Skip to main content

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 6


(அப்படின்னு ஒன்னு தேடவேண்டி இருக்கு. தலைப்பை வச்சிட்டு தலைய பிச்சுக்க வேண்டி கெடக்குடா சாமி )


கல்லூரியின் நிகழ்ச்சி 6.30 மணிக்கு துவங்கிவிட்டிருந்தது.

"ஏற்பாடெல்லாம் பெரிசா செய்யமுடில சார்..ஓய்வில்லாத வேலை. அதோடு கல்லூரி நிர்வாகம் மிகக் கறாரானது. சிலமுறை தமிழ் நிகழ்ச்சி நடத்தப்போக, உள்நாட்டில் ஒரு சிலருக்கு முக்கியத்துவம் தராமல் தமிழ் நாட்டிலிருந்து அறிஞர்களைக் கொண்டு வருகிறார்கள் என எங்கள் மீது... கல்லூரிக்கு அவதூறு பெட்டிசன் ( அநாமதேயக் கடிதம்) அனுப்பப் படுகிறது. பிறகு ஏற்பாட்டாளர்தான் சிக்கலில் மாட்டவேண்டி வருகிறது..ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு சார்...." என்று சொல்லிக்கொண்டே இருப்பார் விரிவுரையாளர் தமிழ் மாறன். கனிந்த மரம் மீதுதானே பெட்டிசன் விழும். அப்படியாவது வாழ்ந்து விட்டுப்போகட்டும்..விடுங்கள்.

ஜெமொ கல்லூரியில் நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என்று சொன்னவிடன் நான் தமிழ்மாறனிடம்தான் சொன்னேன். முதலில் அவர்," பரவால சார்..... மாணவெரெல்லாம் விடுமுறை மூடல  இருக்காங்க... கொறைவான பேர்தான் வருவாங்க போல இருக்கு.. என் கல்லூரிய எடுத்திடுங்க சார்.." என்றார். எனக்கு அக்கல்லூரியை பட்டியலிலிருந்து எடுக்க உத்தேசமில்லை. தமிழ்மாறன் மாணவர்களிடயே தீவிர இலக்கியம் வளரவேண்டுமென்று  இறுக்கமான பாடத்திட்டத்துக்கு அப்பாலும் இலக்கியத்தை உள் நுழைப்பவர்.

முதலில் வேண்டாமென்றவர் மறுநாளே..." நிகழ்ச்சி ஏற்பாடாகிவிட்டது...நடத்திடுவோம் சார்..." (குழப்பம் என்ற தலைப்புக்கு குழப்பங்கள் சேராது என்றே நினைத்தேன். எப்படியோ ஒன்றிரண்டு பருக்கை கிடைக்கத்தான் செய்கிறது)

தொடக்கத்தில் ஜெயமோகன் எழுதிய நூல்கள், அவர் வாங்கிய விருதுகள் தொடர்பாக ஒரு பவர் பொய்ண்ட்' காட்சித் தொகுப்பு காட்டப்பட்டது. முதலில் இதெல்லாம் செய்ய வில்லை என்று சொன்னவர், பினாங்கு கல்லூரியின் ஏற்பாட்டைப் பார்த்தவர் மறுநாளே செய்திகளைத்திரட்டி காட்சித்தொகுப்பை அமர்க்கலமாக செய்துவிட்டிருந்தார். இதனால்தான் competency பற்றிய அறிவுறுத்தல் அரசாங்க  சார்புள்ள எல்லா நிறுவனங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது மலேசியாவில்.


அறிமுக உரையை சுவாமி பிரமாந்தா நிகழ்த்தினார். ஜெயமோகனுடைய வெண்முரசு நாவல் தொடர்பான தனது வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொண்டார். சுவாமி ஜெயமோகனின் இலக்கியக் கொள்கையோடு சில பல விஷயங்களில் நேர்க்கோட்டில் பயணிப்பவர். ஜெ மோ வேதாந்தத்தையும் உபநிஷசத்தையும்  பல ஆஸ்ரமங்களில், சுற்றித்திரிந்து  informal கல்வியாகக் கற்றுக்கொண்டவர். அது தொடர்பான நூல்கலை  ஆழமாக கற்றறிந்தவர் என்பது அவருடைய படைப்பை அவதானிப்பவர்களுக்குத் தெரியும். குறிப்பாக உதகை மண்டல நித்ய சைதன்ய யதியின் வழிகாட்டல் அவருக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சி இருந்திருக்கிறது.

சுவாமி தான் செய்த ஆசிரியர் பணியைத் துறந்து, சந்நியாசியாச திட்சை பெற்று சில ஆஸ்ரமங்களில் வேதாந்தத்தையும் உபநிடதத்தயும் கல்வியாகக் கற்றவர். குறிப்பாக சின்மயா மிஷனில்.  எனவே ஜெமோ எழுத்து வீச்சும், இலக்கியத்தையும் ஆன்மிகத்தையும் ஒன்றேபோல முன்னெடுக்கும் அவரின் கோட்பாட்டோடு மிக நெருங்கி  ஒத்துப்போகிறவர் சுவாமி.

அவருடைய அன்றைய பேச்சு ஜெயமோகன் என்ற மாபெரும் எழுத்தாளன் தன்னை ஈர்த்தது எப்படி  என்ற தொனியில் இருந்தது.

விரிவுரையாளர் தமிழ்மாறன் ஜெயமோகனின் நூல்களின் வாசிப்பு தனக்குக் கொடுத்த அபூர்வத் தருணங்களைச் சிலாகித்துப் பேசினார்.
அன்றைக்கு அபூர்வமாக விரிவுரை மண்டபத்தில் குளிர்பதன இயந்திரம்  இயங்கவில்லை. ஆனால் அன்றைய ஜெயமோகனின் உரை மேலும் இலக்கிய விழுமியத்தையும் வெப்பத்தைக் கொடுத்தது.

தன்னுடைய பொன்னிறப் பாதை நூலில் விவரித்த பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். தன்னுடய இந்த இலக்கிய உச்சத்தைத் தொடுவதற்கான அனுபவ வாழ்வை சொன்னார். உலக இலக்கியங்களின் உச்சங்களாக மதிக்கப்படும் பல கதைகளும், அதனை அவர்கள் எழுத நேர்ந்த பின்புலத்தையும் மையமாகக் கொண்டே அவரின் உரை பயணித்தது.

மலேசியாவில் அவர் ஆற்றிய இலக்கிய உரைகளில் இதுவே மிகச் சிறந்த உரை என்றே பலரும் சிலாகித்துப் பேசினர். எனக்கும அதில் உடன்பாடே. கல்லூரிகளில் தனக்குப் பேச உவப்பில்லை என்ற சொன்னவரின் பேச்சா இந்த அளவுக்கா மனதைக் கவரும்படி பேச முடிந்தது என்று வியக்கவைத்தது என்னை.
கடலில் ஊர்ந்து இக்கறைக்கும் அக்கறைக்கும் பயணைக்கும் பயணம்ப் படகு


மறுநாள் இன்னொரு கல்லூரியில் அவர் பேசவேண்டியிருந்ததை ரத்து செய்தது எவ்வளவு பெரிய பிழை என்று உணரவைத்த பேச்சு அது.

சயனத்தில் புத்தர்சிலை



கல்லூரியின் நிகழ்ச்சி ரத்தானதால் பினாங்கு சுற்றுலா தளத்துக்கு அழைத்துப் போக்லாம் என்று முடிவெடுத்தோம். பினாங்கின் அசலான அடையாளங்களான புத்தர் கோயில்கள், பாலம்( இப்போது பினாங்கில் இரண்டு பாலங்கள்) கடலைப் குறுக்காகப் பிளந்து  பிரம்மாண்டாமாக நிற்கும்)
பினாங்கை நிறுவிய கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்ஸிஸ் லைட் சிலை, துறைமுகம் என சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஆஸ்ரம கூட்டுக்கு பற்ந்தௌ
வந்து அடைக்களமாயினர்.
கைகட்டி கால்நீட்டி கிருஷ்ணன்


கிருஷ்ணனுக்கு அன்றைய பயணம் மிகுந்த திருப்தியை அளித்திருக்கக் கூடும். எங்காவது போகணும் என்ற சதாசொல்லிக்கொண்டிருந்தவருக்கு அநதப் பயணம் உவப்பளித்திருக்கக் கூடும்.

பினாங்குத் தீவை அடைய கடலைப் பிளந்து நிற்கும் இரண்டாவது நீண்ட பாலம்




 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த