Skip to main content

2. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

 
 
20 டிசம்பர் வீட்டிலிருந்து கிளம்பி மூன்று கார்களில் கோலாலம்பூருக்குப்
புறப்பட்டோம். 2 கார்களில் புறப்படலாம் என்ற எண்ணத்துக்கு  தடிமனான குளிராடைகள் குறுக்கே நின்றன. முதல் நாள் இரவில் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள காலை விமான ஏறுவதாகத் திட்டம். மூன்று கார்களையும் ஏழு நாட்களுக்கு விமான நிலையத்தில் பார்க்கிங் செய்வதற்கான கட்டணம் மிச்சம். உறவினர்களே விமான நிலையத்தில் விட்டுச்சென்று 27ம் நாள் வந்து ஏற்றிக்கொண்டனர். பாவம் சிரமம்தான்.வேலையிலிருந்து விடுப்பெடுத்து  முகம் கோணாமல் உதவியாக இருந்தனர்.
                விமானத்தில் ஏறி அமர்வதற்கு முன்னர் பூர்வாங்க வேலைகளையெல்லாம் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எங்கள் பயணப் பைகளின் சுமை 5 கிலோ கூடிவிட்டிருந்தது. அதற்கு ஒரு கிலோவுக்கு 50 ரிங்கிட் விதித்தார்கள். நான் சொன்னேன் கைப்பைகள் ஒவ்வொன்றும் 7 கிலோக்கள் இருக்காது. கூடுதல் சுமையை கைப்பைகளில் போட்டுக்கொள்ளலாமென்று.
என் இரு மகன்களும்  "ச்சும்மா போங்கப்பா நாங்க பாத்துக்கிறோம், வந்துட்டாரு கஞ்சத்தனத்த காட்ட" என்று விரட்டினர்.

"தண்டத்துக்கு 250 ரிங்கிட் கட்டாதீங்கடா!" என்றேன்.

என்னைப் பார்த்து முறைத்தார்கள். அவர்களுக்கு எங்கேயும் பேரம் பேசிவிடக்கூடாது. அது அவர்கள் கௌரவத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமென்ற பயம்.

 நான் சொன்னேன்.... "புள்ளைய்ங்களா டோனி பெர்நாண்டஸ் நாட்டுல பத்து பணக்காரன்ல ஒருத்தர், அவர முதல் நிலை பணக்கரனாக்கப் பாக்குறீங்களே என்றேன்,"

"ஆவட்டுமேப்பா! நம்ம ஆள்ள ஒருத்தர் ப நம்பர் ஓன் பணக்காரரா வர்ரதுல ஒங்களுக்கு ஏன் வயித்தெரிச்ச?

"இப்படியே போனா எம்புள்ளைங்க நீங்க ஆகக் கடைசி பத்து
ஏழைகள் பட்டியல்ல வந்துடுவீங்களேப்பா! என்றேன்.

"ஆமாம்பா 250 ரிங்கிட்ல நாங்க ஏழையாயிடுவோம் ல?"

"இப்படியே வீண் செலவு பண்ணா? ஒங்க கௌரவ குறைச்ச ஒருத்தன மேலும் பணக்காரனாக்குதுன்னா... அது எவ்ளோ பெரிய தியாகம்டா சாமி.." என்று சொல்லிக்கொண்டே வெளியாகிவிட்டேன். இல்லை, இல்லை, வெளியாக்கப் பட்டேன்.

கடைசியில் பிடிவாதமாய் டோனியை மேலும் 250 ரிங்கிட் பண்க்காரனாக்கி விட்டார்கள் என் தங்கங்கள். அடுத்த ஆண்டு கோடீஸ்வர்னகள் பட்டியலப் பாக்கணும்!
கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காச இப்படி சாம்பலாக்கறானுங்களே.

என் வயிற்றெரிச்சலை என் மனைவியிடம் வந்து கொட்டினேன்." நீங்க என்னா பண்ணிக்கிட்டு இருந்தீங்க... பராக் பாத்தீங்களா..? என்றாள்.

"கடைசில இவனுங்க செய்யுறத் பராக் பாக்குற அளவுக்கு ஆக்கிட்டனுக்களே! .. "என்று முனகினேன்.

டோனி பெர்னாண்டஸ நக்கலடிச்சு யாரோ என் மின்னஞ்சலுக்கு அனுப்பிய ஒரு கதையைய விமானம் பறக்கும் போது என் பேரப்பிளைகளிடம் சொன்னேன். இப்போ அதுங்கத்தான் நம்ம பேச்ச கேக்குதுங்க! வெளங்கலன்னாளும் பராவால்ல!

டோனி கடைத்தெருவுக்குப் போறாரு. அங்க ஒரு கடையில ஒரு மக் பியர் ஒரு ரிங்கிட்னு போட்டிருக்கு. மனுஷன் ஆர்வமா கடைக்குள்ள நுழைறாரு.
                    
ஒரு மக்பியர் உண்மையிலியே ஒரு ரிங்கிட்டான்னு கேட்டாரு...

",யெஸ் சர்." என்றார் ஒரு அழகான பனணிப்பெண்.

ஒரு மக் பியர் வாங்கிட்டு  மேசைக்கு வந்து நாற்காலிய இழுத்து உட்காருகிறார்.

பணிப்பெண் வந்து," சர் உட்காரு இடத்துக்கு 2 ரிங்கிட் சார்ஜ்" என்றாராம்.

"ஓ அப்படியா," என்று 2 ரிங்கிட் கொடுத்தாராம்.

பிறகு தன்னுடைய மடிக்கணினியைத் திறந்து தன் பணிகளில் மூழக, மீண்டும் பணிப்பெண் சொன்னாராம், "சர் இங்க லேப் டோப் பாவிக்க 2 ரிங்கிட் கட்ட
ணம் சார்," என்றாளாம். மனுஷன் முனகிக்கொண்டே 2 ரிங்கிட் கொடுக்கிறார்.
பிறகு வைபை மூலம் இணையத்தைத் தொடக்குகிறார். மீண்டும் பணிப்பெண் வந்தாராம்.

"என்ன வைபைக்கு  2 ரிங்கிட்டா?" என்றாராம்.

"யெஸ் சர், " என்று கூறிக்கொண்டே 2 ரிங்கிட்டை வாங்கி விடுகிறார்.

இப்படித்தான் ஏர் ஏசிய  ஏறுவதற்கு முன்னாலும் பின்னாலும் பயணியை ஏர் உழுது  புரட்டி எடுத்து தோண்டி எடுத்துவிடுகிறது!

டோனி பெர்னாண்டஸ் ஐயா நீங்க மலேசியாவில் முதல் நிலை பணக்காரனாக என் முதற்கண் வாழ்த்துகள்! நம்ம ஆளுல்ல!

 ஐந்தேமுக்கால் மணி நேரத்தில் பெய்ஜிங் விமான நிலையத்தை அடைந்தோம். விமான சன்னல் கண்ணாடியைத் தொட்டுப் பார்த்தேன். சில்லிட்டிருந்தது.

விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் கிளியரண்ஸ் கஷ்டத்தில்தான் முடிந்தது. மலாய்க்காரர்கள் நிறைய பேர் சீனப் பயணத்தை மேற்கொண்டிருந்தடனர். எனக்குத் தெரிந்து சிலாங்க்கூர், பினாங்கு, ஜோகூர், கோலாலம்பூர் என் பல இடங்களிலிருந்து கூட்டங் கூட்டமாய் விமான நிலையத்தில் பார்த்தேன். அவ்விமானத்தில் முக்கால் வாசி இடத்தை அவர்களே பிடித்திருந்தனர். கொடுத்து வைத்தவர்கள்- அரசால்!
கஸ்டம்சில் ஒரு மலாய்கார வாலிபனை வெகு நேரம் துழாவித் துழாவி எதையோ கேட்டுக் கொண்டிருந்தனர்-புகைப்படத்தைப் பார்த்தவாறு!
என் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் என் தலை முடியும் மீசையும் இள'மை'யாக இருந்தது. வரும் அவசரத்தில் வெள்ளையைக் கருப்பாக்க மறந்திருந்தேன். அது செம்பட்டையாகவும், சில பல வெண்மையாகவும் நிறம் மாறிவிட்டிருந்தது. இந்த 'மசிரே' என்ன பிடிச்சு கொடுத்திரும்மோன்னு பயம் வந்துவிட்டது.....புது இடம்... நம்ம ஆளுங்க சீன சிறையில் கடத்தல் குற்றங்களுக்காக 'மோய்" (தமிழ் நாடுன்னா கலி) குடிக்கிறாங்கன்னு நம்வெளியுறவு துணை அமைச்சர் ......... பிள்ளை ஒரு கூட்டத்தில் சொன்னது நினைவுக்கு வந்து விட்டது.
" மாட்னா மவனே                         அவ்வளதாண்டா   .....ன்னு!"  நிறைய தமிழ் பட வீராவேச வசனக்கள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருமா....

                                      என் மனைவி, மருமகன், பேரப்பிள்ளைகள்
 
                                   என் கடைசி பேரப்பிளை விதுரனோடு என் மனைவி
                                                  என் மூன்று வாரிசுகள்
 
                                                 நவீனா என் முதல் பேத்தி

தொடரும்...... 

Comments

சுவாரஸ்யமாக இருக்கு சார்..
ko.punniavan said…
நன்றி விஜி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த