Skip to main content

நிராகரித்தலும், நிராகரிக்கப் படுதலும்-

பிச்சைப் பாத்திரம் கதை ஒரு பார்வை

                    

       பாவையின் ‘பிச்சைப் பாத்திரம் சிறுகதை மலேசியாவில் அரிதாக சொல்லப்படும் கதை வகைமையில் ஒன்று. ஏறத்தாழ துறவறமே இல்லறத்தைவிட மேலானது என்று சொல்ல வந்த கதை. கிட்டதட்ட 100 விகிதம் நடைமுறை  வாழ்க்கையையைத் திரும்பத் திருமப படம்பிடித்துக்காட்டும் வரட்சியான கதைக் களத்திலிருந்து சற்று விலகி துறவு பற்றிப்பேச வந்ததை சற்று ஆறுதல் தருகிறது. அதற்காகப் பாராட்டுகள்.

       ஏகபோக சொத்துக்கும் அதிபதியாகப் போகிறவனின் மகன்  துறவறத்தில்தான் தான் முழுமையடைவதாகச் சொல்வதை நிதானமாக , சொற்ப வார்த்தைகளுக்குள் சொல்வது வாசகமனத்தை கவர்கிறது. ஆனால் மகன் துறவறம் மேற்கொள்வதற்கான பின்புலக் கற்பிதம் எங்கேயும் காட்டப் படவில்லை. வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும் என்று வெற்றுக்கோடுகளை விட்டிருக்கலாம் கதாசிரியர் .ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லியே இருக்கவேண்டும் .இட்டு நிரப்புவதற்கான வெற்றுக்கோடுகள் கதையில் காணவில்லை. மகன் மெய்ஞ்ஞானத் தேடலுக்குள் நுழைந்து விட்ட பின்புலம் இன்னொரு கதையாக நீண்டுவிடுமோ என்று நினைத்து கவனமாகத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ? தெளிவாகக் காட்டியிருந்தால் கதை மேலும் வலுவாகியிருக்கும்.

      பணமும் புகழும் புரளும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவன்  சந்தடி சத்தமில்லாமல் துறவறத்துக்குத் தாவுவது சாத்தியாமா என்ன? எங்கிருந்து கிடைத்தது அந்தத் திடீர் மெய்ஞ்ஞான ஒளி?

       நொடி நேரம் கூட விரையமாக்காமல் வணிகம் வணிகம் என்றே உழன்று, கோடிக்கனக்கான சொத்துக்கு அதிபதியானவர் தன் மகனின் ‘மெய்ஞ்ஞானத் தேடல் ’ குறித்து கவலையுறுகிறார். அதிலிருந்து அவனை மீட்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கும் நிலை கதையில் நிறைவுற காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னுடைய வாகன ஓட்டுனரின் சொற்கள் இடைச்செருகளாவதுதான் கொஞ்சம் உறுத்துகிறது. தன் எஜமானரின் மனச் கிலேசங்களை உன்னித்தவர், இப்போதுள்ள இளைஞர்கள் வன்மமான முறையில் தங்கள் வாழ்க்கையை விணாக்கிக்கொள்கிறார்கள், அதற்கு உங்கள் மகனின் மெய்ஞ்ஞானத் தேர்வு வாழ்வு, எவ்வளவோ மேல் என்று கூறியதும் எஜமானருக்கும் அவர் சொல்வது சரிதான் என்ற வெளிச்சம் கிடைக்கிறது .. இது மிகச்சாதாரண கருத்து. மகனை மீட்டெடுக்க வகையறியாமல் தவிக்கும் மனத்துக்கு இந்த வசனமே அவரின் சிந்தனையை வழி மறித்து புதிய தெளிவைக்காட்டுவதாகச் சொல்லி முடிக்கிறார். மகனைப் ‘பறிகொடுத்தவர் – அவனை மீட்கும் உபாயத்துக்காக்ச் சிந்தித்தவர் அர்ச்சுனரை மீட்க உபதேசம்  சொல்ல வந்த கண்ணனாக கார் டிரைவரைக் காட்டுகிறாரா என்ன? எல்லா சாரதிகளும் பார்த்தசாரதியாகிவிட முடியுமா என்ன?

      பரம் என்ற பாத்திரம் இக்கதைக்குள் நுழைகிறது . இது ஈரிழையில் இயங்கும் கதை யென்றாலும் ஒரு கதைப்பொருளையே சொல்ல வந்த சிறுகதை. இந்த உத்தியில் கதை சொல்ல முயன்றதற்கும் பாராட்டுகள்.. ஓவியத்தில் இதனை கோலாஜ் முறை என்று சொல்வார்கள். ஆனால் பரமு தெருவுக்குத் தள்ளப்பட்ட நிலையையும், கோடீஸ்வரனின் மகன் பிச்சைப் பாத்திரத்தை தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட நிலையையும் கொஞ்சம் ஒப்பீட்டு நோக்கில் பார்க்கத்தான் வேண்டும். பரம் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். விளிம்பு நிலை வாழ்க்கைக்குள் வலிந்து தள்ளப்பட்டவர். ஆனால் பணம் படைத்தவனின் மகன் மெய்ஞ்ஞானத்தேடலை தானே விரும்பி ஏற்றுக்குக்கொண்டிருக்கிறார். வாழ்வு சூரையாடப் பட்டு நீராகரிக்கப்பட்ட ஒருவரின் கதையும், லௌகீக வாழ்வை நிராகரித்துவிட்ட இன்னொருவரின் கதையும் இறுத்திப்புள்ளியில் –ஒட்டியதா என்று தெரியவில்லை. ஆனால் முயன்றிருக்கிறார்.

   கதையில் சமிக்ஞை விளக்கைக் குறியீடாகக்காட்டுவது கதை நிகழ்தலுக்குள் ஒன்றி விடுகிறது.

   கதை சொல்லும் கலை பாவைக்கு எப்போதுமே சீராகவே வருகிறது. இக்கதையும் அதற்கொரு சான்று.

    இது என் பார்வை மட்டுமே.

    கதை எழுத முன்வரும் புதியவர்களையும்  கை நீட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற தார்மீகச் நோக்கத்துக்காகவே இதனை எழுதுகிறேன். நீதிபதிகளின் நடுவு நிலைக்கும், என் கலா ரசனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற தினக்குரலின் முடிபுக்கு நானும் ஒத்த கருத்துடையவன்-அவ்வளவே.











.


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின