Skip to main content

வாக்குரிமை வாக்காளருக்கே உரியது வெற்று வேட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை!



                 (கோ.புண்ணியவான்)
நமக்குள் திணிக்கப் பட்ட அச்ச உணர்வு காலங்காலமாய் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது. அது அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க உணர்வு. எத்தனையோ ஆயிரம் ஆண்களுக்கு முன்னாலிருந்தே நமக்குள் இது பதிந்து போய் மரபான தொடர்ச்சி பெற்று இன்றைக்கும் அதன் சிதலங்களால் பாதிக்கப் பட்டு வருகிறோம். ரொம்பவும் பின்னால் போக வேண்டாம். ஒரு இரண்டு நூற்றாண்டின் வரலாறை மட்டும் திரும்பிப் பார்ப்போம். பண்ணியார், எஜமானர், துரை, கிராணி, மண்டோர் என்ற அதிகார வர்க்கத்தின் கரம் நம் மென்னியை அழுத்திய வண்ணமே இருந்திருக்கிறது, இப்போது அம்னோ. இவைகளெல்லாம் நமக்கு வலிக்காமல் அச்சத்தை நம்முள் ஊடுறுத்தி வந்திருக்கின்றன.
 பலரிடம் பேசியபோது தேர்தலில் அதிகார வர்க்கத்துக்கு வாக்களிப்பது ஆபத்தில்லாதது என்ற மனநிலையே பலரிடத்தில் என்னால் பார்க்கமுடிந்தது.
“யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்று பலரை நான் கேட்டேன். அவர்களில் பெரும்பான்மையினர் இன்றைக்கும் இருக்கும் ஆட்சியாளருக்குத்தான் என்றே   உறுதிதாக இருக்கிறார்கள்.
“இந்த முறை எதிர்க் கட்சிக்கு போடுங்களேன்.” என்றேன்.
“கண்டு பிடிச்சிற மாட்டாங்களா?”
“கண்டு பிடிச்சி?”
“ஏதாவது செஞ்சிட்டாங்கனா?”
“என்னா செய்வாங்க?”
பதில் இல்லை. பதில் இல்லையென்றால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை அவர்களுக்கு. ‘ஏதாவது செய்துவிடுவார்கள்’ என்ற பயம் மட்டுமே ஏதாவது செய்து விடுவார்கள் என்ற துகலாய் எஞ்சி நிற்கிறது. அப்படிச்  சொல்வதற்கான காரணமுமாகிறது.  காரணமற்ற வீணான அச்ச ஆக்ரமிப்பு அரசியல் மூடத்தனமானது என்று சொன்னால் தப்பாகாது. இந்தப் பயம் எப்படி வந்திருக்கும்? இப்போதிருக்கும் ஆட்சி வகுத்து வைத்திருக்கிற சட்டம்.
வாக்குச் சீட்டில் யார் ஓட்டுப்போட்டார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா?
கண்டிப்பாய் முடியாது. அரசியலைப்புச் சட்டம் அதற்கு இடம் தரவில்லை!.
நீங்கள் ஒருவர் மட்டும் எதிர்க்கட்சிக்குப் போடப் போவதைல்லை. 49 விகிதம் மக்கள் எதிரணிக்கு வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 49 விகிதம் என்பது எத்தனையோ லட்சம். அத்தனை பேருக்கும் தண்டனை கொடுப்பது சாத்தியமா? இதற்கு இல்லையென்றே சொல்லலாம். இப்படிப்பட்ட அச்ச அர்சியலை தொடர்ந்து ஆதரித்து, மேலும் அச்சமுற வேண்டுமா? அப்படியானால் ஏனந்த ‘ஏதாவது” செய்துருவாணுங்க என்ற வீணான அச்சம்?
‘வாக்களிப்பது தனி மனித உரிமை’ ‘ரகசியமானது’ என்ற கற்பிதங்கள் நம்மை அடைந்திருந்தாலும் அதன் உண்மை நிலை பற்றிய சந்தேகங்கள் திப்பித் திப்பியாய் இன்னும் நமக்குள் இருக்கிறது. அந்த இரண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது. சட்டம் நம்மைப் பாதுகாக்கத்தான். சட்டம் நம்மை பாதுகாக்கும் என்பதற்கு முரணாக, அது நம்மை தண்டிக்கும் என்ற அச்ச உணர்வு சற்று மேலோங்கியே இருக்கிறது  நம்மிடம். சட்டத்துப் புறம்பான இந்தப் பிற்போக்கு உணர்வு நமக்குள் திணித்தவர் யார்?.
ஏன் இதைச் செய்கிறார்கள்?
இக்கேள்விகளை நமக்கு நாமே கேட்கவேண்டும்.

அதிகாரத்தைக் கையில் கொடுப்பதற்கு முன்  இவ்வினாக்களை முன்வைப்பது அவசியம்.

 அதிகாரம் கையில் இருந்தால் விரும்பியபடிச் செய்யலாம். அதிகாரம் கையில் இருந்தால் பய உணர்வை மக்கள் மனதில் மேலும் புகுத்தி நாற்காலியைத் தற்காத்துக் கொள்ளலாம். ஓட ஓட விரட்டலாம்! என்ன வேணுமாலும் சாதித்துக் கொள்ளலாம் சுய தேவைக்கு!
அச்சத்தை வலியப் புகுத்தி அதிகாரத்தில் குளிர்காயும் அரசு நமக்குத் தேவையா?
சரி, இந்த முறை  வாக்களிக்கும்போது நம்மைப் பூச்சாண்டி காட்டி குளிர்காய்ந்தவர்களின் அதிகாரம் பறிபோகச் செய்யவேண்டும். அதிகாரமற்றார்கள் இல்லையெனும்போது அச்ச உணர்வும் இல்லாமல் போகும்.
அச்ச உணர்வை உண்டுபண்ணிய சட்டத்தை மாற்றவேண்டுமானால் என்ன செய்யலாம்?
இதுநாள் வரை சட்டத்தை இயற்றியவர்களை மாற்றவேண்டும். யார் சட்டத்தை இயற்றியவர்?
 நாடாளுமன்ற, சட்டமன்ற உருப்பினர்கள்.

 அச்ச உணர்வை நீக்க நாம்தான் இம்முறை புத்திசாலித் தனமாய் வாக்களிக்க வேண்டும். வேறு வழி இல்லை.



Comments

Anonymous said…
Awesome! Ιtѕ genuinelу аωesome article, I have got
much cleаг idea regarding fгom this poѕt.


Here is my webpage; Americas Cardroom Poker Promotions
ko.punniavan said…
Thanks for your encouragement.
Anonymous said…
Wοah! I'm really enjoying the template/theme of this site. It's simple,
уet effеctiѵе. A lοt of tіmes іt's tough to get that "perfect balance" between usability and appearance. I must say that you've ԁone a νery good
jοb with thiѕ. Aԁԁitionally, the blοg loads extremеly quick for
me on Chгome. Excellent Βlog!

Taκe a loοk аt my sіte: RPMPoker Bonus

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின