Skip to main content

பதின்மத்தில்

    
                                       Dr.puspha -president of EWRF SUNGAI PETANI







   கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே என் உடல வறுத்தி தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பணி ஓய்வு பெற்றதிலிருந்து தாமதமாக எழுவது பழக்கமாகிப்போக நிர்ப்பந்தங்களின் நெருக்குதலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை துயிலெழல் நிகழ்ந்துவிட்டிருந்தது. எனக்கு மணி பின்னிரவு மூன்றிலிருந்துதான் தூக்கமே பிடிக்க ஆரம்பிக்கும். வாசித்துவிட்டு இணைய உலகில் அலைந்து திரிந்துவிட்டுப் போய்ப்படுக்கும்போது மணி இரண்டரையாகிவிடுகிறது. என்ன செய்வது உடலின் தேவை உடலே பூர்த்திசெய்துகொள்கிறது..
காலை 7.00 மணிக்கு எழுந்து 7.45க்கெல்லாம் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளியை அடைந்தேன். டாக்டர் புஷ்பா என்னை காலை வணக்கத்தோடு கைகுலுக்கி வரவேற்றார். என்னை அவரும் அவரை நானும் முதல் முதலாகச் சந்திக்கிற அந்தக்காலை வேலை உற்சாகமான பொழுதை எனக்கு அளிக்கப்போகிறது என்பதை யூகித்திருக்கவில்லை நான். அவரோடு ஐந்தாறு கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள்  மாணவர்களைப் பதிவதிலும் காலையில் நடைபெறவிருக்கும் மாணவர்க்கான தன்முனைப்புப் பயிற்சிப் பணிகளுக்குமான செயலிலும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.
டாக்டர் புஷ்பா துங்கு அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் 12 ஆண்டுகளாக விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். எளிதில் எல்லாரையும் கவரக்கூடியவர். அவருடைய வாய் மொழியும் உடல் மொழியுமே போதும் அவர்பால் பிறர் அன்பு செலுத்துவதற்கு. பிறருக்கு உதவுவதில் தயங்காதவர். அவர் EWRF என்று சொல்லக்கூடிய கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் சுங்கைப்பட்டாணி கிளையின் தலைவராகப் பொறுப்பேற்று நற்பணி செய்து வருகிறார். சுங்கைப்பட்டாணி சுற்றுவட்டாரத்தில் பயிலும் வசதி குறைந்த மாண்வர்களைத் தத்தெடுத்து ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் படிவம் வரை பயிலும் 60 மாணவரைத் தேர்வு செய்து அவர்களை கல்வியில் மேம்படுத்தும் சீரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அன்றைக்கான ஒருநாள் பயிற்சியைத் துவக்கும் வண்ணம் என்னை ஒரு மணிநேரத்துக்கு பதின்ம வயது பிரச்சினைகளை எதிர்நோக்குவது குறித்து பேசச்சொல்லி அழைத்திருந்தார். நான் ஆரம்பத்தில் இடைநிலைப்பள்ளியிலும் பின்னர் ஆரம்பப்பள்ளியிலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன். அதனால் பதின்ம வயதினரின் உளவியல் குறித்து அனுபவம் சார்ந்த அறிவை வாய்க்கப்பெற்றிருந்தேன். கூடுதலான தகவல்களை இணையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்ற என் எண்ணத்தில் மண்விழுந்திருந்தது. 2 நாட்களுக்கு முன்னால்தான் பேச அழைப்பு வந்ததும் மறுநாள் காலையிலேயே இணையத்தின் உதவியை நாடினேன். இணையத்த்தொடர்பு தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கத்திலும் சுனாமியினாலும் நேர்ந்த இழப்பு இது என்று பின்னர் தெரிய வந்தது. என்னிடம் உள்ள சில புத்தகங்களின் துணையோடு நான் பேசவேண்டியதைத் தயார் செய்துகொண்டேன். பள்ளிகளில் பெற்றோருக்கான விழிப்புணர்வு பற்றி நிறை பேசியிருக்கிறேன். ஆனால் பதினம வயதினர்க்காகப் பேசியது குறைவே.
    காலை ஏழு மணிக்கெல்லம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுவிட்டு டாக்டர் புஷ்பா துவக்க உரையாற்றிய பின் நான் பேசத்துவங்கினேன்.
    உணர்ச்சி வயப்படலுக்கும் அறிவு வயப்படலுக்கும் உள்ள பாதிப்புகளைப் பற்றியும் அதனால் அடையப்போகும் இலக்குகளைப்பற்றியும் ஒரு மணிநேரம் பேசினேன். காலை நேரமாதலால் மாணவர்கள் கவனததைச் சிதறடிக்காமல் என் பேச்சில் ஆழ்ந்திருந்தனர். படி படி என்ற சொற்கள் என் பேச்சில் வராம்ல் பார்த்துக்கொண்டேன். அம்மா, அப்பா, மாமா, அத்தை, அண்ணன், அக்காள், ஆசிர்யர் ,அதிகாரி போதாக்குறைக்கு வழிப்போக்கன்கூட மாணவர்களைப்பார்ர்த்தால் படி என்று மீண்டும் மீண்டும் சொல்லியே படி என்ற வார்த்தையை மாணவர்களின் பரம எதிரியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். படிப்பதற்கான் சூழலும் , பகுத்தறிவும் கொடுத்தாலே போதும். தானாக படித்து வந்துவிடுவார்கள்.
    பேச்சு முடிந்ததும் டாக்டர் புஷ்பா பேச்சு தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரின் அங்கீகாரம் என்னை நெகிழவைத்தது. அன்று மாலையில் நடக்கும் நிறைவு விழாவிலும் எனக்கு அழைப்பு விடுத்தது என்னை கௌரவிப்பதாக இருந்தது. என்னையும் கல்வி சமூகநல ஆய்வு அறவாரியத்தின் பொறுப்பாளராக ஆகும்படி கேட்டுக்கொண்டார். எனக்கும் அதில் ஆர்வம் உண்டு.

Comments

Anonymous said…
This comment has been removed by a blog administrator.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த