Skip to main content

கமிட்டட்


கமிட்டட்.


இன்று என் 16 வயது பேத்தியை அவள் பள்ளிக்குப் போய் ஏற்றிவரச் சென்றிருந்தேன். சற்று தாமதமாகி விட்டது. அரை மணி நேரம். நிறுத்தத்தில் அவளோடு அதே வயது கொண்ட  பையன் காத்திருந்தான். இருவர் மட்டுமே அங்கே. என் கார் வருவதைப்        பார்த்துக்    கொண்டிருந்தவள்  சுணக்கமின்றி  வந்து ஏறிக்கொண்டாள்.
அந்தப் பையன் யாரென்று கேட்டேன். என் பேத்தி கொஞ்சம் துடுக்குக்காரி.

“அவனுக்குக் கேல் பிரண்டு இருக்கு,” என்றாள்.

"அந்தப் பையன் யாருன்னுதான கேட்டேன்?: என்றேன்.

“எல்லாரும் சந்தேகக்  கண்ணோடையே பாக்குறீங்க,” என்றாள்.

“உன் வயது அப்படி!” என்றேன்.

“அவனுக்கு ஒரு கேல் பிரண்டு இருக்கு, எனக்காக  எப்போதும் காத்திருந்து அனுபிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான், அவங்கிட்ட மோட்டார் சைக்கில் இருக்கு,” என்றாள். “எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல. நான் படிக்கணும்,” என்றாள். அவள் வார்த்தையில் பொய்யில்லை. படிவத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கக் கூடியவள். சதா படிப்புதான். தொடர்ந்து  4 மணி நேரம் அசையாமல் படிக்கக் கூடியவள். அதனால் எனக்கு  அவள் மீது காதல் சந்தேகம் ஏதுமில்லை.

“எனக்குச் சந்தேகம் இல்லை!  நான் சந்தேகப் படுவதாக நீ ஏன் நினைக்கிறாய்?” என்றேன். புற உலக மனிதர்களை நீ தூய்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே என்றேன்.

"சரி அவனுக்கு கேல் பிரண்டு இருக்கின்னியே .. கெட்டிக்கார மாணவர்களுக்குக் கூட காதல் எண்ணம் வருகிறதே,” என்றேன். எனக்குப் பள்ளிக் காலத்தில் காதல் துளிர்ந்தபோது நான் கெட்டிக்கார மாணவனாக இல்லை. ஆனால் கெட்டிக்கார மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவாரகள் என்றது என் முன்னபிப்பிராயமும் அனுபவமும். .

“தாத்தா அத நீங்க காதல்னு நினைக்கக் கூடாது. அவங்க ரெண்டு பேரும் கமிட்டட் ஆயிருக்காங்க,”என்றாள்.

“கமிட்டடுக்கு நீங்க எப்படி பொருள் சொல்லுவீங்க?” என்று எதிர்க் கேள்வி கேட்டேன்.

“அதாவது தாத்தா ரெண்டு பேரும் பேசுவாங்க பழகுவாங்க..ஆனால் காதல்ங்கிற உணர்வோட இல்லை!”  என்று சொன்னாள்`

கமிட்டட்னா என்னான்னு கேட்டேன்.

“ ரெண்டு பேருக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அபெக்சன் உண்டு. ஆனால் நெருக்கமில்ல. உடல் நெருக்கமில்ல. மொதல்ல படிப்பு அப்புறம் பல்கலைக்  கழகம் அப்புறமாத்தான் காதல் என்றாள். ரெண்டு பேரும் நல்லா படிக்கிறவங்க   அதனால்  நல்லா படிச்சி, அச்சீவ் பண்ணிய பிறகுதான் எல்லாம்,  அதில  ரெண்டு பேரும் உறுதியா இருக்காங்க,” என்றாள்

சரி நல்ல முதிர்ச்சியான சிந்தனைதான்.” ஆமாம் அதெப்படி அப்புறம் காதல் பண்ணிக்கலாம் என்று சொல்ல முடியும்? இப்போதைக்கு அந்த எண்ணம் மனசுல இருக்கிறனாலதானே?”  என்றேன்.  “அது அவர்களை சும்மா விடாதே?”

தாத்தா.. கமிட்டுக்கும் காதலுக்கும்  வித்தியாசம் இருக்கு.

அதாம்மா காதல் எண்ணம் மனசுல  இருந்தவாசிதான கமிட்மண்ட் உண்டாயிருக்கு.

தாத்தா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும். பிரண்சிப் காதலா?

“பெரும்பாலும் இல்ல. ஆனால் பதின் வயதுல அது காதலா மாறலாம். யாராவது ஒருத்தருக்கு இந்த எண்ணம் வர வாய்ப்பிருக்கு,  அப்புறம் அது பேஷனா (passion) மாறலாம்.”

“அப்படியில்ல . பிரண்ட்சிப்பும் காதலும் வேற   வேற”.

“இருக்கலாம்.  எனக்கு ஒன்னு புரியல. அபெக்சன்னு சொல்றே, காதலுக்கான வலிமையான புள்ளி அபெக்சன் தானே.

“பிரண்சிப், நெருக்கமான பிரண்சிப், கமிட்டட் அபெக்சன் எல்லாம் காதலாகாது. அபெக்சனுக்கும் காதலுக்கும் இடையில் ஒரு தின் லைன் இருக்கு. அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும்  என்றாள். அந்த மெல்லிய கோட்டைத் தாண்ட மாட்டாங்க!” என்றாள்.

“அந்த மெல்லிய கோடு கொஞ்சம் அழிஞ்சாலும் ஆபத்துதான்!” என்றேன்.

ஆமாம், அப்படித்தான்.


“இபோ எனக்குப் புரிஞ்சிடுச்சு,” என்றேன்.

என்னா புரிஞ்சிடுச்சு?

“எனக்குக் காதல் என்பது குழப்பமானதுன்னு.”














Comments

bryan isaac said…
nice short story saab
தானே எழுதி, பின் வேண்டுமென்றால் திருத்தி, அல்லது அழித்து அல்லது வேண்டுமென்றால் மீண்டும் இடப்படும் கோட்டிற்கு என்ன பெயர் வைத்தால் தான் என்ன?
ko.punniavan said…
நன்றி சுதன், பிரான்சிஸ்.
Unknown said…

ஏற்கெனவே படித்த கதை ஆனால் முடிவில் மாற்றம். எழுத்தாளரை ஏசாமல் இருக்க முடியவில்லை.பள்ளி விடுமுறையில் மகிழ்ச்சியாகத்தான் எழுத்தாளரின் வலைப்பதிவைத் திறந்தேன். 'விசில்' சிறுகதையின் முடிவில் அவர் மேல் பழைய கோபம் இருந்தது.இருந்தாலும் என்ன செய்வது .உண்மைதானே.பெற்றோரை கவனிக்காமல் தவறவிட்ட,தவறவிடும் மானுடனுக்கு இக்கதை ஒரு சூடு.இரண்டு மணி நேரம் தன்னம்பிக்கை பயிற்சிக்கு சென்று வந்தவன் பெறாத அனுபவத்தை ஒரு சிறுகதையில் பெற முடியும் என்பதற்கு விசில் ஓரு மாதிரியே.மன்னிக்கவும் தொடர்ந்து எழுத நேரமில்லை.போகவேண்டும்........என் அப்பாவைப் பார்த்து ஒரு வாரமாகிவிட்டது.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின