Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் .8


 உள்ளாடையில் விநாயகப் பெருமான் முத்தம் 8

பார்சிலோனா பேரங்காடியில் இயங்கும் ஒரு கேப்பிச்சினா கடையில் இளைப்பறிவிட்டு  அங்காடிக்கடைகளை ஒரு வலம் வர ஆரம்பித்தோம். அப்போதுதான் பெண்கள் உள்ளாடையில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். விநாயகர் உள்ளாடைக்குள் எப்படிப்போனார்?எப்படி ஆனைமுகத்தான் ஸ்பேய்ன் வரைக்கும் வந்திருக்க முடியும்? சுற்றுலா மேகொண்டிருப்பாரோ? உள்ளாடையில் ஒரு ஓவியமாக இருப்பது அபூர்வமான காட்சியாக இருந்தது. ஆம் கணேசன் தூணிலும் இருப்பார், பெண் உள்ளாடையிலும் இருப்பார். இங்கே காலணியில் டி சட்டையில் இருந்ததையே இந்து சமயம் சங்கங்கள் எதிர்ப்புக்காட்டியது. இங்கே என்ன செய்யமுடியும்?
பார்சிலோனா பேரங்காடி ஒன்றில்
அங்கு வேலை செய்த விற்பனைப் பணியாளிடம் இது என்ன படம் என்று தெரியுமா கேட்டேன். அவள் மண்டையை மண்டையை ஆட்டினாள். அவளுக்கு மனித உடல் இருக்கும் இந்த  யானையின் தலை  ஒரு நவீன ஓவியமாகப் புரிந்திருக்கும். ஆம் நாம்தான் நவீன ஓவியத்தின் முன்னோடி.


Add caption

பரபரப்பான லா ரம்லா சந்தையிலிருந்து மீண்டும் மெட்ரோ ரயில் ஏறி பார்சிலோனாவுக்கு வருகிறோம். இரவில் பார்சிலோனாவிலிருந்து மீண்டும் ரோம் பறக்கவேண்டும். விடுதியிலிருந்து 12.00 மணிக்கே வெளியேறிவிட்டோம், பையை மட்டும் அங்கே பாதுகாப்பாக வைத்துவிட்டு ஊர் சுற்றிய பிறகு மீண்டும் பையை எடுத்துக்கொண்டு பார்சிலோனா விமான நிலையத்துக்குப் புறபடவேண்டும். விமான டிக்கட் மட்டும் பயணத்துக்கு முன்னாலேயே பதிவு செய்துள்ளதால் கவலை இல்லை. லா ரம்லா சந்தை இடத்திலிருந்து முக்கால் மணி நேரத்துக்கு முன்னால் கிளம்பினாலே இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் விமான நிலையத்தில் இருக்கமுடியும். மனிதன் வேண்டுமானால் நேரத்தைத் தவறவிடலாம், ஆனால் அங்கே செயல்படும் பொது வாகனங்கள் நேரப் பிசகாவதில்லை.

பரபரப்பான லா ரம்லா சந்தை

எனவே  தேவையற்ற பரப்பரப்பில் இயங்க வேண்டிய அவசியமில்லை.சாவகாசமாக் ஊர்சுற்றிவிட்டு மெதுவாகப் போகலாம். ஆனால் ஒர் இடத்தை விட்டு வெளியேறும்போது பார்த்ததை விட பார்க்காததே நிறைய எஞ்சி நம் ஏக்கத்தை இரட்டிப்பாக்குகிறது.
இனி எப்போது ஸ்பேய்ன் வருவது. அதற்குக் காலம் இடம் தருமா? கண்ணிலேயே இருந்தது பார்சிலோனா.
ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வது சுகமானது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போக (தரை வழி) சுங்கச்சாவடியோ, குடிநுழைவுப் பிரச்னையோ இல்லை. தரை வழிப் பயணம் மிக சுமூகமானது. விமானப்பயணத்தில் மட்டுமே நீங்கள் இந்த சோதனையைக் கடந்துவரவேண்டும்- விமானப் பயணப் பாதுகாப்பு கருதி.
தரை வழியாகவே ரோம் சென்றிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். விமானப் பயணம் மலிவானது என்று கணக்கிட்டபிறகே மருமகன் ரோமுக்கு ஆகாயப் பயணத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். புல்லட் டிரேய்ன் பயணக் கட்டணம் விமானப் பயணக் கட்டணத்தைவிட அதிகம் என்றார். ஏன் என்று புரியவில்லை.
ரோமில்தான் புல்லட் ரயிலை முதலில் ஏறினோம்

ஒரு வேளை அது விரைந்து பயணிப்பதால். இரண்டு மணிக்கு முன்னால் வந்து காத்திருக்கும் சிரமம் இல்லாததால். சுங்கச் சாவடி, குடி நுழைவு பரிசோதனை இல்லாததால், நேரப்படி போய்ச்சேரமுடியும் என்பதால். பெரும்பாலும் நம் விடுதியருகிலேயே ஸ்டேசன்கள் உள்ளதால் என பயண அனுபவம் எனக்குக் காரணங்களைக் கற்பிக்கிறது.
பார்சிலோனா விமானத் தளத்தில்

ரோமுக்குப் போகும்போதே திருட்டு எச்சரிக்கைகள் நம்மை வந்தடைகின்றன. ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும். ஆசிய நாடுகளிலிருந்து பிழைப்பை தேடி வந்தவர்கள் உலகிலேயே ரோமில்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். குறிப்பாக கியூபாவிலிருந்து நிறைய கருப்பர்களைப்  பார்த்தேன். இவர்கள்தான் அங்கே அமைதியைக் குலைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.(கியூபா காரர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியக் கூடாது தெய்வமே- இருந்தாலும் கூகல் சும்மா இருக்காமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கட்டுமே என்று கேட்டுத் தொலைக்கிறது, நாம் வலையில் பதிவு செய்ததை. ஏனிந்த அதிகப் பிரசங்கித் தனம் இந்து கூகலுக்கு)
இரவு 11.45க்கு விமானம் ஏறி ஒன்றரை மணிக்கு ரோமை அடைந்தோம். பரிசோதனைகள் முடிந்து வெளியே வந்த போது  ரோம் நகரம் இரவில் மூடிக்கிடந்தது. டேக்சி பிடித்துப் போகவேண்டாம் என்ற எச்சரிக்கையும், அளரவமற்ற சூழலும் பீதியை உண்டு பண்ணியது, விமானத் தகவல் மையத்தில் கேட்டுப் பார்த்தோம். 5 யூரோவுக்கு டிக்கட் எடுத்தால் பேருந்து உங்களை பட்டணத்துக்குக் கொண்டு செல்லும் என்றார்கள். நான் பேருந்து ரோம் நகரை 10-15 நிமிடத்தில் அடைந்துவிடும் என்றுநினைத்தேன். ஒன்றேகால் மணி நேரப் பயணம் அது.
ரோமுக்குள் நுழைந்தவுடன் பட்டாணம் பட்டப் பகலென காட்சி தந்தது . நியோன்.மின் விளக்குகள் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. விண்ணை அளக்கும் கட்டங்கள் கூட்டங்கள். மனித நடமாட்டம் என ரோம் கொட்டக் கொட்ட விழித்துக்கிடந்தது.
விடுதியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதுமில்லை. மருமகன் கையில் வைத்திருந்த ரோம் வரைப்படம் உதவியது.

விடுதியில் ஒடுங்கிய சிறிய அறைகள்.  குளிர்சாதனம் கிடையாது. ஆறேழு அறைகளுக்கு இரண்டு பொதுக் கழிவறைகள் என்று சொன்னான் பணியாள். நான் ஆடிப்போனேன். நாங்கள் இணையத்தில் பதிவு செய்த் போது  நல்ல விடுதி என்று எழுதியிருந்ததே என்றோம். அவன் அது எனக்குத் தெரியாது என்றான். ஏன் அப்படி? . நம் காசு 250 ரிங்கிட் மலிவா என்ன?  யுரினுக்கே எட்டு ரிங்கிட் கேட்கும் தேசமல்லவா இது.
களைப்பு நீங்கக் குளிக்க சுடு நீராவது உண்டா என்று கேட்டேன். உண்டு ஆனால் குழாயை எப்படி சரியான சூட்டுக்கு வைப்பது என்பதில்தான் இரண்டு நாள் சிரமப் பட்டேன். நாங்கள் பயன்படுத்தும் நேரத்தில் மற்ற யாரும் அதனைப் பயன்படுத்தாதது  சிரமப் பரிகாரத்துக்கு பாதகமாக அமையவில்லை.
ஊரு விட்டு ஊரு வந்து வங்காள தேசிகள்

தூங்கி எழுந்து பகலில் ரோமைப் பார்க்க ஆவலாய் இருந்தது. மூன்றாவது மாடியில் இருந்து சன்னலைத் திறந்து பார்த்தேன். தெரு ஓரத்தில் வங்களாதேசிகள் ஐந்தாறு பேர் படுத்து உறங்கிக்கிடந்தனர். பயணப் பைகள் காலணிகள் அவர்கள் பக்கத்தில் இருந்தன. காலணி இல்லாதவன் கால்கள் இல்லாதவனைப் பார்த்து தன்னைத் தேற்றிக்கொண்டமாதிரி நாங்கள் தங்கிய வசதியற்ற விடுதியறை இதைவிட மேலல்லவா?
 இத்தாலியின் ரோம் நகரம் அதிசயங்களால் நிறைந்தது. கொலிசியத்தையும் பிசாவையும்(சாய்ந்த கோபுரத்தையும் போய்ப்பார்க்க ஆவல் கூடிக்கொண்டே இருந்தது.

தொடரும்.....

Comments

வணக்கம்
ஐயா

இரசித்துப்படித்தேன் அறியாத தகவலையும் அறிந்தேன் படங்கள் அழகு பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ko.punniavan said…
This comment has been removed by the author.
ko.punniavan said…
நன்றி ரூமன்.

பகிர்தலுக்கு நன்றி
அனுபவங்கள் அருமை. அண்டர்வே’யும் அருமை.. :)
ko.punniavan said…
நன்றி விஜி,
நீங்கள் அதிகம் பயணம் செய்தவர். எனவே உங்கள் பின்னூட்டம் சிறப்பாக இருக்கும். உள்ளாடையில் கணேசர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருபார் என்ற இந்து நம்பிக்கையை பிசகின்றி நிறைவேற்றியிருக்கிறது. காச் மூச்சென்று கத்தும் பண்பாட்டு/சமய ஒழுக்கவாதிகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.கொஞ்சம் வேலை பலு அதிகரித்துக்கொண்டே போகிறது. என் வாசிப்பு நேரத்தைக் களவாடி.
நன்றி
உள்ளாடையில் கணேசர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருபார்// சீரியஸ் ஜோக்கர் சார் நீங்க. வாய்விட்டுச் சிரித்தேன். ஐரோப்பியனை ஒண்ணும் செய்யமாட்டார்கள். பரிதாபதற்குரிய எளியவன் நம்ம ஆள் எங்கேயாவது ஒரு லைக் இட்டால், அவனவன் தடி எடுப்பான். அடிக்க.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த