Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 20

ஜெர்மனியில் தவறுதலாக விடுதி முன்பதிவுசெய்து சுவிசர்லாந்தில் தேடிக்கொண்டிருந்தோம்.

மன்னிக்கவும் ..சியாசோவிலிருந்து காரில் பயணிக்கவில்லை. அங்கிருந்து லுகானோவுக்கு புல்லட் டிரேய்னில் வந்து அங்கிருந்தே காரை வாடகை எடுத்து சுவிசைச் சுற்ற ஆரம்பித்தோம். இந்த புல்லட் ட்ரேன் மிக நூதன வசதிகளைக் கொண்டது. அசைவு அறவே தெரியாமல் பறந்தது. லுகானோவில் விடுதி எடுக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து பயணிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.


சுவிஸ் மலைகளும், நீர்வீழ்ச்சிகளும் அழகிய பெரியகுளங்களும் அடர்ந்த ஊர்.
அந்நாந்து பார்த்தால் கூம்பு கூம்பாக முளைத்த பச்சை மலைகளும், அதற்கும் மேலே பனி படர்ந்து உலவும் மலை முகடுகள். முகடுகளை முக்காடிட்ட பனிப்படலங்கள்.மலைகளுக்கு கீழே பெரும் பெரும் ஏரிகள். பச்சை நிறத்தில் மனதைக் கவ்வும் நீர்த்தேக்கங்கள் நம்மை கண்மாறாமல் பார்க்க வைக்கின்றன. ஏரிகளைச் சுற்றி பெரும் பட்டினங்கள் எழும்பி இருக்கின்றன. எத்தனையோ 100 மைல்கள் பயணத்தில் நெடுக்க இதனைப் பார்க்க முடிகிறது. இதனை கிராமப் பகுதிகள் என்றே சொல்கிறார்கள். ஆனால் இங்கேதான் தங்கும் விடுதிகளும், உணவுக்கடைகளும். உல்லாச மதுக் கடைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு இடமும் பரபரப்பான உல்லாசத் தலங்களாகவே பார்க்கமுடிகிறது! இதனை எப்படி கிராமம் என்பது.


காரை  மருமகன் நம்பிக்கையோடுதான் செலுத்தினார் . அவர் அமெரிக்கா செல்லும்போதெல்லாம் சொந்தமாக கார் வாடகை எடுத்து ஓட்டிய அனுபவம் உள்ளவர். வலது பக்கம் செலுத்துவதௌ பழக்கத்தால் வருவதுதானே! ஆனால் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நமக்கும் அதுபோன்ற அனுபவம் வேண்டுமே.குறைந்தபட்சம் பக்கத்து இருக்கையில் அமர்ந்த அனுபவம். அது இல்லாதததால் பதட்டமாக இருந்ததது. திடீரென சரவணன் ஏன் வலது பக்கம் ஓட்டுறீங்க என்று பதட்டத்தில் பல முறை கேட்டுவிட்டேன். கார்கள் எதிரில் வந்து மோதிவிடும் என்று ரத்தத்தை உறையச் செய்தது. விபத்தை அனுபவிக்கும் ஒரு மனநிலை அது. மனம் தானே முதலில் நம்மைக் கொல்கிறது. ஒவ்வொரு முறையும் மருமகன் அமைதியாக சொல்வார். இடதுபுறம்தான் ஓட்டக்கூடாது என்று. சமிக்ஞை கொண்ட வளைவுகளில் இன்னும் குழப்பம். எதிரில் வரும் காரை இடதுபக்கம் போகவிட்டு நாம் வலது பக்கம் செலுத்தவேண்டும். மலேசியாவில் கார் ஓட்டும் நினைவு வந்து, ஐயோ என்னாகப்போகிறது என்று அச்சம் உண்டாகிவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்படிப் பல தருணங்களில் பதட்டமும் குழப்பமும் உண்டாகி வெளியே அழகிய காட்சிகளைக்கூட தவறவிட்டிருக்கிறேன்.
காரைக்கொடுக்கும் போதே சொந்தக்காரன் அதனை எல்லாப் புறத்திலிருந்து படம் பிடித்து பதிவு செய்து வைத்துக்கொண்டானாம். அதில் ஏகனவே உள்ள சின்னக் கீறல்களைத் தவிர புதியது ஏதும் இருந்தால் அதற்காக கொஞ்சம் அதிகமாகவே தண்டம் கட்டவேண்டும். ஆனால் கார் விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பு நேர்ந்தால் தணடம் இல்லை. இன்சூரன்ஸ் பார்த்துக்கொள்ளும். நம்மைப் பாதிக்காது. பார்க்கிங் தவறுகளை உடனடியாகப் பதிவு செய்துகொள்கின்றன பார்க்கிங் தளத்திலேயே உள்ள கருவி. சாலை பாதுகாப்பு காவலர் தேவையில்லை.அப்படியான தொழில் நுட்பம்.  வளர்ந்த நாடு அது.


ஒருமுறை என் மகன் அமெரிக்காவிலிருந்து மலேசியா வந்தபோது அவனுக்கு பார்க்கிங் தவறுக்கான தண்டம் கட்டச்சொல்லி கடிதம் வந்திருந்தது. அதனைக் கட்டவேண்டியதாயிற்று. அப்படிக் கறாறான சட்டம் அங்கே. இங்கே சிவப்பு நோட்டடைக் காட்டினால் நக்கிக்கூட எடுத்துக்கொள்ளவார்கள். இங்கே போதைப்பொருள் பழக்கம் முறியடிக்க முடியாமைக்குக்  காரணம் ஏன் என்று இந்த எடுத்துக்காட்டை வைத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும்.



சிவிஸ் நெடுக்க சொர்க்கபூமியோ என எண்ணவைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் போன நேரம் கோடைகாலம். ஆனால் ஆறு மணிக்குமேல் நல்ல குள்ராகவே இருந்தது. மலைத் தொடர்கள்,  அகன்று விரிந்து கைவிரிக்கும் நீர்த்தேக்கம், மலையிலிருந்து யாரோ நூலேணி இறக்கியது போன்ற நீரூற்று, கண்களில் குளுமையை நிரப்பும் பச்சைக் காடு, படுதா விரித்தது போன்ற புல்வெளி,என தகிப்பை விரட்டிவிட்டிருந்தது அதன்  நில அமைப்பு. இயற்கை நில அமைப்பில் ஏதும் சேதங்கள் ஏற்படுத்தாமல் இருந்தால் சிதோஷ்ண நிலைக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. மலைகளின் தாய்மை முலைகளைக் சிதைப்பதும், காடுகளைக் கற்பழிப்பதும், ஏரிகளை நிலப் பகுதியாக்குவதும் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பைக் கொண்டவந்துவிடும். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நிலக்கொந்தளிப்பான சுனாமியைப் பார்த்தும் நமக்கு புத்தி வரவில்லை! நம் நிலத்தாயின் பசுமையைப் பூணுவது சார்ந்த கற்பிதத்தை குழந்தைகளுக்கு உண்டாக்கும் பொறுப்பான தலைமுறை நாம்.

பசி எடுக்கவே எங்காவது பட்டினத்தில் நிற்கலாம் என்று தோணியது. அதற்காக லுசேன் நகருக்குள் காரைச் செலுத்தினோம். அப்போது மணி மூன்றிருக்கும். நகரம் சற்று ஓய்ந்து போயிருந்தது. கடைகள் மூடிக்கிடந்தன. நகரம் முழுதும் சுற்றியும் உணவுக்கடைகள் தென்படவில்லை. ஒரு தமிழ்ப்பெண்மணி சாலையில் நடந்துகொண்டிருந்தாள். போய் ஆங்கிலத்தில் கேட்டோம். அவர் அவர் நீங்கள் தமிழரா என்றார். அவர் இலங்கியிலிருந்து வந்தவர். இவரைப்போல நிறைய பேர் இருக்கிறார்களாம் அங்கே. உணவுக்கடை இன்னும் 2 மணிநேரம் கழித்துதான் திறக்கும் என்றார்.
எதிரே இந்தியக் கடைகள் கூட இருந்தன ஆனால் ஆறுமணிக்குத்தான் திறக்கும். ஆறு மணிவரை காத்திருந்து ஒரு சீன உணவகத்தில் சாப்பிட்டோம். நம்ம ஊர் மீ பிரட்டல் அங்கே 30 ரிங்கிட்டுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று. சாப்பிட்டு காரில் ஊர் சுற்றியதும்தான் தெரிந்தது இலங்கைத் தமிழர்கள் நிறைய பேர் கடை வைத்திருப்பது. சீன உணவகத்தில் உண்டதைவிட இங்கே பாதி விலைக்கு உணவு கிடைப்பது தெரியாமல் போனது!

லுசேனும் ஒரு பெரும் ஏரி சூழ்ந்த ஊர்தான். மாலை உல்லாசங்கள் தொடங்கிவிட்டிருந்தன. ஏரியில் உல்லாசப்படகுகள் மிதந்தன.மனிதர்கள் மெல்ல வர ஆரம்பித்தார்கள். அங்கே விடுதி எடுக்க மருமகன் இணையத்தில் அலசினார். பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் இன்னொரு 100கிலோ மீட்டர் தூரத்தில் மலிவான விலையில் விடுதி கிடைக்கும் என்று புக் செய்துவிட்டார். பின்னர் நாங்கள் விடுதி முன் பதிவு செய்து  பணமும் பட்டுவாடா செய்துவிட்டார். அந்த ஊர் இன்னும் 50 கிலோமீட்டர் போகவேண்டும். காரை எடுத்துக்கொண்டு பயணமானோம். இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. சாலையில் வாகனங்கள் அருகிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் எங்களைத் தவிர வேறு எந்த வாகனத்தையும் சாலையில் காணவில்லை. இரவின் பயம் எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.  ஒருவழியாக அந்த ஊரைப் போய்ச் சேர்ந்தோம்.
அங்கே போனவுடன்தான் தெரிந்தது அதே பெயர் கொண்ட ஊர் ஜெர்மனியில் இருக்கிறதென்று. ஜெர்மனியில் விடுதி முன்பதிவு செய்திருக்கிறோம். கட்டிய பணம் காலி.
மீண்டும் இன்னொரு விடுதியை முன்பதிவு செய்து பயணிக்கத் தொடங்கினோம்.வெளிச்சூழலின் ரம்மியம் இருளில் மறைந்துகொண்டிருந்தது.






தொடரும்.......



Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...