Skip to main content

யாருமற்றவர்களின் மறைவு


 

உடன் யாருமற்றவர்கள்

யாருமற்றவர்களாகவே

இறந்துபோகிறார்கள்

 

உள் தாழ்ப்பாளின்

முழு பாதுகாப்புடன்

நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு

 

திரும்ப அழைக்கக்கூடுமென்றே

நம்பித் தொலைக்கிறது

பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்

 

சேர்ந்தும் சேராது

நிரம்பி மினுக்கிட்டபடியே

காத்திருக்கின்றன

குறுந்தகவல்கள்

 

வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள்

பொறுப்பற்றவன் என்ற

நிர்வாகக் கோபத்தில்

கனன்றுவிடுகிறது

 

பிள்ளைகள் தொடர்புகள்

எரிச்சலூட்டி அடங்கும்போது

அப்பா எப்போதும் போலவே

வெளிநாடு சென்றிருக்கலாமென

ஆசுவாசப்படுகின்றன

 

 

தொந்தரவாகுமென்ற மருகலே

கதவு தட்டல்கள்

இரண்டு முறைக்குபிறகு

நிராகரித்துவிடுகின்றன

 

பதிலற்றபோது

கடன் கொடுத்தவன் மனம்

இவன் இறந்திருக்ககூடாதென்றே

வேண்டிக்கொள்கிறது

 

இறந்த பின்னும் நீடிக்கிறது

உயிரோடிருந்தபோது

நிலை கொண்ட

வீட்டின் மௌனம்

 

இருட்டிலிருந்து மீண்ட

மின்விசிரி வெளிச்சத்தில்

மேலும் இரைந்து

சுழன்றுகொண்டிருந்தது

 

தான் செத்துப்போனால்

யாருக்கும் தெரியாமல் போய்விடுலாம்

என்ற கவலை

இனி ஒருபோதும்

அதற்கில்லை

 

 

                         

Comments

மனதை என்னவோ செய்கின்றன இக்கவிதைவரிகள். இப்படித்தான் நடக்குமென்றால், நான் கூவிக்கொண்டு கூடிவாழவே ஆசைப்படுகிறேன்.
ko.punniavan said…
நன்றி விஜி. என் நண்பர் ஒருவர் தனித்து வாழும்போது உண்டான அனுபவம்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ko.punniavan said…
பேராசிரியர் பிரேமலதா, நன்றி. தமிழகத்தில் எங்கள் நூல் கிடைப்பது அரிது. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்,ஆதிகுமணன் நூலகத்தில என்னுடைய முதல் மூன்று சிறுகதை தொகுப்புகள் சேகரித்து வைத்துள்ளார்கள். மற்றபடி கடைகளில் மலேசிய நூல்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி.
மலேசியாவிலிருந்து ரெ.கா புலோக் போய்ப்பாருங்கள்.
MUNIANDY RAJ said…
அருமையான கவிதை. தனிமையின் மரணத்தில் காணாமல் போனவர்களின் அவலக்குரலாய் ஒலிக்கிறது..! தனிமையில் மரணிப்பது உண்மையில் கொடுமைதான்.... மிகச் சிறப்பான வரிகள்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின