Skip to main content
இறுக்கமாக

பூட்டப்பட்ட

எல்லாகதவுகளின்\

எல்லாச்சாவியையும்

அவனே வைத்துக்கொள்கிறான்

துவாரத்தின் வழியே

சிறியா கீற்றிலிருந்தாவது

கவிதை கசிகிறதா

என்ற நப்பாசையில்

நம்பிக்கயான தருணத்தில்

பூட்டுகள் தெறிக்கின்றன

இன்பம் சுகித்தவாறு.

Comments

Se.Gunalan said…
varalaadru pathivu intah aaivau kaddurai. nandu innum niraya segarithu varayappadumaanal innum seithigal segarikkappadum vaazthukkal KOPUNNIAVAAN AVARGALE nanri
ko.punniavan said…
உங்கள் கருத்துக்கு நன்றி. இக்கட்டுரைக்கான நேர ஒதுக்கீடு 20 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதனால் நிறைய தகவல்கள் எழுத முடியவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாக எழுதலாம்.என் வலைப்பூவுக்கு தவராமல் வருகை தரும் உங்களுக்கு நன்றி.
Se.Gunalan said…
kaathal,karppu,veeram,poor,naadu,inam,makkal ithil yentha suzalaaga irunthaalum navinakkavithaigal oru thaakkathai undu pannaathu yendu navinathai puraddiyappin purinthukonden,ezathu kavithaigalai uthaaranam kaadda vhendaam athu thiagathil iruthu velippadum puthuk kavithaigal.
ko.punniavan said…
புதுக்கவிதைகள் வந்த புதிதில் அதன் பாடுபொருள் சமூக அவலங்களின் வெளிப்பாடாக புனையப்பட்டது. சாதிமை,முதலாளித்துவம், சுரண்டல், மார்கிசியம், பெண்ணியம், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வன்கொடுமை, ஏழைமை போன்ற பாடுபொருள்கள் கையாளப்பட்டன.அது சாதாரண வாசகன் மனதையும் பாதித்தது. மக்களைப்போய்ச் சேர்ந்தது என்பதுதான் மிகப்பெரிய வெற்றி. புதுக்கவிதையின் பாய்ச்சல் வேறு எந்த இலக்கிய வடிவமும் கண்டிராத ஒன்று.குறுகிய காலத்தில் அதன் தாக்கம்
இலக்கிய உலகை ஆட்சி செய்தது உண்மைதான். ஆனால் எல்லா இலக்கிய வடிவத்துக்கும் நேர்ந்த வடிவமாற்றமும் உள்ளீட்டின் மாற்றமும் இதற்கும் உண்டானது இயற்கையின் நியதி. இன்றைக்கு வேறு வடிவத்தில் வேறு பாடுபொருளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது இலக்கியம். அவ்வளவுதான். இதுவும் மாறும். எல்லாமே மாற்றத்துக்கு உட்படுவதுதான் நிதர்சனம்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின