Skip to main content

Posts

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

2. விரட்டுகின்ற மிருகங்கள்          கோயில்களுக்குச் செல்லும் பல தருணங்களில் அங்குள்ள கழிவறைக்குச்செல்வதைத் . தவிர்த்திருக்கிறேன். இருப்பினும், என் துரதிஸ்டம் சமீபத்தில் கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். என் மகனின் திருமணம் அதிகாலையில் ஒரு விநாயகர் கோயிலில் நடப்பதென முடிவெடுக்கப்பட்டு அக்குறிப்பிட்ட கோயிலைப் பார்ரக்ச்சென்றேன். கோயிலில் முன்பணம் கட்டிவிட்டு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு வந்துவிட்டேன். மணநாளுக்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும்போது கோயில் அலங்கரிப்புக்கான ஆயத்த வேலகளில் இறங்க ஆரம்பபித்தோம். பலர் கூடும் இடமாயிற்றே கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக அந்தப்பக்கம் போனேன். கழிவறையை நெருங்கிய தருணத்தில் இங்கே வராதே என்று மிருகத்தைப்போல என்னை விரட்டியது. அதன் துர்வாடை மொழியில் நான் பின் வாங்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் கோயில் பயன் படுத்துவதற்க்காக வாடகைப்பணம்  வாங்கிய அலுவலரும், ஒரு பெண்மணியும் இருந்தனர். கழிவறையைப்பற்றி முறையிட்டுவிட்டு திருமணத்தன்று அது தூய...

ஹோலிடேன்னா இப்படித்தாம்பா

          கடந்த வெள்ளிக்கிழமை 20.5.11ல் மீண்டும் மலேசியாவின் கிழக்குக்கடற்கரை மாநிலமான திரங்கானு மாநிலத்தின் பெர்ஹெந்தியான் உல்லாத்தீவுக்குப் பயணமானோம். பின்னிரவு இரண்டு மணிக்கு இரண்டு கார்களில்  கிளம்பிவிட்டோம். நாங்கள் மேற்குக் கடற்கரை மாநிலமான கடாரத்திலிருந்து குறுக்கு வெட்டாக போடப்பட்ட நெடுஞ்சாலையைக் கடந்து ஏழு மணி நேர ஓட்டத்தில் துறைமுகத்தை அடைந்தோம். பின்னிரவில் கிளம்பினால்தான் காலை ஒன்பது மணிக்குள் துறைமுகத்தை அடைய முடியும். அதை விட்டால் வேறு பயணப்படகு இல்லாமலில்லை. ஆனால் விடுதி செக் இன் நேரம் 12.00 லிருந்து அந்த நாளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இந்தப் பின்னரவுப் பயணம் போலும். என் மகன்கள் இரண்டு பேரின் ஏற்பாடு இது. எனக்கு இந்த நள்ளிரவுப்பயணத்தில் சம்மதம் இல்லைதான். இருவருக்கும் அப்பாவையும் அம்மாவையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். எல்லாம் அவர்கள் செலவு.            காலையில் ஏழுக்கேல்லாம் துறைமுகத்தில் இருந்தோம்.விடிய விடிய தூக்கமில்லை. அவர்கள்...

ஆக்டோப்பஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் (புதிய கவிதைத்தொடர்)

1. மறந்து விடுவதும் மன்னித்து விடுவதும் மனிதத்தன்மையா ? இலக்கிய வாசிப்புத் தளத்தில் மலேசிய வாசகர்கள் கவிதைத்துறையை விட்டு விலகிச்செல்வதாக எனக்குப்படுகிறது. இன்றைய நவீன கவிதைகள் இறுக்கமாகவும் இருண்மைப்போக்கையும் கடைபிடிப்பதால் வாசகர்களில் விலகலைத் தவிர்க்கமுடிவதில்லை.. பிடிக்காத உறவினரை, நண்பரைச் , சக மனிதரை நாம்ட எதேச்சையாகப் பார்த்தவுடன் பார்க்காதமாதிரியான பாவனையில், அவர் பார்வையே பிடிக்காமல் ஒதுங்கி நடந்து விடுவது போலவே கவிதை ஏட்டையும் விரல்களால் தள்ளிக் கடந்து போய்விடுகிறோம். படித்தாலும் புரியாது , வாசித்த மகிழ்வும் உண்டாகாது என்ற சுயகரிசனத்தில் நாம் அதனை நெருங்க மறுக்கிறோம். இது இலக்கியத்துக்கு உண்டாகிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. ஆனால் பல நல்ல கவிதைகளுக்குள் நம்மை வசீகரிக்கும் அம்சங்கள் நிறைய இருக்கும். நம்மை சுத்திகரித்து புனிதப்படுத்தும் முயற்சிகள் தென்படும். நம் ஆன்மாவை அலைக்கழிக்கும் ஆழமான செய்திகள் கிடைக்கும். நம் வாழ்வனுபவ சித்திரங்களைக்கூட கவிதையினூடே காணலாம். நம்மைப்பற்றிச் சொல்வது போலவும், நாம் அறிந்த மனிதரின் ரகசியங்களை வெளிப்படுத்துவது போலவும் சில சமயம...

பனிப்பொழிவில் 10 நாட்கள்

1. பழைய கோட்டை 1000 ஆண்டு பழமை வாய்ந்தது 2. மிதக்கும் அரண்மனை 3. பழைய கோட்டை நுழை வாயில் 13. அறிவார்ந்த மன்னர்  அதனை அடுத்து ஜந்தர் மந்தர் என்ற இடத்துக்கு கொண்டு சென்றார் மனோஜ். ஜந்தர் மந்தர் என்பதன் பொருள் formula calculation என்பதாகும். கால அளவை, வானிலை கணிப்பை, கிரக அமைப்பை கண்க்கிடும் இடத்தையே ஜந்தர் மந்தர் என்று அழைக்கிறார்கள். 1727ல் ஜெய் சிங் என்ற மன்னரால் நிறுவப்பட்ட இடம் இது. நக ஓவியம் வரைந்த மன்னர் ஜெய் சிங்தான் இவர். அவர் வானவியல் துறையிலும் கணக்கியல் துறையிலும் , வான சாஸ்திரத்திலும் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார் . அவர் மேல் நாட்டில் கற்ற படிப்பை வைத்து கள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். நேர கணக்கை கடிகாரம் வரும் முன்னரே எப்படிக் கணக்கிடுவது என்பதற்கான முறையான அளவீட்டுக்கருவி அங்கே அமைக்கப்பட்டிருந்தது. சூரியன் உதித்து சாயும் நேரத்தில் நிழல் விழும் கருவியைக்கொண்டு நேரம் அறியலாம். நாங்கள் புரிந்துகொள்வதற்குச் சிரமமில்லாமல் இருந்தது. அப்போது கடிகாரத்தில் நேரம் பார்த்தேன் துல்லிதமாக இல்லையென்றாலும் நேரத்தை நிமிடக் கணக்கு குறையாமல் காட்டியது. சூரிய சந்தி...

பனிப்பொழிவில் 10 நாட்கள் மேலும் படங்கள்

 மார்பல் சலவைக்கல்லை கைகளால் செதுக்கும் ஒரு கலைஞர்,  தாஜ்மஹால் போக குதிரை வண்டி  உணவுக்கு முன் பரிமாறப்படும் டிசர்ட். முள்ளங்கி வெங்காயம், தக்காலி மிளகுத்தூளோடு கலந்தது.

12. பனிப்பொழிவில் 10 நாட்கள்

                                                    ஜெய்ப்பூர் அரண்மனை                                                       பிங்க் சிட்டி             அடுத்து நாம் காணவிருக்கும் வானவியல் சார்ந்த அரசரின் கருவிகள் வேல்ஸ் இளவரசரை நையாண்டி செய்த ஜெய்ப்பூர் மன்னர் புதிய கோட்டையில் முதலில் பிங்க் சிட்டியைப் பார்க்கலாமென்றார் மனோஜ். வண்ணத்தை  சிவப்பு வண்ணத்தில் மஞ்சல் வண்ணத்தைக் கலந்தால் உண்டாகும் வண்ணம் பிங்க் என்று சொன்னால் சரியாக இருக்கும்.     அரண்மனை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் உள்ள கட்டடம் முழுவதும் மேற்சொன்ன வண...

11. பனிப்பொழிவில் 10 நாட்கள்

ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு போகும் நெடுஞ்சாலையில் ஓர் உணவுக்கடை, சாப்பாட்டுக்கு முன் உண்ணும் டிசெர்ட் வகை, ஹாட்டலில்,ஜெய்ப்பூர் சாலை.  ஜெய்ப்பூர் அரண்மனை, ஆக்ரா  செங்கோட்டை, ஜெய்ப்பூர் கோட்டை   கோட்டைகளும் ராஜ வம்சமும்    ஜெய்ப்பூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் குஜார் சாதிப்பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்தி கிடைத்தது. தங்கள் இனத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய பொருளாதார வேலை வாய்ப்பு விகிதம் மிகக்குறைவு என்று அது கூட்டப்பட வேண்டுமென்ற நோக்கத்தொடு நடக்கும் போராட்டம் தான் அது. இந்தியாவில் கணக்கற்ற சாதி பிரிவினைகள் உண்டு. ஒரு குறிட்ட சாதிக்குள்ளே நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் வேறு. சில இடங்கள் குறிப்பிட்ட உட்பிரிவினருக்குள்ளேதான் மணம் புரிந்து கொள்கிறார்கள். உறவு முறை கொண்டாடுகிறார்கள். அவர்கள் குலதெய்வம் , சிறுதெய்வம் கூட வேறுபடும். இந்து சமயத்தில் மக்கள் புரிதலுக்கேற்ப பல்லாயிரம் சித்தாங்கள் உருவாகின. அவர்கள் வாழ்வு  முறைக்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப, கடவுள்கள, சிறுதெய்னங்கள், குலதெய்வங்கள், கோயில்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக கூடிய...