Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்



முத்தம் 1.
என் மருமகனும் மகளும்

ஐரோப்பிய பயணம் தொடர்பாக எங்களுக்கு எந்த முன் திட்டமும் இல்லை. விமான டிக்கெட்டுகளை மட்டும் முன் பதிவு செய்திருந்தார் என் மருமகனார்.(ஐரோப்பிய பயணத்தை நேர்த்தியாக செய்து முடித்திருந்ததால் இநத 'னார்'.) மற்றபடி அங்கே போனதும்தான் மற்ற ஏற்பாடுகள் எல்லாம். ஆண்டு தொடக்கத்தில் பஹாருடின் பயண நிறுவனத்தோடு போகலாம் என்றே குடும்பத்தில் அறுவர் முன்பணம் செலுத்தியிருந்தோம். என் மகன், மருமகள், என் மகள், என் மருமகனார், என் தர்ம பத்தினி, நான் ஆகியோர் அந்த அறுவர். பஹாருடின் பயண நிறுவனம், பயணிகள் போதாமையால் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். ஆனாலும் என் மகள் விடுவதாயில்லை. பயணம் செய்யலாம் என்ற மனநிலையிலேயே நிலைத்துவிட்டிருந்தாள். நாம் சொந்தமாக ஏற்பாடு செய்யலாம் என்றே வலியுறுத்து வந்தார். எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. பஹாருதின் விதித்த அதே தொகையில் போய்வர ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஐரோப்பாவில் எல்லாமே நேரப்படி நடந்தேறும். தொல்லைகள் இல்லாத நாடு, அங்கே பொதுப் போக்குவரத்து குறையில்லாமல் நடக்கும்., என்றெல்லாம் என்னைக்  கவரப் பார்த்தார்கள். நான் வரவில்லை என்றேன். அவர்கள் விடுவதாயில்லை.
என் மனைவிக்கு போகவேண்டும் என்ற ஆசை. அவளும் என்னை இழுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தாள். நான் அதற்கும் இசையவில்லை.

நான் மறுத்தற்கு ரகசியக் காரணங்கள் இருந்தன. எம் எச் 370 காணாமற்போய் இன்றைய தேதிவரை ஒரு தகவலும் கிடைக்காதது ஒரு காரணம் என்றால் , இன்னொரு மாஸ் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது மேலுமொரு காரணம். 'நம்ம போற கப்பைய சுட மாட்டாய்ங்கனு  என்ன நிச்சயம்?  இப்போதுள்ள ராணுவத்தினர்  பாவிக்கின்ற ஏவுகனை வளைஞ்சி நெளிஞ்சி எங்க போனாலும் விடாம விரட்டிக்கிட்டே வந்து சுடுமாம். அது விமான இயந்திரத்தின் வெப்பத்தை உணர்ந்து பின்தொடர்ந்து வருமாம். அதிலிருந்து தப்பிக்க விமான இயந்திர இயக்கத்தை நிறுத்திவிடவா முடியும்?   எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க! லைசன்ஸ் இல்லாத நாய்களைச்  சுடுறமாதிரி, சுட்டு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்காய்ங்க! சொந்தக் காசுலியே ஏன் சூன்யம் வச்சிக்கணும்?
எங்கள் பயணத் தொடரில்
சுவிட்சர்லாந்தில் கோடை காலத்திலும் பனிமலைகள்
ஆறு  முறை விமானத்தில் பறக்கும் ஏற்பாடு செய்துவிட்டிருந்தது வேறு பீதியைக் கிளப்பி விட்டிருந்தது!


ஒரு நாள் என் மருமகன் 'ஏன் நீங்க வரல? என்ன காரணம் ? என்றார் . நான் தூக்கம் கெட்டுப் போகும். இப்போதே என் தூக்க நேரம் தள்ளிக்கொண்டே போகிறது. மணி 3.00க்குத்தான் தூக்கமே வருகிறது என்று சொன்னேன். அந்நிய செலவானிக்கு நமக்கு கட்டுப்படியாகாது என்றும் சொன்னேன்.பஹாருடின் பயண நிறுவனம் கேட்ட அதே தொகையில் செய்து முடிக்கலாம் என்று உறுதி யளித்தார். அதோடு என் மனைவியும் "போய்ட்டுவரலாமே என்று மந்திரக் கோலின் அசைவுக்கு ஆட ஆரம்பித்தாள்' . அவளை மந்திரித்து விட்டது யார் என்று உங்களுக்கும் தெரியும்.

'சரி போகலாம்'  என்று சொன்னேன். என் மகனும் மருமகளும் வரமுடியாத நிலைக்கு ஆளாகியிருந்தார்கள். ஆமாம் மருமகள் இன்னொரு குழந்தைக்கு பேறு பெற்றிருந்தாள்.

எனக்குள் பயணப் பர பரப்பு தொடங்கியிருந்தது. முடிக்க வேண்டிய  வேலைகள் நிறைய கண் முன் நின்றன.  இரண்டு இடங்களில் நூல் வெளியீட்டு வேலைகள் கனமாய்த் தெரிந்தது. சுங்கைப்பட்டாணியில் எல்லாவற்றையும் நானே செய்தாகவேண்டும். சித்தியவானில் என் மைத்துனர் மாரிமுத்து ஏற்பாடு செய்து வந்தார். கட்டவேண்டிய வீட்டு மின்சார, தண்ணீர், தொலைபேசி, நகராண்மை, பயணத்துக்கு பணம் அனுப்புதல். மும்பாயில் தரையிறங்க விசாவுக்கு மனு செய்தல், பயண ஏற்பாடு  என தலைக்குமேல் வேலைகள் நிறைந்துவிட்டன. ஒரு வித யோகப் பயிற்சி செய்து வருவதால் நான் ஏற்கனவே இரண்டு கிலோ இறங்கியிருந்தேன். இப்போது இந்த சுமை வேறு. அவை எல்லாவற்றையும் விட யூரோ, பிராங்ஸ், பவுன் ஸ்டெர்லிங் பணமாற்றம் ரேட் வயிற்றைக் கலக்கியது. இருதயம் முறையாக இயங்குகிறதா என்ற அச்சம் வந்துவிட்டது. பக்கத்து வீட்டு டாக்டரிடம் ஸ்டெரெஸ் பரிசோதனைக்கு மருத்துவ மனையில் ஏற்பாடு செய்யச்சொல்லியிருந்தேன். அவர் என்னை சில உடல் ஆரோக்கியம் சார்ந்து சில கேள்விகள் கேட்டு 'சார் உங்களுக்கு வெறும் தசை நார் வலிதான் " என்றார். பரவாயில்லை ஸ்ட்ரெஸ் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். மறுநாள் அவரும் என் பரிசோதனைக்கு ஒரு தேதி   ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தார். அந்நாள் நாங்கள் ஐரோப்பாவுக்குக் கிளம்பும் நாள்.
இல்லை டாக்டர் முடியாது என்றேன். நீங்கள் போய்ட்டு வாங்க அப்புறம் செய்யலாம் என்றார்.
கே எல் ஐ  ஏ இரண்டில்
அந்நியச் செலவாணியில் பணமாற்று விகிதக் கணக்கைக் கேட்டுப்பார்த்தேன். ஒரு யுரோவுக்கு  4  மலேசியா ரிங்கிட். ஒரு பிராங்க்குக்கு கிட்டதட்ட அதே விலை.ஆனால் ஒரு பவுன் ஸ்டெர்லிங்கின் விலை 5 ரிங்கிட் 60 சென்.
இதயம் தாங்குமா? தாங்குறதுக்குதான் வயசுதான் இருக்கா?
நம்ம பணம் மட்டும் ஏன் இறங்குமுகமாகவே இருக்கிறது. சிங்கை டாலர் பாருங்க நாளுக்கு நாள் எகிறுகிறது.

நாங்கள் சுங்கைப் பட்டாணியிலிருந்து கே எல் ஐ ஏவுக்கு காரிலேயே போவதாகத் திட்டம். திரும்பும் நேரம் சில தாமதங்களால் இடையூறு நேரலாம் என்பதால் . பினாங்கிலிருந்து விமானப்பயணம் மேற்கொள்ளவில்லை.  கே எல் ஐ ஆவிலிருந்து அபு டாயில் தரை இறங்கி ,மூன்று மணி நேரம் கழித்து ரோமுக்கு பயணமாகி, மீண்டும் இரண்டு மணி நேர இடைவெளியில் ஸ்பேய்ன் பார்சிலோனாவில் இறங்கி, இரண்டு நாட்கள் கழிப்பதாக ஏற்பாடு. விமானப் பயண நேரம் மட்டுமே கிட்டதட்ட 12 மணி நேரம்.

                            ஸ்பேய்ன் பார்சிலோனா நகரில் மகளின் traffic offence

தொடரும்.....


Comments

வாவ்வ்வ் ஜாலிதான். கலக்குங்க சார். வயசு தளர்ச்சி நோய் அப்படி இப்படி என்கிறீர்கள் ஆனால் உஙக்ளைப் பார்க்க நாற்பதைத் தாண்டியதுபோலவே இல்லையே.! உண்மை சார். பொய்யுரைக்கவில்லை.
அடுத்து அடுத்து படிக்க தயாராகி விட்டேன். ஐரோப்பா பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை.உங்கள தொடர் மூலம் பார்த்துடுறேன்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின