Skip to main content

இந்த முறை இந்தியர்களின் ஓட்டு யாருக்கு?

    



      

         இரண்டு வாரங்களுக்கு முன்னால் முன்னால் தமிழாசிரியர்கள் மாநாடு நடந்தது. நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த துணையமைச்சர் வரவில்லை.ம.இ. கா காரர்.  அவருடைய பிரதிநிதியாக  பினாங்கின் முக்கியமான தலைவராக இருக்கும் கிருஷ்ணன் வந்திருந்தார்.
   
       அவரை உரையாற்ற அழைத்தார்கள்.  நாடு தேர்தல் காய்ச்சல கண்டிருந்த சமயத்தில் அரசியல் வாதிகள் கிடைக்கும் மேடை வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிந்த விஷயம்தானே.
   
       அவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
    
       இன்றைக்கு பிரதமர் இந்தியர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிறார். முன்பு போலல்ல. 2008ல் நடந்த ஹிண்ட்ரப் புரட்சி நல்ல பலன்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது போன்ற புரட்சி நடந்திராவிட்டால் இந்தியர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே தொடர்ந்து நடத்தப் பட்டிருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார். ( மலேசியா ஒரு இனவாத நாடு. இனப் பாகுபாட்டைச் சட்டப் பூர்வமாகவே அமலாக்கம் செய்யும் சாதூர்யத்தை இங்கே காணலாம்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாலாய்க்காரர்களுக்கான் சிறப்பு சலுகைகளைக் கேள்வி முறையின்றியே செய்து வந்தார்கள். இன்னமும் தொடர்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியர்களுக்கான அடிப்படை தேவைகள் பெருவாரியாக நிவர்த்தி செய்யப் படாதிருந்த காரணத்தை முன்வைத்துதான் ஹிண்ட்ராப் புரட்சி நடந்தது.
   
     சரி கதைக்கு வருவோம்.

    அவர் பேச்சில் அரசு இன்றைக்கு எவ்வாறெல்லாம் மாறிக்கிடக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் செய்யாததை இப்போது நம் பிரதம்ர் நிறைவேற்றி வருகிறார் பாருங்கள் என்று தன் பேச்சை தேர்தல் பிரச்சாரமாக மெல்ல நகர்த்திகொண்டிருந்தார்.

    "நீங்க இங்க அரசியல் பேசாதீங்க... அப்புறம் நாங்களும் பேசவேண்டி இருக்கும்," என்று நண்பர் வேணுகோபால் (முன்னால் தலைமை ஆசிரியர்)  இடை வெட்டினார்.

   "என்னை நீங்கள் பேச அழைத்திருக்கிறீர்கள். நான் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?" என்று சமாளித்தார் பேச்சாளர்.

    பேராக்கிலிருந்து வந்தமுன்னால் தலைமை ஆசிரியர் உடனே எழுந்து.. " நீங்க என்ன  வேணுண்ணாலும் பேசுங்க... பின்னால நாங்க
முடிவெடுத்துக்குறோம்"  என்றார்.     
             அவருடைய கருத்துக்கும் முன்னால் பேசிய வேணுகோபாலின் கருத்துக்கும்
பெரிய  வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை! மாணிக்கம் சொல்லாமல் சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான். இருவருமே இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற முடிபே தெரிகிறது. முன்பு இவர்களெல்லாம் தேசிய முன்னணிக்கு வாக்களித்திருப்பவர்களாக இருக்கலாம். முன்னர் தொண்ணூறு விகிதம் இந்தியர்கள் ஆளுங்கடசிக்கே வாக்களித்து வந்தார்கள் என்ற ரீதியிலிருந்தே இதனைச் ' அவர்கள்தானே என்ற மாயையில் வாக்களிப்பது நடந்து வந்தது. ஏனெனில் இந்தியர்களைக் கொண்ட ம.இ.கா அரசியல் கட்சி ஆளுங்கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்ததாலும், ஒரு அமைச்சரும் இரண்டு துணை அமைச்சர்கள் பதவிகளும் நம்முடைய 'அடையாளத்துக்கு' அங்கீகாரமாக இருக்கிறதே என்ற திருப்தி முகாந்திரமான காரணமாக இருந்ததாலும்,    என்று சொல்லலாம்.(இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன)

      ஆனால் அதிலிருந்து சமூகத்துக்குப் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதை மக்கள் அவதானிக்கத் தவறி இருந்தனர். (உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற கறாரான கெடுபிடி  மக்களின் வாயைக்கட்டிப்போட்டு இருந்தது) என்பது முக்கியமான காரணம். இந்தியர்களைப் புறக்கணித்த அரசின் கொள்கையை- வாயை அடைத்துவைத்திருந்த உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பூச்சாண்டியை மிக ஆவேசமாக உடைத்தெரிந்ததுதான் இந்த ஹிண்ட்ராப் இயக்கமாகும். அதனால்தான் 2008 ல் நடந்த (புரட்சிக்குப் பின்னர்) இந்தியர்கள் முதன் முறையாக, துணிச்சலோடு ஆளுங்கட்சியை எதிர்த்தே வாக்களித்தனர். அரசும் காலங்காலமாக தன் கைக்குள் வைத்திருந்த மூன்றில் ஒரு பங்கு பெரும்பாண்மையை இழநதுவிட்டிருந்தது என்பது பழைய கதை! அந்தப் பழைய கதைதான் இன்றைக்குப் பெரிய தாக்கத்தை இந்தியர்களிடையே விட்டுச் சென்றிருக்கிறது.

       சரி மேற்சொன்ன சம்பவம் ஆளுங்கட்சிக்கு நம் ஆதரவு இல்லை யென்று நீரூபிக்கிறது அல்லவா?

       ஆனால் இன்னும் சில கருத்தாக்கங்கள் தேசிய முன்னணியை (இன்றைய ஆளுங்கட்சியை) ஆதரிக்கவே செய்கிறது என்பதையும் கட்டியம் கூறுகிறது.

       முன்னால் தலைமை ஆசிரியர் ஒருவர்... அவருக்குப் பொருளாதாரத்தில் எந்தக் குறையுமில்லை, அவர் சொன்னார்.....


      "எந்தக் காலத்துலையா அரசாங்கம் வருமானம் குறைவா உள்ளவங்களுக்கு ஐநூறு வெள்ளி கொடுத்தது. இப்ப உள்ள பிரதமர் கொடுக்கிறாரே.   தழ்ப்பள்ளிகளை நிர்மாணிக்கவும், புதிய தமிழ்ப்பள்ளி கட்டவும்
ஆணையிட்டிருக்காரே... கோயில்களுக்கெல்லாம் வாரி வாரி கொடுக்கிறாரே.. நான்....... தேசிய முன்னணிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்," என்கிறார்.

       இவர் பழையதை மறந்துவிட்டார்.  இந்த ஐம்பாதாண்டுகளில் நமக்கு இழைக்கப் பட்ட பெரிய இழப்புகளை அருதியாக மறந்துவிட்டிருக்கிறார். அதனால் சமூகத்துக்கு நேர்ந்த பாதிப்புகளை பார்க்கத் தவறிவிட்டார் என்றே படுகிறது.

        இவர் போல எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கும்போது நம் தலை எழுத்து மாறப் போவதில்லை என்றே அஞ்சுகிறேன்.

    

   












 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த