Skip to main content

குரங்கின் கையில்

உரிமையைத்தானே கேட்கிறோம் என்றேன்

நாங்கள் கொடுப்பதை எடுத்துப்போ என்றான்

போதவில்லை என்றேன்

உங்களுக்குத்தான் நாதியில்லையே என்றான்

உரக்கக்கத்துவோம் என்றேன்

என்றாலும் நீ நிராயுதபாணி என்றான்

எங்களின் வரிப்பணத்தில்தானே வாங்கினாய் என்றேன்

கஜானாவை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்றான்

ஒருமித்த குரல் போதும் என்றேன்

எங்கள் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதென்றான்

உரிமையின் உண்மைக் குரல் கேட்கவில்லையா என்றேன்

உங்கள் குரல்வளையை எங்கள் சட்டக்கயிறு நெறிக்கும் என்றான்

சட்டம் எல்லோருக்கும் பொது என்றேன்

சிறைச்சாலை இருக்கிறது என்றான்

எங்கள் முறை வராமல் போகாதென்றேன்

ஆட்சி எங்களுடையது என்றான்

வாக்கு எங்களுடையது என்றேன்

வாக்குப்பெட்டி அரசாணைக்கு உட்பட்டது என்றான்

அரசை நாங்கள்தானே தீர்மானித்தோம் என்றேன்

நாற்காலியை நாங்கள்தானே பிடித்திருக்கிறோம் என்றான்

ஆளை மாற்றுவோம் என்றேன்

ஆணையை அவ்வப்போது மாற்றுவோம் என்றான்

பெரும் புரட்சி வெடிக்கும் என்றேன்

துப்பாக்கிக்குள் குண்டுகளை நிரப்ப முனைந்துகொண்டிருந்தான்.



கோ.புண்ணியவான்.மலேசியா.

Ko.punniavan@gmail.com

Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...