Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் - முத்தம் 6


முத்தம் அன்பைப் பரிமாறும் உடல் மொழி.
போண்ட் மஜிக்கா( போண்ட் =founton) majikkaa + majic
பயணம் செய்யும் போது நமக்குள் நிலைத்திருக்கும் தீராத அச்சம் நம்முடைய கடப்பிதழ். இப்பொழுதெல்லாம் பாஸ்போர்ட்டை கடத்துவதால் அதற்கு கடப்பிதழ் என்று தமிழ் செய்தது பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெளிநாட்டில் எங்குச் சென்றாலும் அதனைக்கையோடு எடுத்துச்செல்வது கடமையாகக்கொள்ளவேண்டும். காணாமற்போகாமல் கண்களை இமைக்காப்பதுபோல காக்கவேண்டியது சிரமமான ஒன்றுதான். நாம் பாரக்குப் பார்க்கவே போகிறோம். கவனமெல்லாம் காணும் காட்சியில் பதிந்து இருக்கும் நேரத்தில் கடப்பிதழ் கடக்கப்பட்ட இதழானால் நம் கதி அவ்வளவுதான். ஒரு முறை என் நண்பர் டார்ஜிலிங்கில் கடப்பிதழைக் காணடித்துவிட்டார். இன்னொரு நண்பர் சென்னையில் காணடித்துவிட்டார். அவர்கள் மலேசியன் என்று நீரூபிக்க ஒரு மாதம் நடையாய் நடந்தார்களாம். இங்கிருந்து மந்திரிகள் தலையிடவேண்டியிருந்ததாம். ஐரோப்பாவில் ஒரு மாதம் இருந்தால் நம்முடைய சொந்தங்கள் சொத்தெல்லாம் செலவு செய்தாலும் நாடு வந்து சேர முடியாது. கடப்பிதழ் இல்லாதவனைத் தீவிரவாதி கண்கொண்டே பார்க்கும் உலகம் இது. அதனால்தான் என் பையைக் கங்காரு குட்டிபோல  எந்த நாட்டுக்குப் போனாலும் இடுப்பில் கட்டியே வைத்திருப்பேன்.ஆனால் பயணங்களில் நமக்கு மிகப்பெரிய திறப்பு கிடைக்கும். அந்நிய மண் அளப்பரிய அனுபவத்தை அள்ளிக் கொடுக்கத் தவறுவதே இல்லை.

பார்சிலோனா ஸ்டேடியத்திலிருந்து  போன்ட் மஜிக்கா என்ற நீர்விளையாட்டு கண்காட்சி மையத்துக்குச் சென்றோம். அந்தி நேரத்தில் மக்கள் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. மிகப் பிரும்மாண்டமாக கட்டப்பட்டிருந்த இந்த நீர்விளையாட்டு மையம்  1929ல் கட்டியது என்பதே அவர்கள் தொழில்நுட்ப ரீதியில்  30/35 ஆண்டுகள் நம்மை முந்தி  இருக்கிறார்கள் என்று தெரியும்..

இந்த பெரிய செயற்கை நீர்வீழ்ச்சி 30 அடி நீளத்துக்கு மேலிருந்து தடையில்லாமல் விரிக்கப்பட்ட வெண்திரைபோல கொட்டிக்கொண்டே இருக்கிறது. இதில்தான் இரவில் வண்ண நீர்விளையாட்டு நடைபெறும். மின்சார கதிர்வீச்சைக்கொண்டு வண்ணங்களால் ஆன ஆப்ஸ்ட்ரெக்ட் ஓவியங்களை வரைகிறார்கள்.

பகலில் வெண்மை கொட்டும் நீராகத் தெரிந்தது இரவு பார்வையில் இப்படி.
 30 நிமிடத்துக்குத் தொடர்ந்து கண்களுக்கு விருந்தாக படைக்கப்படும் இது சுற்றுப்பயணிகளைக் களைப்பைத் தீர்த்து நீர் ஓவியத்தை கண்களுக்குள் நிரப்பியே அனுப்புகிறது.



இதே போன்று சிங்கப்பூர் சந்தோஷா தீவிலும் ஒர் காட்சியைப்பார்த்தேன்.

நீர்வீழ்ச்சியில் அருகில் நின்று படம் எடுத்துக்கொள்ளும்போதே ஆடை நனைந்துவிடுகிறது. நீர்வீழ்ச்சிக்கு மேல் தளத்திலிருந்து பார்த்தால் பார்சிலோனா பட்டணம் முழுமையும் காட்சியாக விரிகிறது.

ஸ்பேய்ன் நேரப்படி 10.00 மணிக்குத்தான் இங்கே அந்தி சாய்ந்து இரவாகிறது. ஆனால் 5.00க்கெல்லாம் விடிந்துவிடுகிறது. ஐரோப்பியர்கள் உழைக்கும் நேரம் அதிகமாகும்.பகல் நீள்வதால். அவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த நீண்ட உழைக்கும் நேரம் என்றே நான் நினைக்கிறேன். நம்முடைய முன்னால் பிரதமர் மஹாதிர் பதவியேற்றவுடன் மலேசிய நேரத்தை அரை மணி நேரம் பின்னால் தள்ளி புதிய நேரத்தைக்கடைபிடிக்க வகை செய்தார். இது அங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதாக இருக்கலாம்.நல்லவற்றைக் காப்பியடிப்பதில் தப்பில்லை ஆனால் அதனைச் சரியாகச் செய்யாதிருப்பதே குறையை விட்டுசெல்கிறது.

போண் மஜிக்கா, உல்லாசமாக கழிக்கும் இடமென்பதால் இங்கே முத்தக் காட்சிகள்  நிறைய நம்மைக் குறுக்கிடுகின்றன. ஆமாம் குறுக்கிடுகின்றன! நீங்கள் பாட்டுக்கு நடந்துபோனாலும் உங்களை வழிமறிக்கின்றன இந்த முத்தங்கள். நாம் பார்க்க வெட்கப்படுகிறோம். ஆனால் அவர்கள் இறுக அணைத்து உதடு முத்தததை அழுத்தமாகவே கொடுப்பதில் காலம் இடம் எதுவென்று பார்ப்பதே இல்லை. விடைபெறும் நேரத்தில்முத்தப் பகிர்தலை தாராளமாகப் பார்க்கலாம். ரயில் பேருந்து நிலையங்கள், சாயங்காலத்தில் காற்றாடும் நேரத்தில் மிக மிகுதியாக இருக்கும். முத்தம் ஒரு நிமிட நேரம் கூட நீடிக்கிறது. பிரிபவர் எத்தனை காலத்துக்குப் பிறகு வருவார் என்பதைப் பொறுத்தே முத்த நேரம் நீடிக்கிறது .ஹி ஹி.எந்த ஜோடி நீண்ட நேரம் முத்தம் கொடுத்தார்கள் என்பதைப் கின்னஸ் புத்தகத்தில் பதிவும் செய்திருக்கிறார்கள்.
கேமராவை எடுப்பதற்குள் முடித்துக்கொண்டார்கள்

முத்தங்களை இங்கே அன்பின் பரிமாற்றமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அது  இச் இச் என்றாலும் இச்சையைத் தூண்டுவதாக இருக்காது. எங்களைப்போன்ற ஆசிய சுற்றுப்பயணிகள் அதையும் ஒரு  காட்சியாகவே  கண்டு பரவசமடையலாம். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. வேலை அது பாட்டுக்கு நடக்கிறது. நாம்தான் அதிசயமாகப் பார்க்கிறோம். நாம் அன்பை அடைத்து வைக்கிறோம், அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். வெளிப்படுத்தலில்தான் ஊக்கங்களும் வெற்றிகளும் கூடும் என்றே நினைக்கிறேன்.அதனால் ஜன நடமாட்டம் உள்ள இடங்களில் கட்டி அணைத்து முத்தம் கொடுங்கள் என்று பொருள் கொள்ளவேண்டாம். அன்பைப்பரிமாற கனிந்த வார்த்தைகள் கூட போதுமே.

ஆனால் நம் கவிப்பேரரசு யுத்த சத்தம் கேட்டால் முத்தச் சத்தம் முடியும் என்கிறார். எனக்கென்னவோ முத்தச்சத்தம் மிகுந்தால் யுத்தசத்தம் வராது என்றே நினைக்கிறேன்.

 முத்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் வேறு இடத்துக்குப் போவதில்லையா ?
வாருங்கள்....

மீண்டும் விடுதிக்குள் நுழைந்து படுக்கையில் சங்கமமாகிறோம். ஒரு நாள் தூக்கமின்மை இமைகளை இழுத்து மூடிவிடுகிறது.


லா செகாட்ரா பிரம்மாண்ட தேவாலயம்.

மறுநாள் காலை சீசன் டிக்கட்டைப் பயன்படுத்து  லா செகாட்ரா பேமிலியா என்ற புராதன கிருஸ்த்துவ (ரோமன் கேத்தலிக்) தேவாலயத்துக்குச் சென்றோம். 182l  இதன் கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டது. ஆனால் முடிவுறவில்லை. அதனை வடிவமைத்த அந்தோனி கௌடா 1926ல் காலமாகிவிட்டதால் அது முழுமையடைவதற்கு முன்னர் கட்டுமானம் நின்று விட்டது. 2010ல் ஐக்கிய நாட்டசபையின் யுனெஸ்கோ  நிறுவனம் இதனை சர்வதேச வராற்றுச்சிறப்பிடங்களில் ஒன்றாய் அங்க்கீகரித்திருக்கிறதே இதன் பெருமை.அருகிலிருந்து பார்ப்பதைவிட போண்ட் மஜிக்கா உச்சியிலிருந்து பூதக்கண்ணாடி வழி பார்க்கும்போதே அதன் நுட்பம் அசத்துவதாக இருந்தது. அதனால் அருகில் போய்ப்பார்க்கவேன்டும் என்று நினத்தோம்.

ஒரு நீண்ட வரிசை காத்திருந்தது.அந்த தேவாலயத்தின் அரைசுற்றுக்கு வரிசை நீண்டிருந்த்தது. எப்படியாவது இதைப் பார்த்துவிடவேண்டும் என்று மருமகன் துடித்தார். இணையத்தில் டிக்கட்  புக்செய்தால் அதற்கு அவர்கள் நேரம் நிணயிக்கிறார்கள்.
என் மகள் ஒரு ஆலோசனை சொன்னால். "அப்பா நீங்க நொண்டி நொண்டி நடந்துபோய் அங்கவீனர்களுக்கான சிறப்பு சலுகையில் டிக்கட் வாங்கி வந்துவிடுங்கள் என்றார். நான் சொன்னேன் பாசாங்காக வெகு நேரம் நொண்டி  நடந்தால், உள்ளபடிக்கே நொண்டியாகிவிடுவேன் என்றேன். இன்னும் நிறைய ஊர்கள் சுற்றவேண்டும்.

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?

தொடரும்......

Comments

வணக்கம்
ஐயா.

நானும் இப்படியான இடங்களுக்கு சென்றால் எப்படிப்பட்ட இடங்களை பார்க்க வேண்டும் என்ற புரிதலை தங்களின் பதிவு எடுத்துக்கூறும். அழகிய புகைப்படங்களுடன் பதிவு ஒளிர்கிறது தொடருங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த