Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள்.3

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 3

நாங்கள் தங்கும் விடுதியெல்லாம் சற்றேறக் குறைய வீடு போன்ற அமைப்பைக் கொண்டது. சமையல் அறை, அதற்கான தளவாடங்கள், துணி துவைக்கும் இயந்திரம் என பெரும்பாலான வசதி கொண்ட இடம்.  மறுநாள் வெகுதூரம் பயணமாக வேண்டும் . வாய்க்கு ருசியாக உணவு கிடைப்பது கடினம். இடையில் உணவுக்காக நிறுத்தினால் சுற்றுலாத் தளங்களைப் பார்க்க முடியாது.  எனவே காலை உணவு விடுதியிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.  ரொட்டி, சீஸ், துனா சாடின், முட்டை, பால் . சீனி, நெஸ்கேப்பி போன்ற உடனடி உணவு வகையை  அன்றிரவே வாங்கிக் கொண்டோம்.  என் மனைவியும் செல்வியும் அன்றைக்கான உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ரோத்தொருவா எனும் புகழ்பெற்ற நீர்வீச்சி சுற்றுளாத் தளம்  எங்களின் அடுத்த இலக்கு. பகல் உணவு நேரம் நெருங்கும்போது நாம் ஒரு சிறிய பட்டணத்தை அடைவோம் என்றார் மருமகன்.
நாங்கள் கிளம்பும் போது காலை மணி எட்டு. ஆனால் வேன் சில இயந்திரப் பிரச்னைகளைக் சமிக்ஞை செய்தது. வெகுதூரப் பயணமாதலால் சரி செய்துவிட வேண்டும் என்று அங்குள்ள கிளை அலுவலகத்துக்குச் சென்று சரி செய்து கொண்டோம். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு ரோத்துருவா நோக்கிப் புறப்பட்டோம். இந்த லூசி சுற்றுலா வழிகாட்டி கம்பெனி நியுசிலாந்து முழுவதும் அலுவலகங்கள் வைத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான வாகனங்கள். பேருந்துகள். உல்லாசக் கப்பல்கள், விடுதிகள் என லூசிக் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்து விரிந்த சேவை வழங்குகிறது. வாகனப் பிரச்னை இணையத் தொடர்பு பிரச்னை என்றால் கிளை அலுவலகங்களுக்கும் செல்லலாம், தொலைபேசியில் தொடர்கொண்டால் உடனே சீர் செய்து கொடுக்கிறார்கள்.
ஒரு பட்டணத்துக்கும் இன்னொரு பட்டணத்துக்கும் வெகுதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான, பல மணி நேரப் பயணத்துக்கு நாம் மனதளவில் தயாராகிவிட வேண்டும். கையோடு உணவுப் பொருட்கள் கொண்டு போவது புத்திசாலித்தனமாகும். நியூசிலாந்தில் பொதுப் போக்குவரத்து என்றால் விமான வழி மட்டுமே. சாலைகளை அல்லது விரவு ரயில் போக்கு வரத்தை துரைதப்படுத்த  எண்ணற்ற மலைகளைக் குடைந்தாக வேண்டும். மிக்ந்து பொருட் செலவு. எனவே சாலைகளை மலைகளில் ஏறி இறங்கி பள்ளத்தா க்கு வழியாகத்தான் செல்ல வேண்டும். பபொதுப் போக்கு வரத்தாக   நீண்ட தூரப்  பேருந்து சேவை கூட இல்லை. நகரங்க ளுக்கு உள்ளே மட்டுமே பேருந்து சேவை உண்டு.

 மலைகளைக் கடந்து  பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். அடுத்த பட்டணம் எப்போது நெருங்குவோம் என்ற இலக்கை மறந்த பயணம்.  விவசாய நிலங்களின் செழும் பச்சை , நீலம் நெடுக விரிந்த விதானம் ,  கடல் போல விரிந்து கிடக்கும் நீலவண்ண ஏரிகளின் மேல்பரப்பை வெள்ளி மணித் துகல்களாக்கும் சூரியக் கதிர்களின் ரசவாதம், இப்படிப் புத்தம் புதிய நிலத்தின் வனப்பில்   குதூகளிப்பில் திளைக்கிறது மனம்.  இவ்வாறான நிலக்காட்சிகளைப் பார்த்து நெடு நாட்களாகிவிட்டதன. குறிப்பாக மலைகள் நிறைந்த இடம் நியூசிலாந்து. குறிஞ்சி நிலப் பகுதி நிறைந்த ஊர் . ஐந்திணை என்று தமிழர் மரபு நிலத்தை ஐந்தாகப் பிரிக்கிறார்கள். அதில் மலை சார்ந்த பகுதிகளை குறிஞ்சி நிலம் என்கிறார்கள். குறிஞ்சி நிலம் கெட்டியான மண்ணால் ஆனது. அதனை  நியூசிலாந்தில் நெடுக்க பார்க்கலாம். பெரும்பகுதியான மலைப்பகுதிகள் பாறைகளாலுல் கற்களாலும் ஆனது.
இடை இடையே மேய்ச்சல் மாடுகள் ஆயிரக் கணக்கில்  பார்க்கக் கிடைக்கிறது. ஆனால் வேலியற்ற சாலைக்கு அருகே கூட ஒரு மாடுகூட வரவில்லை. நான்கு மணி நேரம் பயணத்தில் இதனைக் கவனித்த சேதுதான் குறிப்பிட்டுக் கேட்டார்.
"நம்ம ஊர்லன்னா நெடுஞ்சாலையில் கூட மாடுகள் இருக்க வாய்ப்புண்டு. இங்கே அப்படியில்லையே," என்றார்.  "அது பாட்டுக்கு  கடமையே கண்ணாக மேய்ந்து கொண்டிருக்கிறது. குனிந்த தலை நிமிராது மணப்பெண்போல."(இப்போதுள்ள மணப்பெண்களை இப்படியெல்லாம் நான் கேவலப் படுத்த மாட்டேன்) 
இங்கே வேலியில் மின்சாரம் ஓட்டம் இருக்கலாம் என்றார் சேது .
அப்படியிருக்காது, மிருக வதைச் சட்டத்தில் உள்ளே போட்டு விடுவார்கள்! அதற்கான சுவையான புற்கள் தனியாக வளர்க்கிறார்கள்.  அவற்றுக்கென்றேயான பிரத்தியேக புற்பகுதிகள் அவை. அதன் சுவையை விட்டு வெளியேற அவற்றுக்கு  மனமில்லாமல் இருக்கலாம். நம்மூர் மாடுகளுக்கு மட்டும்தான் அக்கறைப் பச்சை பேராசை போலும். என்றேன். நன்றாகப் பாருங்கள் நாம் அவற்றை வேடிக்கைப் பார்க்கிறோம். அவை நம்மை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. அப்படியானால் புல்லின் சுவை அலாதியாக இருக்கும். உலகத்தின் உணவு வகைகளில் மாட்டிறைச்சி சுவை மிகுந்தது என்கிறார்கள். இது ஏன்? அதனை ஆரோக்கியமாக வளர்க்கும் முறைதான் காரணம்.

கோடை காலத்தில்  மேய்ச்சல் மாடுகளுக்கான புற்பரப்பு காய்ந்துவிடாமல் இருக்க தண்ணீர்  பீய்ச்சுகிறார்கள் -தன்னிச்சையாய் நீர்வார்க்கும் இயந்திரங்கள் கொண்டு. மாடு மேய்க்கவோ  நீரூற்றவோ ஒரு மனிதத் தலையைக் கூடப் பார்க்க முடியவில்லை. அப்படிப் பண்போடு வளர்த்திருக்கிறார்கள் ஆடு மாடுகளை. மலேசியாவில் சில மாட் ரெம்பிட் மாடுகள் கண்மண் தெரியாமல் மோட்டார் சைக்கில் பந்தயத்தை நள்ளிரவில் நடத்தும். இதனை இங்குள்ள காவலர் மாடுகள் கட்டுப் படுத்தவே முடியவில்லை. மலேசியாவில் கைகால் உடைந்து போனவர் எண்ணிக்கைக் கான  கண்க்கிட ஆய்வு நடந்தால்  அதௌ மாட் ரெம்பிட்   விபத்துக்குள்ளானவர்கள்தான் அதிகம் இருப்பர்.






ரோத்தோருவா நீர் வீழ்ச்சிகளுக்குப் பிரபலமான இடம். அதனை போய்ச்சேருமுன்னர், ஹொபிட்டன் என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்துக்கு வண்டியைத் திருப்பினோம். ஹாபிட்டன் திரைப்பட படப்பிடிப்புத் தளம் 2010 படம் எடுத்த நாளிலிருந்து பேணப்பட்டு வருகிறது. இது Lord of Rings திரைப்பட அத்தியாயத்தில்  மேலுமொரு படம். அந்த படப்பிடிப்புத் தளத்தை உருவாக்க நூற்றுக் கணக்கான் ஏக்கர் நிலத்தை உரியவரிடம் வாங்கி  இருக்கிறார்கள். நம்ம சங்கர் செலவைவிட 100 மடங்கு  அ திகம். நியூசிலாந்து அரசாங்க அப்படத்தளம் உருவாக்க ராணுவ வீரர்களையும் வடிவமைப்புக்கான செலவையும் ஏற்றுக் கொண்டு செயலாற்றியிருக்கிறது.  அப்படம் ஓஸ்கார் வெற்றிகளைக் குவித்திருக்கிறது.  ஆதாயம் இல்லாமல் ஆத்த கட்டி இறைக்கமா ட்டான் என ஒரு பழமொழி உண்டு. ஏன் இவ்வளவு மெனக்கட்டு செலவு செய்திருக்கிறது என்ற காரணம் அங்கே போய்ப் பார்த்தால்தான் தெரிகிறது. அந்த ஓஸ்கார் பேரை வைத்துக்கொண்டு அதனை சுற்றுலாத்தளமாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவ்விடத்தைச் சுற்றிப்பார்க்க குறைந்தது தலைக்கு 1000 ரிங்கிட் டிக்கட் விற்று போட்ட பணத்துக்கும் மேலாக வருமானம் ஈட்டி வருகிறார்கள். நாங்கள் போனபோது அங்கே நூற்றுக் கணக்கானவர் காத்திருந்தனர். 
அங்கேயே பகல் உணவை முடித்துவிட்டு ரோத்தோருவா கிளம்பினோம்.

தொடரும்....







Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின