Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 4

ரோத்துருவா அழகிய நீர் வீழிச்சிகள்  உள்ள இடம். மலைகளிலிருந்து திரண்டு வரும் நீர் ஏரிகளில் விழுகிறது. ஓரிடம் என்றில்லாமல் மலைகளின் பல பகுதிகளிலிருந்து விழும் நீர் கண்களைப் பறிக்கிறது. நீர் ஒர் உன்னதக் குணமுண்டு. அகன்று  நிறைந்திருக்கும் ஏரி, கடலாக இருந்தாலும் சரி, திரண்டு இறங்கு நீராக இருந்தாலும் சரி நம் கவனத்தைப் குவிக்கச் செய்து சற்றே அமைதியைக்  கொடுக்கும். நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்கள் பற்றிப் பேசுகிறார்கள். அதில் நீருக்கும் கடவுளுக்கு நிகரான ஓரிடத்தைக் கொடுக்கிறார்கள். ஏன்? நீரின்றி அமையாது உலகம். நீர் இல்லையெனில் இந்தப்பூமிபந்து இல்லை. உயிரினங்கள் இல்லை. வான் சிறப்பில் வள்ளுவன் மேலும் நீருக்கு சிறப்பெய்துகிறான். 'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை'  நீர் உணவு உற்பத்திக்கு உதவியதோடு இல்லாமல் நீரே உணவாகவும் பெய்கிறது என்கிறார்.  அப்படியென்றால் நீர் கடவுள்தானே? அதனைக் கண்கண்ட தெய்வம் என்று ஏன் சொல்லக் கூடாது? ஆகவேதான் நீர் நிலைகள் நம்மை அமைதிப்படுத்துகின்றன. சற்றே நின்று பார்த்து 'தியானி'க்கவும் வைக்கிறது. அதிலும்  அருவி  நீர்  அபாரமான கடவுள். நீர் நிலைகளைச் சற்று நேரமாவது நின்று ரசிக்காதவர் இருந்தால் அவரிடம் ஏதோ குறையுள்ளது என்றே எடுத்துக் கொள்ளலாம்.





 ஐரோப்பியர்கள் இதனை நன்கு அறிந்தவர்கள். இங்கிலாந்து பிராண்ஸ் இத்தாலி, ஸ்பேய்ன் போன்ற நாடுகளில் இருக்கும் சின்ன சின்ன ஆறுகளை மிக அக்கறையோடு  பேணுகிறார்கள். அதனைச்  சுற்றுலா மையமாக்கி  சுற்றுப் பயணிகளின் வருகையையும் அவர்கள் இன்புறுவதையும் உறுதி செய்கிறார்கள். நீர் நிலைகளில் ஒரு குப்பையைக் கூடக் காண முடியாது. நீர் ஒழுக்கில எந்த இடைஞ்சலையும் காண முடியாது. சலசலத்து ஓடும் நீரொழுக்கு அவை. நம் சான்றோர்கள் சொன்னதை அவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.

இந்தியா இதற்கு நேர் முரண். நீரைக் கெடுத்து குடிக்கக் கூட தண்ணிரற்று அலைந்தும் இன்னும் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். இந்தியாவுக்கு தண்ணீரின் மீது பொறுப்பு வர எத்தனை ஆண்டுகளாகுமோ தெரியாது. இத்தனைக்கும் பஞ்ச பூதங்களுக்குத்  தத்துவ விளக்கம் கொடுக்கும் புனித நாடு இந்தியா. ஒருமுறை
காசியில் எங்களை ஏற்றிவந்த படகோட்டி, கரையை அடைந்ததும் நின்றுகொண்டு அங்கேயே சிறுநீர் கழிந்தான்.  அதுவும் கங்கைக் கரையில். இதனை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்.

ஒரு சம்பவம் நினைவுகு வருகிறது. சேலத்துக்கு பேருந்தில் போகும் வழியில் ஒரு சுங்கச்  சாவடியில் பேருந்து  பத்து பதினைந்து நிமிடம் நின்றது. எல்லாரும் சீறுநீர்க் கழிக்க இறங்கினர். சாவடியில் கழிவறை இல்லை என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சாவ்டியே இல்லை இதில் கழிப்பறை வேறா?  எனக்கு முட்டிக்கொண்டுதான் இருந்தது. நானும் இறங்கி மறைவான இடம் சென்று சிரமப் பரிகாரம் செய்ய முனைய, கால்கள் மிதிபட்ட இடம் நீரிலும் சேற்றிலும் சொதசொதப்பை உணர்ந்தேன். மழைநீர் என்று நினைத்து என் வேலையை முடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுமுன் என் காலணியை புல்லில் தேய்த்தேன். சிறுநீர் நாற்றம் என் மேனி முழுதும் வீசியது. நான் மிதித்தது சிறுநீர் தேங்கி சொதசொதத்த இடம். கோடைகாலத்தில் மழை இருக்காதே என்ற முன்னறிவற்று மிதித்திருக்கிறேன்.

ஆனால் என்னதான் சிறுநீர்ப் பை நிறைந்தாலும் மேலை நாடுகளில் திறந்த வெளியில் ஒன்னுக்குப் போகும் மனம் வருவதில்லை. அந்த தூய நிலம் நம்மை மனதளவிலும் அனுமதிப்பதில்லை!

ரோத்தோருவா துராங்கி என்ற பட்டணத்தின்  அருகே  ஹுக்கா போல்ஸ் (falls) இருக்கிறது , மலை உச்சியிலிருந்து ஊற்றும் நீர்  அகன்ற ஏரியில் சற்று இளைப்பாறி, அதலபாதாள்த்தில் போய் விழுகிறது. எட்டிப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் அதன் அழகு முயங்க வைக்கிறது. நுரை நுரையாகப் பொங்க்கிப் பிரவகிக்கும் பாலாறு அது. இப்படி ஆழமான நீர்நிலையைப பார்க்க வேண்டும். மலைகளுக்குக் கீழ் பாறையை நெறித்து வரும் நீரூற்றை அதே இடத்தில்  பல இடங்களில் பார்க்கலாம். அதற்கான இடங்களைக் கவனமாகப் பேணி வருகிறார்கள்.

அங்கிருந்து தொக்கானு லாஜுக்குப் புறப்பட்டோம். துராங்கிக்கு அருகே உள்ள ஒரு உட்புறப் பகுதி. உட்புறப் பகுதிகளில்   உள்ள தங்குமிடங்கள் சற்று குறைவான வாடகையே வாங்குகின்றனர். அங்கேதான் பச்சை சூழ்ந்து குளிரை கொடையளிக்கிறது. இடப் பெயர்களெல்லாம் ஆங்கில் மொழியில் இல்லை. பெரும்பாலும் மோரி பழங்குடி இனத்தில் மொழி இது. இதன் பின்னணி வரலாற்றைப் பின்னர் தொடலாம்.

அந்த இடத்துக்குப் போகுமுன்னர் மறு நாளைக்கு சமைக்க வேண்டி உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டோம்.

தொடரும்,,,








Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின