Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

2. காத்திருப்பு





மாலை ஆறரை மணிக்குத்தான் எங்களின் விமானப் பயணம் தொடங்கும். நானும் மனைவியும் (என் மனைவியும்) காலை 11.30க்கெல்லாம் கே.எல்.ஐ.ஏ விமானத்தளத்தில் வந்து இறங்விட்டோம். விமானம் ஏறும் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்    இளைய   மகன் முதல்நாளே கே,எல்லில் ஒரு திருமண நிகழ்வுக்கு
வந்துவிட்டிருந்தான்.  வந்த உடனே கூப்பிடுங்கள் , கே எல் பிரிக்பில்ஸில் பகலுணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விமானத் தளத்தில் விட்டுவிடுகிறேன் என்றான். அந்தத் திட்டம் சரியாக வராது. அவன் இருக்கும் இடத்திலிருந்து விமான நிலையத்துக்கு ஒன்றரை நேரப் பயணம். பயணத்துக்கே நேரம் ஓடிவிடும். அதனால் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். அங்கேயே பகலுணவு உண்டோம். இரண்டாம் தளத்தில் கொஞ்சம் மலிவாகத்தான் உணவு கிடைக்கிறது. ஆனால் பசிக்குச் சாப்பிடலாம். எனவே பசித்தவுடன் சாப்பிடுவதுதான் உணவைச் சுவையாக்கும் சமரச உத்தி.






அன்றைக்கு விமானத் தளத்தைக் கவனத்துடன் பார்வையிட்டேன். நான் ஓரிரு முறை வந்தபோது அதன் கட்டமைப்பு குழப்பமானதாகவே பட்டது. கொஞ்சம் நிதானித்துச் சுற்றிப் பார்த்தபோது குழப்பமெல்லாம் நாமே தகவமைத்துக்கொண்டது என்றே பட்டது. பதற்றமில்லாமல் அவதானித்தால் தெளிவான பார்வை கிட்டுகிறது.

மணி நான்குக்கெல்லாம் எங்களோடு பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவராக
வந்து சேர்ந்தார்கள்.
காலையில் குளித்துவிட்டு வந்தாலும். உடல் வியர்வையில் கச கசத்தது. விமானத்தில் நன்றாக உறங்குவதற்கு நான் கழிவறையிலேயே
குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தேன். கழிவறையில் குளிப்பதில் சற்று அடக்கம் இருக்கவேண்டும்.தலையில் ஊற்றும் நீர் அடுத்தடுத்த கழிவரைக்கு நகரும் சாத்தியம் அதிகம். சமதரை. கழிவறைக்கு வெளியேயும் தண்ணீர் தலை காட்டும், மற்றவர்
காலணியை நனைக்கலாம். கொக்கியில் தொங்கப்போட்ட ஆடைகள் தண்ணீர் சிதறி நனைந்தும் போகலாம்.








எப்படியோ குளித்துவிட்டு வெளியே வந்தேன் . யாரும் என்னை  விநோதமாகப் பார்க்கிறார்களா என்ற சந்தேகம். நான் அவர்களை ஏறிட்டுப் பார்த்தால்தானே ! தண்ணீர் நழுவுவதுபோல நானும் மெல்ல வெளியேறிவிட்டேன்.

செக் இன் கௌண்டரில் எல்லாரும் வரிசையில் நின்றிருந்தார்கள். என் மனைவியைக் காணோம். நான் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.
அவள் அதிகாரம், மிரட்டல், உருட்டலெல்லாம் வீட்டில்தான்.  வெளியே வந்தால் அதெல்லாம் எங்கே போய்விடுமென்ற மர்மம் புரியவில்லை. இனிமே என் ஆட்டம் தொடங்கி விடும். நான் வெளியில் புலியல்லவா! 

அவளை அழைத்துக்கொண்டு செக் இன் கௌண்டரில் பயணப்  பைகளைப் போட்டுவிட்டு விமானத்தை நோக்கி நடந்தோம்.

ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் கருமித்தனம், சுரண்டல் எல்லாம் மாஸ் விமான நிறுவனத்தில் கிடையாது. ஏர் ஆசியா விமானத்தின் இருக்கையில் அமர்ந்த பின்னர் கீழே விழுந்த எதையும் எடுப்பதுஇமசையாகிவிடும். பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரை உரசாமல் இடிக்காமல் பயணம் செய்வது முடியாத காரியம். அதிலும் உடல் கனத்த ஒருவர் அருகில் மாட்டிக் கொண்டால் அவரோடு நாமும் சேர்ந்து சிரமப் படவேண்டி வரும். குண்டானவர் கூண்டில் மாட்டிக் கொண்ட குருவியாகி விடுவார் இலக்கைப் போய்ச் சேரும் வரை பிரசவ வேதனைப் படுவார். அங்காடி வியாபாரமெல்லாம் விமானத்தின் உள்ளேயே நடக்கும். அப்புறம் ஏன் டோனி பெர்னாண்டஸ் மலேசியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வரமுடியாது?
 
 



தொடரும்........

Comments

MAS விமானத்திலும் இந்த இடிபாடு சிக்கல்கள் எல்லாமும் இருக்கே சார். மாஸில் இன்னும் மோசம், காதுகளைக் கிழித்துக்கொண்டு விமானம் பறக்கின்ற சத்தம் தலைவலினைக் கொடுக்கும். அனுபவப்பட்டதில்லையா?

வீட்டில் நீங்கள் பூனை. வெளியே புலியா? சிரிப்புதான் போங்க உங்களின் லொள்ளு..

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...