Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

6. போராட்டமும், ராணுவ நுழைவும்

                                                                     பொற்கோயில்


                                                   பொம்மைப்    பொற்கோயில்



ரரயில் அம்ரிஸ்டாரைச் (அமிர்த சராஸ்) சேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. இடை இடையே பெரிய பட்டணங்களில் பத்து நிமிடம் களைபாற நிற்கிறது ரயில். ஒவ்வொரு பட்டணத்தின் சிறப்பு பற்றியும் சுருக்காமாக சொல்லப்படுகிறது. பிலாட் பாரஙளில் அப்பட்டணத்தின் ஏற்றுமதிப் பொருட்கள் மூட்டை மூட்டையாய் காத்திருக்கின்றன.

நாங்கள் குடும்ப சகிதமாக  'இன்னோவாவில்'முதல் முறை வந்த போது பல இடங்களில் இறங்கி   இளைப்பாறினோம். டபா(உணவு)  என்று அழைக்கப்ட்டு உணவகங்களில் பஞ்சாப்  மக்கள் விரும்பி உண்ணும் உணவை உண்டு மகிழ்ந்தோம். இனிப்பு புளிப்பும்,கலந்த கலவை உணவு. நம்முடைய ஊர் பசும்போர் மாதிரி பலவகை உணவு வகைகள் கலந்தது. ஆனால் இரண்டாவது முறை சாப்பிட வேண்டுமென்ற ஆசை இம்முறை நனவாகி நாவின் நுணியோடு நின்றுபோனது. இம்முறை ரயிலில் பயணம் செய்ததும் , கூட்டத்தோடு வந்ததும்தான் காரணம். கூட்டத்தோடு வரும்போது அதன் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்விட்டால் மீண்டும் தேடிப்பிடித்துக் கொண்டு வரவேண்டும். அப்படியெல்லாம் அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லைதான். ஆனாலும் கடைத்தெரு பக்கம் போய்விட்டால்தான் பெண்மணிகளின் கால்கள் அதன் போக்கில் போய்விடுகிறது. பொருட்களைப் பார்க்குந்தோறும் மோன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். உற்ற தோழிகளின் தோழமைகூட சோதனைக்கு உள்ளாகும் இடம் இந்த கடைத்தெருக்கள்தான்.




ரயில் நிலையத்தில் இன்னொரு பேருந்து காத்திருந்தது. விடுதிக்குப் போய் குளித்து கால் நீட்டிப் படுக்க வேண்டுமென்றே தோன்றியது. ரயிலில் சாய்ந்துதான் தூங்கினேன்.கால் நீட்டிப் புரண்டு படுத்துறங்கும்போதுதான், மனித சுதந்திரம் என்பதன் உண்மைப் பொருள் புலனாகிறது.

விடுதியை அடைந்தவுடனேயே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் சங்கமமானோம்.

மறுநாள் காலை  பஞ்சாப்பில் அம்ரிஸ்டாரில் இருக்கும் குருதுவாரா பொற்கோயில் விஜயம். பொற்கோயிலின் கோபுரமும் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. காலைக் கதிர்கள் பட்டு தகதகவென மின்னியது. தங்கத்தால் ஆன பூமிச்சூரியன் போல. குளத்து நீரில் இன்னொரு கோயில் தக தக்க்கிறது. புனித நீரைல் நீராடியும். தீர்த்தமாயும் பருகுகிறார்கள் பக்தர்கள். கோயில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. ஆனால் கோயிலுக்கு வெளிப்புறம் பொருட்படுத்தப் பட்டதாய்த் தெரியவில்லை. கோயிலில் மட்டும்தான் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் போலும்.

பொற்கோயில் ஏற்கனவே பார்த்ததுதான். கோயிலைவிட கோயிலில் நிரந்தரமாய்க் குடி கொண்டுள்ள ஒரு வரலாற்று உண்மை நம்மை நம்மைச் சில்லிடவைக்கிறது.

பஞ்சாப்பில் நடந்த ஒரு தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. அது ஆட்சியைப் பிடிக்க பாகிஸ்தான் அரசு பின்புலமாய் இருந்திருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே பஞ்சாப்பும் தனி நாடாக வேண்டுமென்ற  ஆசை கோரிக்கியாக மாறி, வெறியாக உருவெடுக்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அந்த கோரிக்கைக்கு பிடிகொடுக்கவில்லை. வெறி போராட்டமாக மாறுகிறது. சொல்லிச் சொல்லிப் பார்த்த இந்திரா வேறு வழியில்லாமல் கட்ட்டுப் படுத்த ராணுவத்தை அனுப்புகிறார். அப்போது போராளிகளும் அயுதங்கள் வைத்துக்கொண்டு ராணுவத்தோடு சண்டையிடவே ஆயத்தமாகிறது. அவர்கள் பொற்கோயிலுக்குள் அடைக்களமாகி பாதுகாப்போடு சண்டையிட முற்படுகிறார்கள். பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழையாது என்றஒரு வரட்டு தைரியத்தில் . ஆனால் இந்திரா போராட்டக் காரகளை அடக்க, புனித தள்மான பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கும் படி உத்தரவிடுகிறார் காந்தி. அப்போது போராளிகள் பலர் சுடப்பட்டு இறக்கிறார்கள். ராணுவத்தில் சிலரும் பிணமாகிறார்கள். கோயிலிலும், அதன் வளாகத்திலும் ரத்தக் களறி நடதேறுகிறது.

அது நடந்து ஓரிரு ஆண்டுகளில் சொந்த தற்காப்பு அதிகாரிகளாலேயே  தன் இருப்பிடத்திலேயே சுட்டுக் கொல்லப் படுகிறார் இந்திரா. துப்பாக்கிச் சூடு (எம்16)  நடத்தியவர்கள் பஞ்சாபிகள்தான். நம்பிக்கைத் துரோகம் அது. இந்திரா இறந்த பிறகு டில்லியிலும் மற்ற இடங்களிலும் உள்ள எந்தப் பாவமும் அறியாத பஞ்சாபிகள், இந்திராவின் அனுதாபிகளால் தாக்கப் படுகின்றனர். இது வரலாறு. இந்தக் குருதி வரலாறை சுமந்தபடியே காட்சி தருகிறது பொற்கோயில்.




தொடரும்.........................

Comments

PUNNIAVAN said…
பொற்கொயிலை பார்க்க வேண்டும் போல் இருக்கு,சார். இரத்தத்தை குடித்துத் தான் வரலாறு பசிதீர்த்திருக்கிறது.
தலைப்புக்கான விளக்கம் இன்னும் வரவில்லையே.. அடுத்த பகுதியில் வாசிக்கச்செல்கிறேன்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த