Skip to main content

சேலை கட்டிய மாதர்






கணினிக் காதலர் மலாக்கா முத்துக்கிருஷ்னன் தன்னுடைய வலைப்பூவில் http://ksmuthukrishnan.blogspot.com/ சில பழமொழிகளுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் அளித்திருகிறார். மூடநம்பிக்கையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் நமக்கு இந்த விளக்கங்கங்கள் ‘ஆமாம் சரிதான்’ என்று ஆமோதிக்கச்செய்யும். அவருடைய விளக்கங்கள் பழமொழிகளை உள்வாங்கிக்கொள்ள உதவியாக இருக்கிறது. எப்போதுமே நமக்கு இருக்கும் சொற்ப அறிவைக்கொண்டு நம்மிடம் உலவும் தவறான கருத்தாக்கங்களுக்கு அறிவுப்பூர்வ முறையில் ஆழமாகச் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும். நாம் மூட நம்பிக்கைகளை நம் பாக்கெட்டுக்குள் பத்திரமாக பாதுகாப்புடன் வைத்தவாறே இருந்தால் நமக்குள் வெளிச்சம் வர அஞ்சும். நம்மைப் பிரித்து ஆள்பவர்களுக்கு எளிமையாகிவிடும். இப்போதுள்ள பாரிசான் அரசு செய்வதைப்போல!

சேலை கட்டிய பெண்ணை நம்பவேண்டாம் என்ற பழமொழிக்கு ‘கள ஆய்வு’ செய்து விளக்கம் அளித்திருக்கிறார் நண்பர் முத்துக்கிருஷ்ணன். எப்போதோ ஒருமுறை ஒரு பெண் சேலை கட்டிக்கோண்டு பூ வைத்து போட்டிட்டு பவ்யமாக காட்சி அளித்து சோரம் போயிருக்கவேண்டும். அவளை நம்பி எமாந்தவன் இந்தப் பழமொழியை அவன் வாழ்வனுபவத்தைச் சார்ந்து புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, நொந்து நூலாகி பழமொழிக்கான விளக்கத்தைப் பரவ விட்டிருக்கிறான் என்று கூட பெருளாக்கிக்கொள்ளலாம்.

சரி அதை விடுங்கள்!

சேலை கட்டிய பெண்ணை நம்ப வேண்டாம் என்ற பழமொழியைப் பற்றி பேசும்போது லங்காவியில் நான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது நடந்த நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது அப்பழமொழியைச் சார்ந்த சம்பவமல்ல. வேறொரு கதை.

லங்காவி ஒரு சுற்றுலாத்தலம்.

மலேசியாவிலேயே அதிகம் வெளிநாட்டுக்காரர்கள் சுற்றுலாவுக்கு வரக்கூடிய இடம் அந்தத் தீவு. ஐரோப்பியர்களை அங்கே உலவுவதைப்பார்க்கலாம். லங்காவியில் வரிச்சலுகையில் விற்கும் மதுபானங்களும் , உல்லாசத் தளங்களும், சூதாடும் விடுதிகளும், கடற்கரையும் வெள்ளையர்கள் அங்கு வருவதற்கான புற ஈர்ப்பை உண்டு பண்ணுகிறது. கடற்கரைகளில் இவர்கள் உள்ளாடையோடு நடமாடுவதைப்பார்த்து கம்பத்து மக்கள் வெல வெலத்துப் போயிருக்கிறார்கள் தொடக்கத்தில்.-நன்றாகப் பார்த்து விட்டு!

நம் பெண்கள் சேலை கட்டுவதை மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்த்த ஒரு ஐரோப்பியப் பெண் தனக்கும் சேலை கட்ட ஆசையாக இருக்கிறது என்று ஒரு தமிழ்ப்பெண்ணிடம் கூறியிருக்கிறாள். சேலை கட்டிக்கொண்டு உங்கள் கலாச்சார நிகழ்வில் கல்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறாள். ஐரோப்பியர்கள் தேடலை (adventure) விரும்புபவர்கள். கொசுவமும் முந்தானையும் அவளுக்கு ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும்.

சேலை கட்டிக்கொண்டு திருமண நிகழ்வுக்குப் போகலாம் என்று அவளிடம் சொல்லி அதற்கான ஏற்பாட்டைச் செய்ய முனைந்தாள் அப்பெண். முதலில் ஒரு சேலையை வாங்கினாள். சேலைக்குப் பொருத்தமான ரவிக்கையைத் தைத்துக்கொண்டாள். அப்போது “சேலைக்கு அளவெடுக்கவில்லையே” என்று கேட்டிருக்கிறாள் அந்த வெள்ளைப்பெண்.

இல்லை. இப்படியேதான் கட்ட வேண்டும் என்று கூறியபோது அவளுக்கு வியப்பு மேலோங்கியிருக்கிறது.

“you mean just a long piece like this enough?” (இந்து ஒரு நீண்ட துணியே போது மென்கிறாயா?)

“Yes” என்றவுடன் அவளுடைய ஆர்வம் மேலும் இரட்டிப்பாகியிருக்கிறது.

“ வெட்டி எடுக்கும் வேலையெல்லாம் இல்லையா? என்றும் கேட்டிருக்கிறாள்.

“அந்த வெட்டி வேலையெல்லாம் இதற்கு இல்லை,” என்றிருக்கிறாள் தமிழ்ப்பெண்.

நம் பெண்கள்தான் ஒரு சேலைத்துணியிலேயே பல விதமான முறைகளில் கட்டுவார்களே. இதென்ன பெரிய அதிசயம்?

ஒரு திருமண நாளைத்தேர்வு செய்து அப்பெண்ணுக்கு சேலை கட்டி பொட்டிட்டு, பூச்சூடி திருமணத்துக்கு அழைத்து வந்தாள். அங்கே நடக்கும் சடங்குகளைப் பார்ப்பதை விடுத்து எல்லோரும் இவளையே நோட்டமிட்டிருக்கின்றனர். மணமக்கள் கூட கூட்டத்தை ஈர்க்கவில்லை அவள்தான் அன்றைக்கான நாயகியாக வலம் வந்திருக்கிறாள். அவள் ஐரோப்பியர் என்பதற்காக அல்ல! அங்கே வேற்று நாட்டவரை பார்ப்பதெல்லாம் இயல்பாகிப் போன காட்சிகள்.

வேறொரு விஷயத்திற்கு அவள் ஈர்ப்பின் மையப்பொருளாக இருந்திருக்கிறாள்.

அப்போது அவள் இடது கையில் சிகிரெட்டு புகைந்திருக்கிறது. வலது கையில் ஒரு பியர் டின்னும் புகைந்து கொண்டிருந்ததுதான் காரணம்!

இப்போது சொல்லுங்கள் சேலை கட்டும் பெண்ணை நம்பலாமா?

Comments

அன்பரே, வணக்கம்.
இப்போதைக்கு, சேலை கட்டும் மாதர்களை நாம் நம்பித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. ஆனால், கையில் பீர் பாட்டிலுடன் சேலையை அகற்றும் ஒரு பெண்ணை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பது என்னுடைய கருத்து.

இருப்பினும், ஒரே ஒரு பழமொழியை எடுத்துக் கொண்டு அதற்கு அருமையான நிகழ்வுகளைத் தொகுத்து மிகச் சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். உங்கள் நடையில் சரஸ்வதி தேவி கொஞ்சி விளையாடுகிறாள் ஐயா! அவளுக்கு முதல் நன்றிகள்.
Anonymous said…
நன்றிங்க முத்துக்கிருஷ்ணன்,
உங்களின் நிறைவான பாராட்டு நெகிழ வைக்கிறது. வாழ்க்கையில் எல்லாமும் வெறுத்து சலித்துவிட்டது. வாசிப்பும் எழுத்தும் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
நல்ல வேளையாக வாசிப்பும் எழுத்தும் சலித்துப்போன வாழ்வை மீட்டுத்தருகிறது. (இழந்த சக்தியை மீட்டுத்தரும் அந்தக் காலத்து கின்னஸ் ஸ்டௌட் விளம்பரம் போல)மீண்டும் நன்றி. உங்களைப் பின் தொடர்வேன்.வாழ்க.

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...