Skip to main content

பதின்மத்தில்

    
                                       Dr.puspha -president of EWRF SUNGAI PETANI







   கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே என் உடல வறுத்தி தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பணி ஓய்வு பெற்றதிலிருந்து தாமதமாக எழுவது பழக்கமாகிப்போக நிர்ப்பந்தங்களின் நெருக்குதலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை துயிலெழல் நிகழ்ந்துவிட்டிருந்தது. எனக்கு மணி பின்னிரவு மூன்றிலிருந்துதான் தூக்கமே பிடிக்க ஆரம்பிக்கும். வாசித்துவிட்டு இணைய உலகில் அலைந்து திரிந்துவிட்டுப் போய்ப்படுக்கும்போது மணி இரண்டரையாகிவிடுகிறது. என்ன செய்வது உடலின் தேவை உடலே பூர்த்திசெய்துகொள்கிறது..
காலை 7.00 மணிக்கு எழுந்து 7.45க்கெல்லாம் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளியை அடைந்தேன். டாக்டர் புஷ்பா என்னை காலை வணக்கத்தோடு கைகுலுக்கி வரவேற்றார். என்னை அவரும் அவரை நானும் முதல் முதலாகச் சந்திக்கிற அந்தக்காலை வேலை உற்சாகமான பொழுதை எனக்கு அளிக்கப்போகிறது என்பதை யூகித்திருக்கவில்லை நான். அவரோடு ஐந்தாறு கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள்  மாணவர்களைப் பதிவதிலும் காலையில் நடைபெறவிருக்கும் மாணவர்க்கான தன்முனைப்புப் பயிற்சிப் பணிகளுக்குமான செயலிலும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.
டாக்டர் புஷ்பா துங்கு அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் 12 ஆண்டுகளாக விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். எளிதில் எல்லாரையும் கவரக்கூடியவர். அவருடைய வாய் மொழியும் உடல் மொழியுமே போதும் அவர்பால் பிறர் அன்பு செலுத்துவதற்கு. பிறருக்கு உதவுவதில் தயங்காதவர். அவர் EWRF என்று சொல்லக்கூடிய கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் சுங்கைப்பட்டாணி கிளையின் தலைவராகப் பொறுப்பேற்று நற்பணி செய்து வருகிறார். சுங்கைப்பட்டாணி சுற்றுவட்டாரத்தில் பயிலும் வசதி குறைந்த மாண்வர்களைத் தத்தெடுத்து ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் படிவம் வரை பயிலும் 60 மாணவரைத் தேர்வு செய்து அவர்களை கல்வியில் மேம்படுத்தும் சீரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அன்றைக்கான ஒருநாள் பயிற்சியைத் துவக்கும் வண்ணம் என்னை ஒரு மணிநேரத்துக்கு பதின்ம வயது பிரச்சினைகளை எதிர்நோக்குவது குறித்து பேசச்சொல்லி அழைத்திருந்தார். நான் ஆரம்பத்தில் இடைநிலைப்பள்ளியிலும் பின்னர் ஆரம்பப்பள்ளியிலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன். அதனால் பதின்ம வயதினரின் உளவியல் குறித்து அனுபவம் சார்ந்த அறிவை வாய்க்கப்பெற்றிருந்தேன். கூடுதலான தகவல்களை இணையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்ற என் எண்ணத்தில் மண்விழுந்திருந்தது. 2 நாட்களுக்கு முன்னால்தான் பேச அழைப்பு வந்ததும் மறுநாள் காலையிலேயே இணையத்தின் உதவியை நாடினேன். இணையத்த்தொடர்பு தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கத்திலும் சுனாமியினாலும் நேர்ந்த இழப்பு இது என்று பின்னர் தெரிய வந்தது. என்னிடம் உள்ள சில புத்தகங்களின் துணையோடு நான் பேசவேண்டியதைத் தயார் செய்துகொண்டேன். பள்ளிகளில் பெற்றோருக்கான விழிப்புணர்வு பற்றி நிறை பேசியிருக்கிறேன். ஆனால் பதினம வயதினர்க்காகப் பேசியது குறைவே.
    காலை ஏழு மணிக்கெல்லம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுவிட்டு டாக்டர் புஷ்பா துவக்க உரையாற்றிய பின் நான் பேசத்துவங்கினேன்.
    உணர்ச்சி வயப்படலுக்கும் அறிவு வயப்படலுக்கும் உள்ள பாதிப்புகளைப் பற்றியும் அதனால் அடையப்போகும் இலக்குகளைப்பற்றியும் ஒரு மணிநேரம் பேசினேன். காலை நேரமாதலால் மாணவர்கள் கவனததைச் சிதறடிக்காமல் என் பேச்சில் ஆழ்ந்திருந்தனர். படி படி என்ற சொற்கள் என் பேச்சில் வராம்ல் பார்த்துக்கொண்டேன். அம்மா, அப்பா, மாமா, அத்தை, அண்ணன், அக்காள், ஆசிர்யர் ,அதிகாரி போதாக்குறைக்கு வழிப்போக்கன்கூட மாணவர்களைப்பார்ர்த்தால் படி என்று மீண்டும் மீண்டும் சொல்லியே படி என்ற வார்த்தையை மாணவர்களின் பரம எதிரியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். படிப்பதற்கான் சூழலும் , பகுத்தறிவும் கொடுத்தாலே போதும். தானாக படித்து வந்துவிடுவார்கள்.
    பேச்சு முடிந்ததும் டாக்டர் புஷ்பா பேச்சு தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரின் அங்கீகாரம் என்னை நெகிழவைத்தது. அன்று மாலையில் நடக்கும் நிறைவு விழாவிலும் எனக்கு அழைப்பு விடுத்தது என்னை கௌரவிப்பதாக இருந்தது. என்னையும் கல்வி சமூகநல ஆய்வு அறவாரியத்தின் பொறுப்பாளராக ஆகும்படி கேட்டுக்கொண்டார். எனக்கும் அதில் ஆர்வம் உண்டு.

Comments

Anonymous said…
This comment has been removed by a blog administrator.

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...