Skip to main content

தொடர் 5. பனிப்பொழிவில் 10 நாட்கள்

     in Chandigar hotel, and in simla





5.     இங்குள்ள இயற்கை வளத்துக்காகவும், கனி வளத்துக்காகவும்தான் , இந்தியாவை வளைத்துப்போட அரசு நிர்மாணித்து மக்களை அடிமைப் படுத்தினான். எவ்வளவு போராட்டம். ? எத்தனை மரணம்? எவ்வளவு துப்பாக்கிப் பிரயோகம்? நாட்டை ஒரே ரத்தக்களரியாக்கிவிட்டுத்தான் சென்றான். வெள்ளைக்காரனுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து திமிறோடு சண்டை யிட்ட பஞ்சாப் பகத் சிங்கை மறக்கமுடியுமா? அவர் பிறந்த மாநிலத்தில் அப்போது நான் இருக்கிறேன் என்பதே உடல், உள்ளம் சிலிர்க்கும் தருணம். அவர் போரிட்ட இடங்களை என் கால்களும் மிதிக்கப் போகிறது என்பதில்  என் நீண்ட நாள் கனவு. அவர் வெள்ளையர்களால் தூக்கிலடப்படுவதைப் பற்றி காந்தி வாய்த்திறக்கவில்லை, என்ற செய்தியை நான் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ யைப்படித்த போது சற்று கோபம் வந்தது. காந்தி பிரிட்டிசாருக்கு எதிராக ரத்தம் சிந்தாத அகிம்சை வழியை பின்பற்றி யிருந்தவர். தன் கொள்கைக்குச் சவால் வரும்போதெல்லாம் சத்யாகிரகத்தைக் கடைபிடித்து   மக்களை தன் வழிக்குக்கொண்டு வந்தார். ஆனால் பகத் சிங்குக்கு அதில் விருப்பமில்லை. தன் 12 வயதில் தம் மக்களை பிரிட்டிசார் துப்பாக்கி முனையில் சுட்டுக்கொன்ற ஜாலியன் வாலா படுகொலையை நேரில் பார்த்தவர் பகத் சிங். மக்கள் ரத்தம் சிதறி நாய்களைப்போல் சரிந்து விழுந்து மாண்டதைப் தன் கண்களால் பார்த்தவர்,  அப்போதே காந்தியின் அகிம்சை வழி சரி பட்டு வராது என்று முடிவெடுத்தார். ரத்தத்துக்கு ரத்தம் என்ற இம்சை வழியைத் தேர்ந்தெடுத்தார். சில விடுதலைப் போராட்ட  இயக்கங்களில் ஈடுபட்டு பிரிட்டிசாரின் துப்பாக்கி முனையை எதிர்த்து நிற்கும் துணிச்சலை வளர்த்துக்கொண்டார். சில பிரிட்டிசாரைச் சுட்டுக் கொன்றவரும் கூட. பின்னாலில் பிரிட்டிசாரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார்- அவருக்குத் தீவிரவாதி என்ற குற்றத்தைச் சுமத்தி! அவர் சரித்திரத்தைப் படிக்கும்போது ரத்தம் உறைந்து போகிறது. காந்தியின் அகிம்சை நெறிக்கு நேரெதிர் கொள்கையைக்கொண்ட பகத் சிங்கை எப்படி ஆதரிப்பார் காந்தி ?  இரண்டுமே விடுதலைக்கான போராட்டம்தான்  என்றாலும் , முற்றிலும் முரண் பட்ட வெவ்வேறான பாதை. அரசியல் என்பதற்கு அரசியல் என்பதைத் தவிர வேறென்ன பொருள் இருக்க முடியும்? அப்போது பகத் சிங்கின் ரத்தத்துக்கு ரத்தம் என்ற அடிப்பையிலான போராட்டத்தை காந்தி ஆதரிக்கவில்லையென்றாலும் பகத் சிங்கின் வீர தீரச் செயல்களுக்கான அங்கீகாரம் சரித்திரம் கொடுக்கத் தவறவில்லை. அவரின் சிலை தேசத்தலைவர்கள் வரிசையில் இடம் பிடிப்பதை டில்லியிலும் பிற இடங்களிலும் பார்க்க முடிந்தது.
      
          பஞ்சாப் தலை நகரான சண்டிகாரில் இரவு தங்குவதாகத்திட்டம். ஆனால் அதற்கு முன்னால் தொழிற்பேட்டை நகரமான பட்டியாலாவுக்குள் நுழைந்து சில வணிக வேலையை முடித்துக்கொண்டு சண்டிகார் போய்விடலாமென்றார் மருமகன். படியாலாவுக்கு நெடுஞ்சாலையிலிருந்து இடது பக்கம் வலைந்து நுழைந்தோம்.
அங்கேயே வணிக வேலையையும் பகல், உணவையும் முடித்துக்கொண்டு சண்டிகார் பயணமானோம்.
         சண்டிகார் பஞ்சாப்புக்கு மட்டும் தலை நகரமல்ல- ஹரியானா மாநிலத்துக்கும் சேர்த்துதான்.
         எப்படி ஒரே பட்டணம் இரு மாநிலங்களுக்குத் தலைமைப்பட்டணமாக இருக்க முடியும்? குழப்பமாக இருக்கிறதல்லவா?
         கதை இதுதான்.
         இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் விவகாரங்களில் தனிநாடு கோருவதும் ஒன்று. மக்கள் பிளவு பட்டு நிற்கும் போக்கு பிர்ட்டிசார் போட்ட திட்டம்.  divide and rule என்ற அவர்களின் அரசியல் சாணாக்கியம் இன்று வரை மக்களை பிளவுபடுத்தியே வைத்திருக்கிறது. தற்போதுகூட தெலுங்கானா தனிநாடு போராட்டத்தில் குதித்து இந்திய அரசின் கண்களில் விளக்கெண்ணெய் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது. இதேதான் சண்டிகாருக்கும் நடந்தது.
         சண்டிகார் ஹரியானாவுக்குத்தான் சொந்தம் என ஹரியானாவும், இல்லை பஞ்சாபுக்குத்தான் உரியது என பஞ்சாப்பும் போராடிய காலம் ஒன்றுண்டு. தலையைப் பிய்த்துக்கொண்ட மத்திய அரசு சண்டிகார் இரண்டு மானிலதுக்குமே சொந்தம் என சர்ச்சயை முடித்தது. சண்டிகாரும் ஹரியானாவும் ஏற்கனவே ஒரே மாநிலாமக இருந்து பிரிந்து போன கதையைச் சொன்னால் அது ஹனுமான் வால் மாதிரி நீளும்.           சண்டிகாரில் ஒவ்வொரு மாநிலச்செயலகமும் வெவ்வேறு கட்டடத்தில் அமைந்திருக்கிறது -பக்கம் பக்கம். மற்றபடி சண்டிகாரின்  வருமானம் , வரி இன்னப்பிறவற்றையும் எப்படி பங்கிட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. குழப்பமில்லாமல் பங்ககிட்டுக்கொள்ளுதல் நடக்கிறது என்பதற்கு அங்கு நிலவும் அமைதி ஒரு காரணமாகிறது.

       அன்றிரவு சண்டிகாரில் தங்கினோம். விடுதி அறை விலை , உணவு விலையெல்லாம் விஷம் மாதிரி எகிறிக்கிடக்கிறது. முன்பெல்லாம் வெங்காயத்தை உரிக்கும்போதுதான் கண்ணீர் வரும், இப்போது விலையைக்கேட்டாலே கண்ணீர் வருகிறது. மற்ற பொருட்களின் விலை ஏன் ஏறாது?
      அந்த இரவு நாங்கள் தங்கிய விடுதியில் திருமண வரவேற்பு விருந்து நடப்பதாக இருந்தது. விடுதியில் வளாகத்திலேயே விருந்து நடைபெறுவதற்கான தடபுடல் நடந்து கொண்டிருந்தது. நிஜப்பூக்களாளான அலங்காரம் அழகாக வரவேற்றது. குளிர் காலத்தில் பூக்களுக்கா பஞ்சம்? பாட்டுச்சத்தம் அறைக்குள் அத்துமீறி நுழைந்து கொண்டிருந்தது. சரி என்னதான் நடக்கிறது என்று விருந்து நடக்குமிடம் சென்று பார்த்தால் வெறும் பாட்டுச்சத்தம் மட்டுமே கேட்கிறது. மேடையிலோ , உட்காருமிடங்களிலோ யாருமில்லை. பஞாசாபிகளின் பங்கரா நடனத்தைப் பார்க்கலாமென்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை விருந்தினரை அங்கே பார்க்க முடியவில்லை. திருமணம் அருகிலுள்ள விடுதி மண்டபத்தில் நடந்து முடிந்து .. அப்படியே கிளம்பி விட்டிருக்கிறார்கள் . உணவையும் உள்ளேயே முடித்துக்கொண்டார்கள் போலும். இளவட்டக் கூட்டம் அதிகம் இருந்திருந்தால் அந்த விழா ரெண்டு பட்டிருக்கும்.       .....பயணனிப்போம்......


Comments

அற்புதமான புகைப்பட பகிர்வுக்கும், அர்த்தமுள்ள பதிவுக்கும் பராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
ko.punniavan said…
வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின