Skip to main content

கையறு நாவல் விமர்சனங்கள், பார்வைகள்.

வணக்கம்,


கையறு நாவல் கிடைக்குமிடம்: கோ.புண்ணியவான் 0195584905 மலேசியா.

என் கையறு நாவல் தொடர்பாக எழுதப்பட்ட விமர்சனங்களை இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன். குறைவான எண்ணிக்கையிலே கையறு நாவலை அச்சிட்டமையால் அவை தாமதமாகக் கேட்போருக்குக் கிடைக்காமல் போகலாம்.எனவே இப்பதிவுகள் இந்நாவல் தொடர்பான விடயங்களை முன்வைத்து நாவல் வாசிக்க ஆர்முள்ளவர்களைத் தூண்டும் நோக்கமுடையவை என்ற காரணத்தால் இவற்றை இங்கே பதிவு செய்கிறேன். தபாலில் குறைந்தது 150 நாவ்லகளை அனுப்பிவிட்டேன். சுங்கை பட்டாணியிலும், கூலிமிலும் (9/10-4.2021 தேதிகளில் நாவலின் அறிமுக நிகழ்ச்சியில் குறைந்தது 100 நாவல்களை வாசகர்கள் வாங்கிச் சென்றார்கள். மேலும் நாவலை புலனத்திலும், முகநூலிலும் விளம்பரம் செய்தமையால் சுமார் 150 நூல்கள் தபால் வழியாக வாசகர்களைச் சென்றடைந்தன. 

இளைய தலைமுறையினருக்கு நம்முடைய இரண்டாம் உலக யுத்த  சப்பானியர் ஆட்சியின் மனிதக் கொடுமைகளை வாசிக்கக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் நாவல்களை கொண்டுபோய்க் கொடுத்துள்ளேன்.  என்னிடம் இப்போது சொற்ப நூல்களே எஞ்சியுள்ளன.  நாவல் வெளியான நாள்தொட்டு



விமர்சனத்துக்கு உள்ளாகி பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கும் சாத்தியங்களை வைத்துப் பார்க்கும் போது எஞ்சிய நூல்களும் விரைந்து விற்று முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது. தேடி வாசிக்க விரும்புவோருக்கு நாவல் கிடைக்கக் கூடிய ஒரே இடம் மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகமும், கைவசம் என்னிடன் எஞ்சியிருக்கும் நூல்கள்  மட்டுமே. இரண்டாம் பதிப்பு வெளியிட இப்போதைக்கு எந்த நோக்கமும் இல்லை அவசியம் ஏற்பட்டாலொழிய.

இனி என் வலைப்பூவில் வெளியாகும் விமர்சனங்களை வாசிப்பதன் வழி நூலைத் வாசிக்க விரும்புவோர் என்னை அணுகலாம்.(0195584905)

முதல் விமர்சனமாக ம. நவீன் செல்லியல் இணையதளத்தில் பேசிய காணொலியை இணைத்துள்ளேன். கீழக்கண்ட லிங்கை அழுத்தினால் ம. நவீன் பேசிய காணொலி கிடைக்கும். நன்றி

https://youtu.be/fNjlp8M0DxQ





Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...