Skip to main content

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)


 8.குழப்பம் என்று தலைப்பிடல் சரியாக , அதனால் தெளிவு என்ற புதுத் தலைப்பு




மணிமொழி, பூங்குழலி. விஜயா
                                        
காலை 9.00 மணிக்கு பினாங்கு பொட்டேனிக்கல் பூங்காவிலிருந்து கொடிமலைக்குச் செல்வதற்கு நானும் பாலமுருகனும் முதலில் போய்ச் சேர்ந்தோம்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு மழைநீர் பூமியை நனைத்திருந்தது .முதுமை தட்டிய அகன்று விரிந்து மரங்கலிருந்து பூக்கள் காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தது.
விஜயா

கொடிமலை மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளம். முன்னர் சிலமுறை வந்திருக்கிறேன். மலை உச்சியை அடைவதற்கும் மின்சார ரயிலில் மலைப் பயணம் செய்ய வேண்டும். மலை உச்சியை நோக்கிச் செங்குத்தாக ஏறும். ரயில் அப்படியே மல்லாக்க கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சமேற்படும். கிட்டதட்ட மண்ணின் மீது பயணிக்கும் கேபல் கார் போல.ரயில் பாதி தொலைவில் நின்று இன்னொன்றில் ஏறித்தான் பயணத்தைத் தொடரவேண்டும்.
மின்சார ரயில்

ஒரே ரயிலில் உச்சிக்குப் போகலாமே ஏன் இடையில் ரயிலை மாற்றவேண்டும்? என்று கேட்டு ஒரு வெள்ளைக்காரப் பயணி என் அறிவைச் சோதித்துப் பார்த்தான். இரண்டாவது  ரயில் மலை உச்சியை அடைய கூடுதல் சக்திக்கு அதிக வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது அதனால் என்றேன். அன்றுதான் எனக்கும் அறிவியல் மூளை செயல்படுகிறது என்று கண்டுபிடித்தேன். இது நடந்தது என் 17வது வயதில்.

முகாம் நண்பர்கள்

எங்களுக்கு முன்னாலேயெ ஒரு குழு கொடிமலைக்கு புறபபட்டிருந்தது. ஏழு பேர் பயணிக்ககூடிய ஒரு லேண்ட் ரோவரில் நான், பாலா, விஜயா, பூங்குழலி வீரன், தினா  இன்னும் சில நண்பர்களோடு பயணிக்கத் தொடங்கினோம்.மலை நெளிந்து ஏறும் தார் சாலை. ஜெராய் மலையை விட இதன் சாலை ஏற ஏற மேடு உயர்ந்துகொண்டே போனது. கீழே பார்க்கும்தோறும் மலை தன் உயரத் திமிறால் மதர்த்து நின்றது. பயணம் அரை மணி நேரம் பிடித்தது. உச்சியிலிருந்து பினாங்கு கடற்கரை கட்டடங்கள், கடலை ஒட்டி வளர்ந்து எங்களை அந்நாந்து பார்த்துக்கொண்டிருந்தது. பச்சை போர்த்திய மலையும் மரங்களும் , வெளுத்து விரிந்த கடலும், கடலை ஊர்ந்து போகும் இரணடு மிக நீண்ட பாலங்களும் ஒரு அகன்ற காட்சியை காட்டிநின்றன.
முகாம் தொடங்கும் முன்னர்

மெல்ல மெல்ல அனைவரும் வந்து சேர்ந்தனர். 31 பேர். நாங்கள் திட்டமிட்டது 50 பேர். இந்த முகாமுக்கு ஆள் பிடிக்க இன்றைக்குள்ள நவீன ஊடகங்கள் எல்லாவற்றையைம் பயன்படுத்தியும் 31 பேர் மட்டுமே சேர்க்கமுடிந்தது. அவர்களில் வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் ஒரு 10 பேர். எழுதுபவர்கள் 20 பேர். சில எழுத்தாளரல்லாதவர்களோடு பேசும்போது அவர்கள் ஆழமாகவே வாசித்திருக்கிறார்கள் என்று கணிக்க முடிந்தது. அது போதும். முகாமை நகர்ந்திவிடாலம் என்று தைரியம் வந்தது.

அது ஒரு பெரிய பங்களா. வெளைக்காரன் ஆதிக்கத்தில் இருந்தபோது மலை உச்சியே அவனுக்குச் சொர்க்கம். ரப்பர் தோட்டப் புறங்களிலும் அவன்  குடியிருக்க மலை உச்சியைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் விட்டுப்போனதும், 'கருப்புத் துரைகள்' (இந்திய மேனேஜர்கள்) அங்கே புலம் பெயர்ந்தனர். இன்றைக்கு மலசியாவில் ரப்பர் தோட்டங்கள் இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய தலை முறையினரில் ரப்பர் மரங்களைப் பார்க்காதவர்கள் இருக்கிறார்கள்!

பகல் உணவுக்குப் பிறகு முகாம் தொடங்கியது.

முகாம் தொடங்கியது
தொடரும்......

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின