Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

5. நீண்ட நெடிய பயணம்.












டில்லியில் 2 மணிக்கு ரயில் ஏற ஒன்றரை மணிக்கெல்லாம் நிலையத்துக்கு வந்து விட்டோம். இரண்டு இரவுகள் மட்டுமே அமிர்த சரஸில் தங்குவதால் சிறிய பயணப்பையிலேயே இரண்டு நாட்களுக்குத் தேவையான் உடைமைகளை எடுத்துக் கொண்டோம். அப்படியும் பயணப்பை கனக்கத்தான் செய்தது. நீண்ட நேரம் சுமக்கையில் தோள் பட்டை 'னங்கென்று விண்டது.
பயணப் பேருந்திலிருந்து இறங்கி ரயில் நிலையத்தில் அம்ரிஸ்டார் பிலாட் பாரத்துக்குச் செல்ல அரைமணி நேரம் நடக்க வேன்டும். படியில் ஏறி இறங்க வேண்டும். மக்கள் நெருக்கடி மோதும், முட்டும். சுமைதூக்கும் கூலிகள் நம்மை பொருட்படுத்தாது விரைந்து நடப்பார்கள். நாம்தான் ஒதுங்கி வழிவிட வேண்டும்.

ரயில் நிலையத்தை அடைவதையும் கிளம்புவதையும், அறிவித்தபடியே இருக்கிறார்கள். நம் உடமைகளை நம் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டி வரும் அறிவிப்பு நம்மை உஷார் படுத்துகிறது. வெளி நாட்டில் இருக்கும்போது இயல்பாகவே இரட்டிப்பு கவனத்துடன்தான் இருப்போம். தனியாளைப் பயணம் செய்யும்போது  மேலும் பலமடங்கு உஷார் வந்துவிடும்.

நாங்கள் பயணம் செய்த ரயில் நிலையத்தை வந்து அடைய அரைமணி நேரம் தாமதம். இந்தியாவில் இது மிகச் சாதாரணம். ஆயிரக்கணக்கான மைல் தூரத்துக்கு தண்ட வாளங்கள் போடப்பட்டிருக்கின்றன. நாம் பயணம் செய்யும் பாதையில் எங்காவது தடங்கல் நேர்ந்தால் பயணம் தாமதமாவது சகஜம். அரை மணி நேரம் பரவாயில்லை. சில சமயங்களில் அரை நாள்கூட ஸ்தம்பித்துவிடும், எங்காவது ஆள் நடமாட்டமே இல்லாத 'அத்துவான' இடத்தில்.


                அம்ரிஸ்டார் - பரபரப்பான பட்டணத்திலும் குதிரை வண்டிகள்

வெளியே மூத்திர வாடை நிற்க விடாமல் செய்கிறது. ரயில் நிலையத்தில் நிற்கும்போது சிறுநீர் கழிக்காதே என்று எழுதிப்போட்ட அறிவிப்பை யார் பொருட்படுத்துகிறார்கள்?

 உள்ளே புகுந்தவுடன் வாடை கம்மியாகிவிடுகிறது. முதல் வகுப்பு குளிர் சாதன வசதியுடையது. நிம்மதியாக சாய்ந்து உட்கார வசதியான இருக்கைகள்.

அமர்ந்தவுடன் டீ கொண்டு வருகிறார்கள். சற்று நேரத்தில் சோனா பப்டி, கேக்கும் காப்பியும் பரிமாறுகிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீர் புட்டி கொடுக்கிறார்கள். சற்று நேரத்தில் பகல் உணவு வந்துவிடும். இவற்றை எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்துவிடும். பயணமோ ஆறரை
மணி நேரம் போகும். தன்னுடைய பரிமாறும் வேலைகளை முடித்துக்கொண்டு அக்கடா என்று உட்காரவே இப்படி அடுத்தடுத்து செய்கிறார்கள் பணியாட்கள். தூங்குவதற்கு நேரத்தை விரட்டிப் பிடிக்கும் தந்திரம் இது!







ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் , கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த பணியாளிடம்
கேட்டேன். " என்னப்பா இது ஆறரை மணி நேரத்துக்கு விட்டு விட்டு உணவு தரவேண்டியதை ஒரே மூச்சில் தருகிறீர்களே, நியாயமா?"

அவன் தலையைச் சொரிந்து கொண்டே 'ரெஸ்ட் சார்" என்றான். அவன் முகத்தில் ஒரு மன்னிப்புப் புன்னகை தோன்றி மறைகிறது. நமக்கும் கொஞ்சம் கரிசனம் வந்துவிடுகிறது.

தின்னா தின்னு தின்னாவுட்டா போ என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். உணவை உண்டு முடித்தோமோ இல்லையோ, மிச்சத்தை நீக்கிவிட்டு, உடனே அடுத்த உணவு வந்துவிடும். கடைசியில் கொண்டு வந்து வைத்த இரவு உணவைச் சாப்பிடக் கூட முடியவில்லை.  ஒம்பவில்லை. டீயும், தேனீரும் கேக்கும், பலகாரமும், வயிற்றுக்குள்ளிருந்து அடுத்த படி நிலைக்குப் போக மறுத்துக்கொண்டிருந்தது. கழிவறைக்குப் போக நேர்ந்துவிடுமோ என்ற மன உலைச்சல் ஊடுறுத்துக்கொண்டே இருக்கிறது.

ஒருமுறை கழிவறைக்கு போய்விட்டு வந்த பிறகு, வேண்டாம் இந்த வில்லங்கம் என்றே தோன்றியது.

கழிவறைக் குழி வழியாகப் பார்க்கும் போது தண்டவாளப் பாதை தறிகெட்டு ஓடுவதைக் காணமுடியும். சிறுநீரோ, மலமோ, வாந்தியோ அதன் வழியாக ரயில் பாதையில் தான் கொட்டும். நீர் ஊற்றி கழுவிவிடும் அளவுக்கு தண்ணீர் வசதி
ரயிலில் இல்லை, குழாயோடு சின்னச் சங்கிலியில் பிணைக்கப் பட்ட ஒரு குவலை. அதற்குள் தண்ணீரப் பிடிக்க சற்று நேரம் இடைவிடாமல் பிடியை அழுத்தியவண்ணம் இருக்க வேண்டும். குழாய் கழிவுக்குழிக்கு மிக அருகில்
தரையோடு பிணைக்கப் பட்டிருக்கும். ரயில் ஓடும்போது  ஆடிக்கொண்டே  பீய்ச்சப்படும் சிறுநீர் அதில் பட வசதியாக வைக்கப் பட்ட குவலை. எப்படி அதனைத் தொடுவது? என்னதான் முதல் கிலாஸ் வகுப்பாக இருந்தாலும் கழிவறைச் சுத்தம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது இந்தியாவில். கழிவறைச் சுத்தம்பற்றி ஏண்டா இப்படி அலட்டிக்கிறீங்க என்பது போன்ற அக்கறைன்மை நாடு முழுதும் உள்ள மக்களிடம்  காணமுடியும்.

ஆமாம் ! குவலையை ஏன் நீர்க் குழாயோடு இரும்புச் சங்கிலியில் கட்டிப் பிணைத்திருக்கிறார்கள்? அது கூட பலமுறை களவாடப் பட்டிருக்கிறது என்பதால் தானே?

பரிமாறப் பட்ட உணவெல்லாம் இந்த கழிவறைக்கு அருகே உள்ள சிறிய அறையில்தான் தயார் செய்கிறார்கள். என்ன செய்வது குறைந்தது எட்டுமணி நேரத்துக்கு உண்ணாமல் இருக்கமுடிந்தால் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளலாம். அல்லது  முன்னேற்பாடாக கையோடு உணவு கொண்டு வந்திருக்கலாம்.


பகல் நேரப் பயணமாதலால் கழிவறை நினைவெல்லாம் மறுதலிக்கும் படி பச்சை பூசிக்கிடக்கும் வயல் வெளி சன்னலுக்கு வெளியே. திட்டுத் திட்டாய் கிராமங்கள். கோதுமை, அரிசி வயல்கள்தான் அவை. செழித்துக் கொழுத்துக் காட்சி தருகிறது.

கண்களை ஈர்க்கும் அந்த உன்மத்த பூமி செழிப்புக்கு  இரண்டு காரணங்கள் சொல்வேன்.

கங்கையின் கிளை நதி இங்கே தாராளமாய் ஓடுகிறது. பஞ்சாப்பில் பஞ்மில்லை. இரண்டாவது காரணம் தண்டவாளத்தில் மனிதர்களிடமிருந்து ஊறும் வற்றாத 'நிதிநீர்"
                                              அணிவகுப்பின் போது
                                         
காலை அமிரிஸ்டாரில் தங்கிவிட்டு பொற்கோயில், காளிக்கோயில், தீப்பொறி பறக்கும் பாகிஸ்தான்  இந்திய எல்லையில் தினமும் நடக்கும் ராணுவ அணிவகுப்பு பார்க்கத் திட்டம்.
              

 ( வாசிப்பவர்கள் ரெண்டு வார்த்தை கருத்துரைத்துவிட்டுப் போகலாமே)

தொடரும்......





 

Comments

கழிவறை சுத்தம் இந்தியாவில் - சுத்தம்ம்ம்.
ko.punniavan said…
பழகிப்போய்விட்டது. அதுவே பண்பாடாகிவிட்டது அவர்களுக்கு.நன்றி

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின