Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 7

 மார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்.

அந்த தேவாலயத்தை விரைவில் பார்க்க எவ்வளவு முயன்றும்  முடியவில்லை. முன்னமேயே டிக்கட் பெற்றிருக்கவேண்டும். உள்ளே நுழைந்தால் அதற்கு அரைநாள் வேண்டும் சுற்றிப்பார்க்க. இருந்தாலும் அதன் வெளி வடிவம் புராதனமானது,  பிரம்மாண்டமானது. ரோமன் கெத்தலிக் மற்ற கிருஸ்த்துவ பிரிவினைகளைவிட மிகப் பெரியது. அதற்கான அடையாளமாக இந்த லா செகாட்ரா பெமில்யா  ஆர்வத்தோடு எம்பி நின்று விண்ணைத் தட்டிப்பார்க்க முனைகிறது. ஆதிகால ஆட்சியாளர்கள் தாங்கள் இருப்பை நிறுவவும், அடையாளமாகவும்  பிரம்மாண்ட கட்டடங்களையும், கோட்டைகளையும் நிறுவும் முயற்சியில் மக்கள் நலத்தைக் கருதாமல் விட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சீனா இந்தியா போன்ற நாடுகளில் இந்த அதிகாரத்துவ அடையாளங்களைக் காணலாம். மருமகன் இந்த தேவாலயத்துக்குள் நுழைந்துவிடவேண்டுமென்று முயற்சி செய்துகொண்டிருந்தார்.
லா சகார்டா தேவாலய்த்தில் நீளும் வரிசை.

இடையில் நான் சிறுநீர் கழிய கழிப்பறை தேடினேன். ஒரு பொதுக்கழிப்பறையைக் காட்டினார்கள். உள்ளே நுழைந்ததும் 2 பிரேங்க் கட்டவேண்டும் என்றார் ஒரு கருப்பினப் பெண். "2 பிராங்ஸ்?" என்றேன் அதிர்ச்சியோடு. மனம் மலேசிய ரிங்கிட்டுக்குக் கணக்குப் போட்டுப் பார்த்தது. எட்டு ரிங்கிட். பொரேய்ன்ல யுரின் போறதுக்கே எட்டு ரிங்கிட்டா? எனக்கு அதிர்ந்தது. என்னடா இது  ப்ரான்சிலே இந்தப் புண்ணியவானுக்கு வந்த சோதனை? எட்டு ரிங்கிட் கொடுத்து யுரின் போவதைவிட திரும்பிடலாமா என்று நினைத்தேன். இந்தியாவிலே எவ்வளவு மலிவு மனிதர் யுரின். அதனால்தான் அதனை அங்கே ஒன்னுக்கும் ரெண்டுக்கும் போவதை 'வெளிக்கு போவது; என்று சொல்கிறார்களோ. இங்கே வெளிக்கு உள்ளேதான் போகவேண்டும். என்ன செய்யலாம்? சரி நாம் திரும்பிப் போனால் கருப்பழகி நம்மைத் திட்டினாலும் திட்டலாம். ஆள் அப்படித்தான் இருந்தாள். அழுதுகொண்டே 2 பிராங்க் கொடுத்துவிட்டு உள்ளே போனேன்.
என்ன இருந்தாலும்  தமிழனின் பெருமையைக் காப்பாற்றவேன்டுமல்லாவா?
பொரேய்ன்ல யுரின் போறதுக்கு  எட்டு ரிங்கிட் கட்டிய பெருமையை அடைந்திருக்கிறேனல்லவா?
நான்காக மடித்து வைத்துக் கொள்ளும் சைக்கில்

அங்கிருந்து மெட்ரோ  ரயில் பிடித்து லா ரம்லா சந்தைக்கு விரைந்தோம். திறந்த வெளியில் வெயில் அடித்ததுதான், ஆனால் அதில் தகிப்பு இல்லை, இதமாக இருந்தது. அங்கே கோடைகாலத்தில் வெயிலில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதைப் பார்க்கமுடிகிறது. விசாரித்துப் பார்த்ததில் சிதோஷ்ண நிலை 20 செல்சியஸ்சில்தான் இருந்தது.

பார்சிலோனா சாலையில் எங்கேயும் வாகன நெருக்கடியைப் பார்க்கமுடியவில்லை. இங்கே போல பரபரப்பு இல்லை. "ஹேய் மௌ மத்திக்கா," ( டேய் சாவ் கிராக்கி வூட்ல சொல்ட்டு வந்துட்டியா) என்று உரசி நமக்கு கண நேர எமனைக் காட்டிச்செல்லும் பீதி இல்லை. அவசரம் இல்லை. சாலையில் பாதசாரிகள் குறுக்க நடக்க காத்திருக்கும் தருணத்தில் வாகனங்கள் நின்று வழிவிட்டு பின்னர் செல்கின்றன. சமிக்ஞை  விளக்கு  பல இடங்களில் இல்லாமல் இருந்தும்!
மெட்ரோ ஸ்டேசன் நெடுக்க இப்படியான கலைஞ்சர்களைச் சந்திக்கலாம்.
பேருந்துக்கு , கார்களுக்கு ,சைக்கிலுக்கு, என தனித்தனி சாலைகள்.
லாரியை நான் பார்க்கவில்லை. காதைத் துளைக்கும் ஹாரன் சத்தம் இல்லை.
பேருந்து வரும் நேரத்தை பேருந்து நிறுதத்திலேயே இன்ன பேருந்து இன்ன நேரத்துக்கு வரும் என்று எழுதியிருக்கிறார்கள். சரியாக அந்த நேரத்துக்கு வந்து நிற்கிறது. வீட்டிலிருந்து இன்ன நேரத்துக்குக் கிளம்பினால் போதும். போய்க் கால்கடுக்க காத்திருக்கவேண்டியதில்லை என்ற மனநிலை அங்கே நிலைத்துவிட்டது. நேர நிர்வாகம் அங்கே அத்துப்படி. அங்கேதான் காலம் பொன்போன்றது. இங்கே காலமாவது கத்தரிக்காயாவது? இப்படி எல்லாம் முறையாக நடக்க எப்படி சாலை நெருக்கடி வரும்?

நம் ஊரில், முன்பை விட,  மக்கள் எளிதாகப் பயன்படுத்த சாலையை மாற்றி அமைப்பார்களாம். அதற்குப் பிறகுதான் சாலை நெரிசல் மோசமாகும். நகராண்மைக் கழகம் இதற்காகவே இவர்களை மேலை நாட்டுக்கு அனுப்பி கற்றுத் தெளியச் செய்வார்கள். திரும்பியவுடன்தான் இந்த கோளாறெல்லாம் நடக்கும். உங்கள் பட்டணத்தில் நகராண்மைக் கழகத்தை விசாரித்துப் பாருங்கள் எத்தனை கழிசடைகளுக்காக இப்படிப் பணத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் என்று தெரியும். இவைங்க உல்லாசமா இருக்க நம்ம கட்டும் நகரான்மை வரிதான் கிடைத்ததா?
பேருந்து மாதிரி இருக்கும் லிமோசின் கார் சந்தைப் பாதையில்
லா ரம்லாவில் ஐஸ் கிரீம் ஸ்டால்

லா ரம்லா சந்தை கொஞ்சம் விநோதமாகக் காட்சி அளித்தது. அங்கே என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். வெளித் தெருக்களில் எண்ணற்ற கடைகள் அங்காடிகள் நிறைந்து கிடக்கின்றன. எத்தனையோ கிலோமீட்டருக்கு நீண்டு கிடக்கிறது சந்தை. பிரட்டிய சோறிலிருந்து தேங்காய் பருப்பு வரை பொட்டல்ம் கட்டி விற்கிறார்கள். தேங்காய் பருப்பு என்ன விலை என்று பார்த்தேன். பத்து ரிங்கிட்டுக்குக் குறையாது. கால் தேங்காய்தான் இருக்கும்.

சந்தையில் ஒரு அங்காடி மட்டுமே இது
அங்குள்ள ஐஸ்கிரீம் மிகச் சுவையானது என்று பிரம்மிப்போடு கூறி அனுப்பினார் ஒரு நண்பர். அப்படியொன்றும் பிரத்தியேக சுவை இல்லை.
ஆனால் நான் அறுபதுகளின் இளைஞர்களின் மானசீகக் காதலியான மார்லின் மன்றோவைப் பார்த்த விதம் தான் எனக்குக் கழுத்து வலி கொடுத்தது.

நாங்கள் நடந்து சென்ற கடைத் தெருவில் நான்கு மாடிக் கடைகள் இருந்தன. அதில் மூன்றாவது மாடியில் மார்லின் மன்றோ அவள் கட்டியிருந்து  வெள்ளைப் பாவாடை காற்றில் பறக்கப் பறக்க மெல்லிய உடலசைவை நிகழ்த்திக்கொண்டிருந்தாள் ,வெகு நேரம். பாவாடை புயல் மழைக்கு கட்டுப்பாடாத குடைபோல மேலேயும் கீழேயும் பறந்து கொண்டிருந்தது, அந்த ஆட்டம் அவள் நம்மை அழைப்பு விடுப்பது போல இருந்தது. பறக்கும் பாவாடையை அமுக்கி அமுக்கி வேறு பிடித்துக்கொண்டிருந்தாள்.இது எப்படி இருக்கு?

அவள் ஒருகால் விலைமாதாக இருக்கலாம். அல்லது பாருக்குள் நம்மைக் கவரும் பணியாளாகக் கூட இருக்கலாம்.  நான் வெகு நேரம் ரசித்து நகராமல் நின்று விட்டதை கவனித்துவிட்ட என் மனைவி என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றுவிட்டாள்.  நான் ஏக்கத்தோடு திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தேன்.ஒரு நல்லது கெட்டத அனுபவிக்க விடுறாளா?  இனி எப்போது இப்படிப் பார்க்கக் கிடைக்கும்? ம்?


மார்லின் மன்றோ


 தொடரும்........



Comments

வணக்கம்
ஐயா.
தங்களின் பதிவை படித்த போது சிரிப்புக்கு பங்சமில்லை... அப்படி நகைச்சுவை கலந்த கலவையாக எழுதியுள்ளீர்கள். படங்கள் எல்லாம் மிக அழகாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ko.punniavan said…
நன்றி ரூபன்,
தொடர்ந்து வாங்க.
PUNNIAVAN said…
லா சாக்ராத்தா பாமிலியா (LA SAGRADA FAMILIA)...நமது மொழியில் "புனித திருக்குடும்பம்" என்பதாகும். யேசுவின் இந்த பூவுலகக் குடும்பத்தையே அவ்வாறு அழைக்கப்படுகிறது... நானும் அங்கு சென்று வந்தேன் . உங்கள் பயணக் கட்டுரையை படித்தவுடன் என் நினைவுப் பாதச் சுவடுகள் நடக்க ஆரம்பித்துவிட்டது. மிக்க நன்றி

செபஸ்டியன்
PUNNIAVAN said…
லா சாக்ராத்தா பாமிலியா (LA SAGRADA FAMILIA)...நமது மொழியில் "புனித திருக்குடும்பம்" என்பதாகும். யேசுவின் இந்த பூவுலகக் குடும்பத்தையே அவ்வாறு அழைக்கப்படுகிறது... நானும் அங்கு சென்று வந்தேன் . உங்கள் பயணக் கட்டுரையை படித்தவுடன் என் நினைவுப் பாதச் சுவடுகள் நடக்க ஆரம்பித்துவிட்டது. மிக்க நன்றி

செபஸ்டியன்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த