Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 22

சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம்.

தில்த்திஸ் மலையின்  உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம்.

சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது.  ஏஞ்ஜல்  பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக  நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி  சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.



கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில் இறங்கிய போதே குளிர் ஆறாயிரம் ஊசிகள் கொண்டு செருகவதாக இருந்தது.10,000 அடி உயரத்தை அடையும்போது 10000 ஊசிகொண்டு தாக்குவதாக இருக்கும்.அல்லது அதற்கும் மேலும். சைபர் டிகிரி செல்செயஸ் என்பதே கடுங்குளிர்தான். நான் சீனாவில்  மைனஸ் 5 வரை குளிர் அனுபவித்தேன். அப்போது அங்கே குளிர்காலம். அதற்கும் கீழே போகும் போது பனி உறையத் தொடங்கும். சாலைகளைப் பனிமூடிவிடும். வெளியில் செல்வதே சிரமமாக இருக்கும்.

சுற்றுலா பயணிகளில் காபில் காரில் ஏறி இறங்க உதவ ஒரு பணிப்பெண்ணை சந்தித்துப்பேசினேன். அங்கே அவள்  கோடைகால விடுமுறையில் வேலை செய்ய ஜெர்மனியிலிருந்து வந்தவள். ஜெர்மனியில் அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் ஒருநாள் வருமானம் 300 மலேசிய ரிங்கிட்.  தனுடைய ஒராண்டுக்கான கல்விச்செலவை ஒரு கோடை விடுமுறையில் சம்பாதித்து விடுவாளாம்.

கேபில் காரின் உள்ளே பணிப்பெண்
கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்தது கேபில் கார்.
இறங்கிய உடனே பனிமலைக்குப் போனோம். பனி பூப்போல கொட்டிக்கொண்டு இருந்தது. போகும் பாதையில்தான் சாருக்கானையும் கஜோலையும் பார்த்தோம். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அட சாருக் கான். நாங்கள் அவரிடம் பேசவில்லை. பேசும் நிலையிலும் இல்லை. இருவருமே போஸ் கொடுப்பதில் ரொம்ப பிசியாக இருந்தார்கள். போவோர் வருவோர் எல்லாம் படம் பிடித்துக்கொண்டிருந்தால் பிசி என்றுதானேஅர்த்தம். யாரோடும் அவர் பேசாததற்குக் காரணம் அவரும் காஜோலும் கட்டவுட்டாக வைக்கப்பட்டிருந்ததே காரணம்!!

ஹி ஹி ஏமாந்துட்டீங்களா?

மலை முழுக்க வெண்பனி மூடிக்கிடக்கிறது. பெரியவர்கள் குழந்தைகள் பனிப்பூவை உருட்டி ஒருவர் மேல் ஒருவர் எறிகிறார்கள். சருக்கி விளையாடுகிறார்கள்.
அநத தளத்திலேயே ஐஸ்கட்டியின் மேல் நடக்கும் இடத்தையும், ஒரு குகையினுள் 50 மீட்டருக்கு  நடந்து செல்லும் வசதியையும் செய்து கொடுத்த்ருக்கிறார்கள். பயங்கரமாக வழுக்குகிறது. போகப் போக குளிர் சரம்மாறியாகாக் குத்துகிறது. ஒரு கட்டத்தில் திரும்பிவிடலாமே என்று நினைத்தேன்.  அது ஒரு வட்டம் தொடங்கிய இடத்தின் வேறு வாசலுக்கு வந்துவிடுகிறோம்.
குகையினுள் எல்லாபுறத்திலும்  ஐஸ்  கூடிக்கிடக்கிறது. நானும் என் மனைவியும்.
ஐஸ் குகைக்குப் போகுமுன்






















லுசேனோ நகர் வீதி

லுசேனோ ஏரிக்கறை



Add caption












வெளியே வருவதற்குமுன் குளிருலிருந்து தப்பித்தால்போதும் என்றாகி விடுகிறது.

மீண்டும் கீழே இறங்கி  30 நிமிட தூரத்திலுள்ள ரிஹியான போல்ஸ் (நீர்வீழ்ச்சிக்குக்) கிளம்பினோம்.

தொடரும்....

Comments

Anonymous said…
very nice artical
வணக்கம்
ஐயா.

அழகிய படங்கள் ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...