Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 17

எஸ் மார்க்கோ இத்தாலியின் இன்னுமொரு சொர்க்க நகரம்- முத்தம் 17



மிதக்கும் வெனிசின் இன்னும் சில காட்சிகள்


       எத்தனையோ நகரங்களை, கடல் கரை ஊர்களை, குளம் நிறைந்த ஊர்களைப் பார்த்தாயிற்று. ஆனால் வெனிஸ் போல கனவிலும் நனவிலும் முடிவிலியாக காட்சிகளை கண்முன் கொண்டு வரும் வெனிஸுக்கு ஈடு இணை இல்லை. கடலுக்குக்கிழ் நகரங்கள் இருப்பதாக கற்பனைக் கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் கடலிலிருந்து மிதக்கும் நகரத்தைப் கண்கொண்டு பார்ப்பது கடலுக்குள் இருக்கும் நகரத்தைப் பார்ப்பதற்கு ஈடாகும். எங்கு திரும்பினும் ஓடும் நதியும், மிதக்கும் நகரமும், கரையோரம் நடந்து செல்லும் மனிதர்களும், நம்மை மறக்கச்செய்கிறது. படங்களில் பார்ப்பதைவிட இங்கே அதன் ரம்மியம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இயற்கையை நேரடியாக தரிசிப்பதில் உண்டாகும் அனுபவம் பரவசமூட்டக்கூடியது. கார்கள் இல்லை, மோட்டார் சைக்கில்களின் உறுமல் இல்லை, லாரிகள் கடந்து அச்சுறுத்துவதில்லை, கந்தக நெடியற்ற ஒரு இயற்கை உலகம் இது. போய்ப்பாருங்கள். எனக்குள் படிமமாகவே இறக்கும்
வரை  நின்று நிறக்கும் ஊர் வெனிஸ்.









 





A celebrity cruise - SILKHOUTTE மிக அருகில் கிடைத்த கிலிக்.

மேலே எஸ் மார்க்கோவின் காட்சிகள்

எஸ் மார்க்கொ துறைமுக நகரின் பிரமாண்டம்.





வெனிஸில் நம்மை விரட்டி விரட்டி நினைவுச்சின்னகள் விற்கும் கியூபா குடியேறிகள்.


காதலர்கள் இணைந்த நினைவாக வெனிசிலும் பூட்டுப்போடப்பட்ட பூட்டுகள்.(ஐரோப்பா முழுவது இந்த மூட நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது.

நித்தம் பார்க்கக் கிடைக்கும் முத்தக்காட்சி




மாலை 4 வரை நடந்து நடந்து வெனிஸ் முழுதும் பார்த்து முடிக்க முடியாததாக இருந்தது. சற்றே ஓய்வெடுக்கலாம் என்று ஒரு பெரிய சிலை(வெனிசை நிறுவியவர்) கீழே படியில் அமர்ந்தோம். எங்களுக்கு அருகிலேயே இன்னொரு ஜெர்மனி போலந்து ஜோடி அமர்ந்திருந்தது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று வினவ, நாங்கள் மலேசியா என்றோம். அவர்களுக்கு மலேசியாஎன்கிற நாடு இருப்பதாகவே தெரியவில்லை. நான் உடனே எம் எச் 370 விமானம் என்றேன். அவர்கள் பட்டென்று பிடித்துக்கொண்டார்கள். விமானம் என்னதான் ஆனது என்று கேட்டார்கள். நீங்கள் சி.ஐ.ஏ வாக இல்லையென்றால் நான் சொல்கிறேன் என்றேன்.

உங்களைப் பார்த்தால்தான் உளவு பேதா போலிருக்கிறது என்றார் அவர். கொஞ்ச நேரம் களைப்பு தீர சிரித்துக் கொண்டோம். பிறவற்றைப் பேசி மகிழ்ந்து படம் பிடித்துக்கொண்டு மின்னஞ்சல் முகவரி வாங்கிக்கொண்டு வந்தேன்.  அவர் ஒரு தொழில்முறை ஓவியர். அங்கே கலை சார்ந்த எந்தத் தொழிலுக்கு மவுசு அதிகம். ஆசியாவில் குறிப்பாக தமிழர்கள் கலையை மதிப்பதே இல்லை. எல்லாரும் டாக்டராக, வழக்கறிஞராக, தொழிலதிபர்களாக பிழைப்பு நடத்தத்தான் பிறந்திருக்கிறார்களே ஒழிய, வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க எண்ணாதவர்கள். சரி அடுத்த பிறவியில் கலைக்குக் கொஞ்சம் இடம் தருவார்கள் என்றால் அதற்கும் வாய்ப்பு குறைவே. ஏனெனில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு அடுத்த ஜன்மத்தில் மனிதப்பிறவி கிடைக்கும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை.

இடையில் இன்னொரு வியப்பு காத்திருந்தது . அதனை மருமகன் கொண்டு வந்தார். இதற்குள் என் சிறுநீர்ப்பை நிரம்பி இம்சை செய்ய ஆரம்பித்தது. அப்போது வெனிசிலிருந்து சற்றே வெளிப்புறம் வந்துவிட்டோம். இடம் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. கடற்கரைக்கு அருகாமலேயே ஒரு துறைமுகம் தெரிந்தது. அங்கே கண்டிப்பாய் இருக்கும் என்று தேடிப்போனேன். ஓரிடத்தில் இடம் காட்டி (சைன் போர்ட்)  இருந்தது. அது காட்டும்  திசையில் நடந்தேன்.போகப் போகப் போய்க்கொண்டே இருக்கிறது. நான் நினைக்கிறேன் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து  களைத்தபிறகு பொதுமக்களுக்கென ஒர் கழிப்பறையைக் கண்டுபிடித்தேன். கொஞ்சம் லேசானது உடல்.
லா மார்க்கொவுக்கு புறப்பட்ட பெர்ரி

வியப்பு என்னவென்றால் வெனிசுக்கு அடுத்த இன்னொரு கடற்கரை ஊர் இருக்கிறதாம் . கடலில் பயணம் செய்துதான் போகவேண்டும். ஒரு நபருக்கான 7 யூரோ. அதாவது 28 ரிங்கிட். முக்கால மணிநேரப் பயணத்தில் போய்ச்சேர முடியும். ஒரு மூன்று சிறு சிறு துறைமுகத்தில் நின்று ஆட்களை ஏற்றியும் இறக்கியும் போய்ச் சேர்ந்தது.அந்த துறைமுகத்தின் பெயர். எஸ் மார்க்கோ.

அடேங்கப்பா .. அது ஒரு கொண்டாட்ட ஊ ர். கடற்கரை நெடுக்க மக்கள் கொண்டாட்டம்தான். கடைகள் ஒரு புறம். மது பார்கள் ஒரு புறம். அழகிகள் நம்மை வரவேற்க. நாங்கள் துறைமுகத்தின் முக்கிய பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

அதனை பிரம்மான்டம் என்று ஒரு வார்த்தையில் சொன்னால் தகாது. சங்கர் போன்ற ஹை பட்ஜெட் இயக்குனர்கள் பார்த்திருந்தால் ஒரு பாடல் காட்சியில்  பேத்தி சமந்தாவையும் தாத்தா ரஜினியையும் ஆடிப்பாட வைத்திருப்பார். பாவம் தாத்தா, நீங்கள் நன்றாக கவனித்திருந்தால் ரஜினியால் ஒரு தடியைக்கூட தூக்க முடியாத, (சரியாக எடிட் செய்யாத) காட்சி ஒன்றைப் பார்த்திருக்கலாம் 'சிவாஜி'யில். நான் இதையெல்லாம் உற்று கவனிப்பேன். நீங்கள் அடுத்தமுறை படம் பார்க்கும்போது ஹிரோவுக்குப்பின்னால் துணை நடிகர்களின் முகங்களைப் பாருங்கள். சினிமாவின் வாய்ப்பு தேடி வந்து வாழ்க்கையை இழந்தவர்களின் முக வாட்டம் தெரியும்.

கடலில் அலை மோதிக்கொண்டிருந்தது. உயர எழும்பி எழும்பி அலைகளை ஒரு குன்று உயரத்துக்கு  மேல் நோக்கித் துப்பிக்கொண்டிருந்தது. ஒரு மிகப் பிரம்மாண்ட உல்லாசக் கப்பல் ஒன்று பெரிய மலைபோல கடலில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அவ்வளவு பெரிய கப்பலை நான் நிஜத்தில் பார்த்ததே இல்லை. அதன் பெயரே செலிபிரிட்டி குரூஸ். நடிகர்களை பெரும்பணக்காரர்கள் உல்லாச பயணம் செய்வதற்கென்றே இருக்கும் ஒரு உல்லாச குருஸ் அது. டைட்டேனிக் சினிமாதானோ என்ற பிரம்மையைத் தவிர்க்க இயலவில்லை.

தொடரும்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின