Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2

முத்தம் 2

ஜூலை 22 இரவு 6.30க்கு கே ஏல் ஐ ஏ  '2 விமானத் தளத்தில் இருக்கவேண்டும். எத்திஹாட் விமானம் மூலம் 8.30 க்கு பயணம் தொடங்கும்.
கிள்ளானில் தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள என் மைத்துனர்  எங்களை விமானத் தளத்தில் விடவேண்டும். நாங்கள் வீட்டிலிருந்து  கிளம்பும்போது மணி 11.30. இடையில் எங்கும் நிற்கக்கூடாது என்பதற்காக உணவைச்சமைத்து பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு காரிலிலேயே சாப்பிட்டாக வேண்டும்.

நெடுஞ்சாலை பயணம் என்றாலும் எங்கேயும் பயண இடையூறு நேர்ந்தால் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச்சேர முடியாது. குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன்னரே விமானத் தளத்தில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். 110 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும் வேண்டும். ஏற்கனவே ஆளாலுக்கு நான்கைந்து வேகம் மீறல் தண்டங்களை அரசாங்கத்துக்கு பாக்கி வைத்திருந்தோம். என் மருமகன் அரசாங்கம் செழிப்பாக இருக்கவேன்டும் என்பதில் அளவுக்கு மீறிய அக்கறையுள்ளவர். அவர் ஒரு கட்டு சமன்கள் வைத்திருப்பார்.

அபுடாபி விமான நிலையம்
குடிமக்களிடமிருந்து  வரியை எப்படிப் பறிப்பது என்று மலேசியாவிலிருந்து பிற நாடுகள் கற்றுக்கொள்ளவேண்டும். டோல் கட்டண சாவடியிலேயே, சாவடி என்று அதற்குப்பெயரிட்டதுபோல-  ஓட்டுனர்களுக்கு 'சாவடி' கிடைக்கும் . அப்புறம் ஆங்காங்கே கேமராவை பதித்து வேகக் கட்டுப்பாட்டை மீறும்போதும் படம் பிடித்து அதற்கும் 'சாவடி' உண்டு. இப்படி நிறைய 'சாவடிகள்' இங்கே தாராளமாய்க் கிடைக்கும். இதிலிருந்து தப்பிக்க எங்கெங்கே கேமரா உண்டு என்ற முன்கவனம்  இருந்தால் அங்கே மட்டும் வேகத்தை குறைப்பதாக நாடகமாடி போய்ச் சேர்ந்துவிடலாம். கேமரா பதிக்கப்பட்ட இடங்கள் இன்னின்ன  என்று முன்னமேயே வரலாற்று ஆய்வை மேற்கொண்டால் நல்லதுதான். ஆய்வை மேற்கொண்டபின்னர் கேமரா இடம் மாறினால் நான் பொறுப்பல்ல.

ஆனால் பெரும் பணக்காரர்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 200-230 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பறந்து போகும் கார்களைப் பார்க்கலாம்.

என் மைத்துனர் வீட்டில் தயாராகக் காத்திருந்தார்.

உடம்பு  வியர்வைக் கச கசப்பைக் குறைக்க   குளித்துக் கொண்டேன். அவர்களை அவசரப்படுத்திய நானே குளித்து நேரத்தை எடுத்துக்கொண்டதால் கண்டனத்துக்கு உள்ளானேன். மைத்துனர் திரும்பக் காரை எடுத்துவர உடன் வந்தார்.  விமானம் ஏற இரண்டரை மணி நேரத்துக்கு மேலேயே இருந்தது. ஆனால் நீண்ட தூரம் பயணிக்கப் போகும் களைப்பு என்னவோ மனதில் பாரமாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

சரியாக மணி 8.30க்கு விமானம் கிளம்பியது. எத்திஹாட் போயிங் விமானம். கால் நீட்டி நன்றாகத் தூங்கலாம். ஏழு மணி நேரம் ஆயிற்றே. உணவு பரிமாரல் பற்றி விபரம் இல்லை. உணவு இருந்தால் சரி என்றாயிற்று.  மலேசியாவிலிருந்து பயணம் என்பதால் பிரியாணி வழங்கினார்கள். தேநீர் காப்பியும் உண்டு. எப்போதுமே நீண்ட தூர விமானப் பயணத்தில் இருந்தால் இரண்டு பெக் அடித்துவிட்டு தூங்கி விடுவேன். மற்றபடி நான் நல்லவன். தூங்கிவிட மட்டுமே சோம பானம். என் மனைவி பக்கத்து இருக்கையில் இருக்கக் கூடாதென எவ்வளவு வேண்டியும், என் வேண்டுதல் பலிப்பதே இல்லை. என் துரதிர்ஸ்டம் அப்படி? என்ன அருந்துகிறீர்கள் என்று கேட்டுத் தொல்லை செய்வாள். மது என்று தெரிந்தால் அப்போதே புத்திமதி சொல்லத் தொடங்கி விடுவாள். புத்திமதியிலேயே போதை ஏறாமல் தேங்கிவிடும். ரெண்டு பெக் அடிக்கக்கூட சுதந்திரம் இல்லையேடா சாமி. பல சமயம் இது வைன் என்று சமாளித்திருக்கிறேன். அவள் என்னை வளர்த்த விதம் அப்படி. விஸ்கி அடித்த சின்ன அறிகுறி கூட இல்லாமல் சமாளிப்பது இருக்கிறதே? அதற்கு அசாத்திய திறமை வேண்டும்.  முகத்தை அவள் பக்கம் திருப்பாமல், சகஜ நிலையில் இருப்பதுபோலவே நாடகமாடுவதன் சிரமம் பட்டவனுக்குத்தான் தெரியும். தண்ணி போட்டு என்ன புண்ணியம்?

அபுடாபி விமானத் தளத்தில்
இரண்டு முறை கேட்டு வாங்கி ஊற்றிக்கொண்டு மூன்றாவது முறை கண்ணயர இன்னொரு பெக் கேட்டேன், அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. நான்தான் தவறு செய்துவிட்டேன். நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை பணிப்பெண்ணிடம் சொல்லியிருக்கவேண்டும். அப்படி சொல்வதிலும்  சிக்கல் உருவாகிவிடும்..மனைவி பக்கத்திலேயே இருக்கிறாள். ஒரு கணவனுக்கு மனைவியைத் தவிர வேறு அழகிகள் இருக்கக் கூடாதல்லவா?  அது தானைய்ய்யா நம்ம தர்மம்.
                                    ஒலிம்பிக்ஸ் நடந்த பார்சிலோனா ஸ்டேடியம்

ஐந்து மணி நேரம் காரில் வந்த களைப்பில் மூன்று முறை விட்டுவிட்டு தூங்கி எழுந்தேன். ஆனாலும் வீட்டில் சொந்த படுக்கையில், சொந்த தலையணையில், அதே திசையில் படுத்துறங்குவதுபோல ஆகுமா?

அபு டாபி விமான நிலையம் அடைந்துவிட்டோம் என்ற  அறிவிப்பு என்னை நிமிர வைத்தது. கோடீஸ்வரர்கள் நாடு. எப்படி ஜொலிக்கும் என்பதை அடுத்த தொடரில் சொல்கிறேன்.

தொடரும்......

Comments

MUNIANDY RAJ said…
அருமை..அடுத்தடுத்த முத்தங்களுக்காக காத்திருக்கிறோம்
MUNIANDY RAJ said…
அருமை..அடுத்த அத்தியாயங்களுக்குக் காத்திருக்கிறோம்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின