Skip to main content

பயணக் கட்டுரை 1 - இருபதும் எழுபதும்


1. தடை

இருபதுக்கும் எழுபதுக்கும்  வெகுதூரம். ஒரு மிகப்பெரிய தலைமுறை இடைவெளி உண்டாகும் வயது. இந்த இடைவெளியை இல்லாமல் ஆக்குவது , இலக்கியப் பிணைப்பு மட்டுமே. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருந்தால் இலக்கியத்தில் உங்களுக்குப் பரிட்சயம் இருந்திருக்கும். அப்படி இல்லையென்றால்... தலையைக் கொஞ்சம் சொரிந்துக்கொள்ளுங்கள்.இது ஒரு பயணக் கட்டுரை என்பதை மேலேயே குறிப்பிட்டுவிட்டேன். எனவே, இருபதும் எழுபதும் இணைந்து போகும் பயணமிது. கடந்த மார்ச் மாத முடிவிலிருந்து எங்கேயும் பயணம் செய்யவில்லை. பாதங்கள் அரித்துக் கொண்டே இருந்தன. எங்காவது போக வேண்டும். கொஞ்சம் வீட்டுச் சூழலிலிருந்து வேறிடம் தேடிப் போகவேண்டும் என்று உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. பயணம் நம்மைச் சுத்திகரிக்கும். வாழ்வனுபவச்சேகரம் அதிகரிக்கும். ஆன்மா புனிதப்படும். வேறு மனிதர்கள், வேறு இடம், புதிய காற்று, புதிய சூழல், இவற்றை அனுபவிக்க வேண்டும். வரலாற்றுப்பூர்வமான இடங்களை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், யாராவதொருவரின் துணையோடுதான் போகவேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கு.  தனியாகப் பயணம் செய்து அனுபவமில்லை. என் மனைவியை அழைத்தால் வரமாட்டாள். அவளது திசை வேறு எனதுத் திசை வேறு. திசையென்பதை நீங்கள் விருப்பம் என்றே மொழிபெயர்த்துக் கொள்ளலாம். சேலைக் கடையில் அவளோடு நான் நின்றால், எனக்கு அரை நொடியில் கால் கடுக்கெடுத்துவிடும். புத்தகக் கடையில் என்னோடு அவள் நின்றால், அவளுக்குக் கால் கடுத்துவிடும். புது இடம் போய் இருவருக்கும் ஏன் கால் கடுக்க வேண்டும். தமிழ்நாட்டில்தான் தமிழ்ப் புத்தகங்கள் வாங்க உசிதமான இடம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, அவளோடு செல்வது உசிதமல்ல. சதா சோபாவும் மடிக்கணிணியுமாய் இருப்பது சல்லையை உண்டாக்கியது. அதனால், இந்தச் சூழலை ஒரு வெளியூர் பயணம் சமன் செய்துவிடும். ஆனால், மனைவியிடம் அனுமதி வாங்குவது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது. இந்த வயதில் நான், தனியாகப் போவதைக் கடுமையாக எதிர்ப்பவள். எனவே, ஒரு சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தேன். அது, ஹரியின் மூலம் வாய்க்குமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் வீட்டிற்கு அடிக்கடி என்னைப் பார்க்க வருவார். பயணத்திட்டம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்த தருணமது. நானும்  மனைவியும் ஹரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, தான் தமிழ் நாடு செல்லவிருப்பதாக ஹரி சொன்னார். நானும் வருவதாகச் சொன்னேன். அவள் அதுவரை விளையாட்டாகத்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கக் கூடும். இது சீரியஸாக முடியும் என்று முன்னமே அறிந்திருந்தால், உடனுக்குடன் முற்றுப்புள்ளியை வைத்துவிடுவாள். நான் ஹரி உடனிருந்தபோதுதான் வருகிறேன் என்று சொன்னவுடன் அவள் தடையேதும் சொல்லாமல் அனுமதித்துவிட்டாள். அதற்குப் பின், பயணப்பணிகள் அனைத்தும் ஹரியால் துரிதப்படுத்தப்பட்டது. 22 அதிகாலையில் பயணம் என்று முடிவாகியது.
 ஆனால், 20 -ஆம் திகதி மணி 12 நண்பகல் அளவில், நான் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் விருந்துபசரிப்பில் கலந்துகொண்டிருந்த தருணத்தில், ஹரியின் அழைப்புத் தகவல் என்னை விதிர்க்கவைத்தது. சார், நமதுக் கடப்பிதழ் , பயணம் முடியும் இறுதி நாளிலிருந்து குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு உயிர்ப்போடு இருக்க வேண்டும். நமதுக் கடப்பிதழ் 3 மாதத்தில் காலாவதியாகப் போகிறது”. என்று சொன்னார். அன்று வெள்ளிக்கிழமை, சுங்கைப்பட்டாணியில் விடுமுறை, பினாங்கில்தான் எடுக்க இயலும். அதுவும், எஞ்சியிருக்கும் அரைநாளில் எப்படி சாத்தியப்படும்? கடப்பிதழ் காலாவதியானால், பயணம் முறிந்துவிடும் என்ற பதற்றம் மேலெழவே, வாயில் வைத்தச் சோற்றைத் தட்டில் வைத்துவிட்டுக் காரை எடுத்துக் கொண்டு செபராங் ஜாயா நோக்கிக்  கிளம்ப வேண்டியதாயிற்று. வழியில் 2 சிவப்பு சமிக்ஞை விளக்கையும் பொருட்படுத்தாது கடக்க வேண்டிய வேகத்தில் இருந்தேன். நேரத்தில் போய் சேர வேண்டும் என்பதற்காக.
மீண்டும் ஹரி அழைத்தார்.

“சார், கார ஓரமா நிறுத்திட்டு, உங்க கடப்பிதழை எடுத்துப் பாருங்க....”
“ஏன் ஹரி?”
“நமதுக் கடப்பிதழ் 2021-இல்தான் காலாவதியாகிறது சார்...”

நானும் திறந்து பார்த்தேன். 2021-இல்தான் முடிகிறது.

நிகழும்...

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின