷ்டரைக்கண்டால் தூர விலகுவதுதானே புத்திசாலித்தனம்!

குழந்தையை வளர்ப்பதில் சிரமத்தைவிட பிறர் வீட்டில் தன் குழந்தை வளர்வதை அவள் மனம் ஒப்பவில்லை. அக்காளாயிற்றே என உணர்ச்சிவயப்பட்டு இப்போது குழந்தையைக் கொடுத்துவிட்டு, பிறகு கேட்பது அநாகரிகம். ஒப்பந்தங்களைக் சுக்கு நூறாய் உடைக்கக்கூடியது பிள்ளைபாசம். ஒப்பந்தம் உடைபடும்போது உறவு கண்ணாடிசில்லுகளாய் தெறித்துச் சிதறிவிடும்.

சிந்தித்துப்பார்த்தாள். புதிர்களிலிருந்து வெளியே வர ஒரே வழி,

தனியார் மருத்துவமனைக்குப்போய் முடித்துவிட்டடாள்.

குழந்தையின் கதையை முடிப்பதை விட அக்காளுக்கு பிள்ளைப்பேறைக் கொடுத்துத் தியாகத்தாயாக வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணம் என்னைச்சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கிறது. ஒரு தாய்க்கு இந்த தர்ம சிந்தனை துளிராமல் இருப்பதற்கு அவளின் தொப்புள்கொடிதான் கட்டிப்போடுகிறதோ?

குழந்தை தேவையில்ல என்று கருதுவதிலிருக்கும் மன உளைச்சல் குழந்தை வேறிடத்தில் வளர்வதைப்பார்ர்க்கும்போது மிகுதியாக இருக்குமோ?

குழந்தைகள் உள்ளவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாதவரிடம் சுரக்கும் கழிவிரக்கம் போலியாமானதோ?

தம் குழந்தையை வளர்வதைதைவிடவும் வயிற்றுக்கருவை முடிப்பது எளிதானதோ?

அல்லது கருவில் இருக்கும் உயிர் மலினமானதோ? அதுவும் தாய்க்கு?

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின